செய்திகள் :

பாகிஸ்தான்: பலுசிஸ்தான் விடுதலைப் படையை தீவிரவாத அமைப்பாக அறிவித்த அமெரிக்கா!

post image

பாகிஸ்தானில் செயல்படும் பலுசிஸ்தான் விடுதலைப் படை (Balochistan Liberation Army (BLA)) என்ற அமைப்பை தீவிரவாத அமைப்பாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது அமெரிக்கா.

மஜீத் படைப்பிரிவு என்ற அமைப்பும் இதில் அடங்கும். இந்த அமைப்பு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு (FTO) மற்றும் உலகளாவிய பயங்கரவாதி (SDGT) ஆகிய பிரிவுகளில் சேர்க்கப்பட்டுள்ளது.

ரூபியோ

2019ம் ஆண்டு முதல் மஜீத் படைப்பிரிவு மற்றும் சில குழுக்கள் நடத்திய தாக்குதல்களுக்கு பலுசிஸ்தான் விடுதலைப்படை பொறுப்பேற்று உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்திருக்கிறார்.

பலுசிஸ்தான் விடுதலைப் படை நீண்ட நாட்களாக அமெரிக்காவால் ஆராயப்பட்டு வந்தது. 2019 முதல் தற்கொலை குண்டுவெடிப்புகள் மற்றும் உயர்மட்ட நபர்கள் மீதான தாக்குதல்கள் உட்பட பல தீவிரவாத நடவடிக்கைகளுக்கு அந்த அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

கடந்த மார்ச் 2025ல் பலுசிஸ்தான் ராணுவம் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலைக் கடத்தி 300 பயணிகளை பணயக் கைதிகளாக வைத்திருந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு பாதுகாப்பு அதிகாரி மற்றும் 31 பயணிகள் உயிரிழந்தனர்.

இது போன்ற நடவடிக்கைகள் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் பாகிஸ்தான் அரசின் ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்காவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பலுசிஸ்தான் கொடி
பலுசிஸ்தான் கொடி

பலுசிஸ்தான் விடுதலைப்படையின் கோரிக்கை

BLA 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தான் அரசுக்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டுள்ளது. பலுசிஸ்தான் மாகாணத்தைத் தனி நாடாக அறிவிக்க வேண்டுமென்பதே அவர்களின் உச்சபட்ச கோரிக்கை.

1948ல் பலுசிஸ்தான் வலுக்கட்டாயமாக பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டதாகவும், இங்குள்ள எண்ணெய், கனிம வளங்கள் பாகிஸ்தான் அரசால் சுரண்டப்படுவதாகவும் குற்றம்சாட்டி வரும் இந்த அமைப்பு, பலூசிஸ்தானின் சில மாவட்டங்களை ஆட்சி செய்வதாக அறிவித்திருக்கிறது.

அமெரிக்கா பாகிஸ்தான் நெருக்கம்!

கடந்த ஜூலை 31, 2025ல் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் பாகிஸ்தானில் அமெரிக்கா உதவியுடன் எண்ணெய் வளங்களை ஆராயவும் மேம்படுத்தவும் உடன்படிக்கை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அதிக எண்ணெய், கனிம வளம் கொண்ட பலுசிஸ்தானில் இந்த ஆய்வுகள் நடக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையேயான நெருக்கம் அதிகரித்திருக்கிறது. "இந்தியா பாகிஸ்தானிடமிருந்து எண்ணெய் வாங்கும் நிலை ஏற்படலாம்" என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியதையும் நினைவில் கொள்ளலாம்.

Stray Dogs: "தெரு நாய்களை வெளியேற்றுவது இரக்கமற்றது" - உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ராகுல் கண்டனம்

தெரு நாய்க்கடி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.நேற்றைய விசாரணையில், "டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உடனடியாக ஒரு தெருநாய் விடாமல... மேலும் பார்க்க

தாயுமானவன் திட்டம்: "விஜயகாந்த்தின் கனவை நிறைவேற்றியிருக்கிறார் ஸ்டாலின்" - பிரேமலதா நெகிழ்ச்சி

தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்துக்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் 'தாயுமானவர் திட்டம்’ இன்று முதல்வர் ம... மேலும் பார்க்க

"இந்தியா மீதான வரிவிதிப்பால் ரஷ்ய பொருளாதாரம் கலக்கம்" - ரஷ்யா குறித்து ட்ரம்ப்!

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50% வரி, ரஷ்யாவின் பொருளாதாரத்தைக் கடுமையாக பாதித்துள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் பேசியிருக்கிறார். வெள்ளை மாளிகையில் உரையாற்றிய அமெரிக்க அதிபர், உலகளாவிய அழுத்தங்களும் மற... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: "எங்கள ரோட்ல போட்டுட்டு கியூபாவுக்காகப் பேசுறாரா ஸ்டாலின்" - சீமான்

சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணிகளை தனியாருக்குத் தாரைவார்ப்பதை எதிர்த்தும், 'தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வோம்' என்ற தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும் சென்னை மாநகரா... மேலும் பார்க்க

'அசிம் முனீர் ஒரு கோட் சூட் அணிந்த ஒசாமா பின்லேடன்!' - முன்னாள் அமெரிக்க அரசு அதிகாரி சாடல்

'எங்களது இருப்பிற்கு அச்சுறுத்தல் வந்தால், பாதி உலகையே அழித்துவிடுவோம்' என்கிற பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீரின் பேச்சுக்கு எதிர்வினையாற்றி இருக்கிறார் முன்னாள் பென்டகன் அதிகாரி மைக்கேல் ரூபின்.... மேலும் பார்க்க