செய்திகள் :

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர்: ஆக. 18-ல் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை

post image

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு குறித்து ஆகஸ்ட் 18 ஆம் தேதி இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆலோசனையின்போது, குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் குறித்து இந்தியா கூட்டணி தலைவர்களுடன் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே பேசுவார் எனத் தெரிகிறது.

குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தக்னர் தனது பதவியை கடந்த சில நாள்களுக்கு முன்பு ராஜிநாமா செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து அடுத்த குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், வேட்புமனுக்களை ஆகஸ்ட் 21ஆம் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கு மறுநாள் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும்.

குடியரசு துணைத் தலைவர் போட்டிக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை திரும்ப பெற ஆகஸ்ட் 25 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, செப்டம்பர் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க | தேர்தல் ஆணையத்தால் உயிரிழந்தவர்களாக குறிப்பிடப்பட்ட நபர்கள் நேரில் ஆஜர்: உச்ச நீதிமன்றத்தில் அதிர்ச்சி!

The INDIA bloc leaders' meeting is likely on August 18 to discuss the candidate for the Vice Presidential election

மாநிலங்களவையிலும் வருமான வரி மசோதா-2025 நிறைவேற்றம்!

புது தில்லி: ’வருமான வரி மசோதா 2025’ மாநிலங்களவையில் இன்று(ஆக. 12) நிறைவேற்றப்பட்டது.‘இந்தப் புதிய மசோதா வருமான வரிச் சட்டம் 1961-க்கு மாற்றாக இருக்கும்’ என்று மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் இரு மசோதாக்கள்!

விளையாட்டு வீரர்களின் நலன்களை முதன்மைப்படுத்தும் வகையிலான தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா 2025 மாநிலங்களவையில் இன்று (ஆக. 12) நிறைவேற்றப்பட்டது.இந்திய விளையாட்டு நிர்வாகத்தில் இதுவொரு வரலாற்றுச் சிறப்ப... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையத்தால் உயிரிழந்தவர்களாக குறிப்பிடப்பட்ட நபர்கள் நேரில் ஆஜர்: உச்ச நீதிமன்றத்தில் அதிர்ச்சி!

பிகாா் மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்குத் திருட்டுக்கு எதிா்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வலிமையாக குரல் எழுப்பி வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இன்று(ஆக. 12) அதிர... மேலும் பார்க்க

“தேர்தல் ஆணையம் அல்ல; தேர்தல் திருடன்!” -ஆர்ஜேடியின் பகிரங்க விமர்சனம்!

இந்திய தேர்தல் ஆணையத்தை ‘இந்திய தேர்தல் திருடன்!’ என்று ஆர்ஜேடி கட்சி எம்.பி. சஞ்சய் யாதவ் விமர்சித்துள்ளார்.பிகாரில் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம... மேலும் பார்க்க

வாக்காளர் பட்டியல் முறைகேடுக்கு எதிராக பிரசாரம்: காங்கிரஸ் ஆலோசனை!

வாக்காளர் பட்டியல் முறைகேடு மற்றும் தேர்தல் மோசடிக்கு எதிராக தேசிய அளவில் பிரசாரத்தில் ஈடுபடுவது தொடர்பாக காங்கிரஸ் கட்சி இன்று (ஆக. 12) ஆலோசனையில் ஈடுபட்டது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைம... மேலும் பார்க்க

உலகின் டாப்-20 கோடீஸ்வரர்கள்: அதானிக்கு மீண்டும் இடம்!

உலகின் முதல் 20 பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் கௌதம் அதானி மீண்டும் இடம்பிடித்துள்ளார்.ப்ளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் குறியீட்டின்படி, அதானியின் சொத்துமதிப்பு 79.7 பில்லியன் டாலராக உள்ளது. பங்குச்சந்தையி... மேலும் பார்க்க