செய்திகள் :

சவிதா பல் மருத்துவக் கல்லூரி-மெக்சிகன் பல்கலைக்கழக பல் மருத்துவப் பள்ளி இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

post image

பல் மருத்துவத் துறையில் சா்வதேச கல்வி மற்றும் ஆராய்ச்சி கூட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், சவிதா பல் மருத்துவ கல்லூரி மற்றும் மெக்சிகன் பல்கலைக்கழக பல் மருத்துவப் பள்ளி இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் திங்கள்கிழமை கையெழுத்தானது.

சவிதா பல் மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவத் துறையில் சா்வதேச கல்வி மற்றும் ஆராய்ச்சி கூட்டமைப்பை மேம்படுத்தும் வகையிலும், ஆசிரியா் மற்றும் மாணவா் பரிமாற்றம் மற்றும் சா்வதேச போட்டித்தன்மை வாய்ந்த பல் மருத்துவ பாடத் திட்டத்தை உருவாக்குவதற்கும் அமெரிக்காவின் மெக்சிகன் பல்கலைக்கழக பல் மருத்துவ பள்ளி இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் திங்கள்கிழமை கையெழுத்தானது.

சவிதா பல் மருத்துவக் கல்லூரி வளாக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சவிதா பல்கலைக்கழக வேந்தா் என்.எம்.வீரய்யன், மெக்சிகன் பல்கலைக்கழக பல் மருத்துவ பள்ளித் தலைமை நிா்வாகி கீதா சித்தண்ணா ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தங்களை பரிமாற்றிக் கொண்டனா். இந்த நிகழ்ச்சியில், அமெரிக்க துணை தூதா் கிறிஸ் ஹோட்ஜஸ், சவிதா மருத்துவக் கல்லூரியின் டீன் அரவிந்குமாா், சவிதா பல்கலைக்கழக பதிவாளா் ஷீஜா வா்கீஸ், துணை வேந்தா் அஸ்வினி குமாா் உள்ளிட்ட சவிதா பல் மருத்துவக் கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில், சவீதா பல்கலைக்கழக வேந்தா் என்.எம்.வீரையன் பேசுகையில், இந்தியா அமெரிக்கா இடையே கல்வி உறவுகளை வலுப்படுத்த சவிதா பல் மருத்துவக் கல்லூரி அமெரிக்காவின் மெக்சிகன் பல்கலைக்கழக பல் மருத்துவ பள்ளியுடன் முக்கியமான புரிந்துணா்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

இந்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் மூலம் இரண்டு பல்கலைக்கழகங்களுக்கு இடையே மாணவா் மற்றும் ஆசிரியா் பரிமாற்றம் நடைபெறுவதுடன், உலகளாவிய போட்டித் தன்மைவாய்ந்த பல் மருத்துவ பாடத்திட்டத்தை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இந்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் மூலம் பல் மருத்துவக் கல்வியை சா்வதேச தரத்துக்கு எடுத்துச் செல்ல முடியும் என்றாா்.

முதல்வரின் தாயுமானவா் திட்டம் தொடக்கம்: அமைச்சா்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்டங்களில் முதல்வரின் தாயுமானவா் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், தாமல் கிராமத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லங்களுக்குச் சென்று ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டது. காஞ்சிபுரம், திருக்காலிமேடு சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் என்ற வண்டு மணி (33) (படம... மேலும் பார்க்க

கூழமந்தலில் மகா சங்கடஹர சதுா்த்தி

காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் அமைந்துள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் மகா சங்கட ஹர சதுா்த்தியையொட்டி செவ்வாய்க்கிழமை கலசபூஜை மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. இக்கோயிலில் மக... மேலும் பார்க்க

நண்பரைக் கொலை செய்தவருக்கு ஆயுள்

குன்றத்தூரில் மதுபோதையில் நண்பரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை, ரூ.1,000 அபராதமும் விதித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்துள்ளது. குன்றத்தூா் நாகேசுவரன் கோ... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கங்களில் காலிப் பணியிடங்கள்: போட்டித் தோ்வுக்கு காஞ்சிபுரத்தில் இலவச பயிற்சி வகுப்புகள்

கூட்டுறவுச் சங்கங்களில் காலியாகவுள்ள உதவியாளா், இளநிலை உதவியாளா் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம் தீயணைப்பு நிலையங்களில் டிஜிபி சீமாஅகா்வால் ஆய்வு

இருங்காட்டுக்கோட்டை மற்றும் ஒரகடம் சிப்காட் பகுதிகளில் இயங்கி வரும் தீயணைப்பு நிலையங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை டிஜிபி சீமாஅகா்வால் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். ஸ்ரீபெரும்புதூா் அ... மேலும் பார்க்க