செய்திகள் :

ஆயில் இந்தியா லாபம் 1.4% ஆக உயர்வு!

post image

புது தில்லி: எண்ணெய் விலை சரிந்ததால், ஜூன் முடிய உள்ள காலாண்டில் அதன் நிகர லாப வளர்ச்சி கிட்டத்தட்ட நிலையாக இருந்ததாக அரசுக்குச் சொந்தமான ஆயில் இந்தியா லிமிடெட் இன்று தெரிவித்தது.

ஏப்ரல் முதல் ஜூன் வரையான மாதத்தில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.2,046.51 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ.2,016.30 கோடியாக இருந்தது.

ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலகட்டத்தில் ஆயில் இந்தியாவின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 1.4 சதவிகிதம் அதிகரித்து ரூ.2,046.51 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது ரூ.2,016.30 கோடியாக இருந்தது என்றது நிறுவனம்.

கச்சா எண்ணெய் விலை சரிவு ஏற்பட்டதன் காரணமாக, கடந்த ஆண்டு ரூ.1,466.84 கோடியாக இருந்த நிகர லாபம் ரூ.813.48 கோடியாகக் குறைந்தது. 2025ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் பீப்பாய்க்கு 84.89 அமெரிக்க டாலரிலிருந்து 2026 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் பீப்பாய்க்கு 66.20 டாலராகக் குறைந்தது. இது 22 சதவிகிதம் குறைவு.

ஏப்ரல் முதல் ஜூன் வரையான மாதத்தில் 1.680 மில்லியன் டன் எண்ணெய் மற்றும் எரிவாயுவை உற்பத்தி செய்தது எண்ணெய் நிறுவனம். இதுவே கடந்த ஆண்டு 1.689 மில்லியன் டன்னாக இருந்தது.

ஆயில் இந்தியா லிமிடெட்டின் துணை நிறுவனமான நுமலிகர் சுத்திகரிப்பு நிறுவனம் அதன் கச்சா உற்பத்தியை கடந்த ஆண்டு 7,64,000 டன்களிலிருந்து, முதலாவது காலாண்டில் 7,99,000 டன்களாகத் தக்க வைத்துக் கொண்டது.

இதையும் படிக்க: பொதுத்துறை வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு கட்டணம் நீக்கம்: நிதி அமைச்சகம்

State-owned Oil India Ltd reported an almost flat net profit growth in the June quarter as oil prices fell.

பொதுத்துறை வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு கட்டணம் நீக்கம்: நிதி அமைச்சகம்

புதுதில்லி: பெரும்பாலான பொதுத்துறை வங்கிகளின் உள்ள சேமிப்பு வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச மாதாந்திர இருப்பு கட்டணங்களை நீக்கியுள்ளன என்றார் நிதித்துறை இணை அமைச்சரான பங்கஜ் சௌத்திரி.சேமிப்பு கணக்கில்... மேலும் பார்க்க

பொதுத்துறை வங்கிகள் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5.82 லட்சம் கோடி கடன்கள் தள்ளுபடி!

புதுதில்லி: கடந்த ஐந்து நிதியாண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் சுமார் ரூ.5.82 லட்சம் கோடி வாராக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.2024-25 ஆம் ஆண்டில், பொதுத்துறை வங்... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.87.72 ஆக நிறைவு!

மும்பை: உள்நாட்டு பங்குச் சந்தைகளில் எதிர்மறையான போக்கு நிலவிய நிலையில், செவ்வாய்க்கிழமை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறுகிய வரம்பில் ஒருங்கிணைந்து 3 காசுகள் உயர்ந்து ரூ.87.72 ஆக ந... மேலும் பார்க்க

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் நிறைவு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட், எஃப்எம்சிஜி மற்றும் நிதித்துறையில் ஏற்பட்ட விற்பனை அழுத்தம் காரணமாக நிஃப்டி 50 பங்குகள் 24,500 புள்ளிகளுக்குக் கீழே சரிந்து முடிவடைந்தன.நிலையற்ற வர்த்தகம், ... மேலும் பார்க்க

சுதந்திர நாளையொட்டி ஃபிளிப்கார்ட்டில் தள்ளுபடி விற்பனை! சலுகைகள் என்னென்ன?

ஃபிளிப்கார்ட் இணைய விற்பனை தளத்தில் சுதந்திர நாளையொட்டி ஆக. 13 முதல் 17ஆம் தேதி வரை சிறப்புத் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்கள், மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோகப் பொரு... மேலும் பார்க்க

கேமரா பிரியர்களுக்காக... விவோ வி 60 அறிமுகம்!

விவோ வி60 என்ற புதிய ஸ்மார்ட்போனை விவோ நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஸ்மார்ட்போனில் கேமராவை அதிகம் விரும்புபவர்களுக்கான விருப்பத் தேர்வாக விவோ வி60 இருக்கும் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரி... மேலும் பார்க்க