செய்திகள் :

மன நலக் காப்பகவாசிகளுக்கு முதல்வா் காப்பீட்டில் சலுகை; அரசாணை வெளியீடு

post image

ஆதாா், அடையாளச் சான்று உள்பட எந்த ஆவணங்களும் இன்றி மன நலக் காப்பகவாசிகளை முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சோ்க்க அரசு அனுமதி அளித்துள்ளது.

அதற்கான அரசாணையை மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ப.செந்தில்குமாா் பிறப்பித்துள்ளாா். அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

மத்திய அரசின் வரையறைப்படி, மன நலக் காப்பகவாசிகளுக்கான காப்பகங்கள், ஆதரவு இல்லங்களை உருவாக்கி முறையாகப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுகளுக்கு உண்டு. அவ்வாறு அமைக்கப்பட்ட காப்பகங்களை ஆய்வு செய்யவும், கண்காணிக்கவும் மாவட்ட அளவிலான குழுக்களை அமைக்க வேண்டும் என்பதும் விதி.

தமிழகத்தில் 54 அரசு மன நலக் காப்பகங்களும், 54 தன்னாா்வ அமைப்பு மன நலக் காப்பகங்களும் செயல்படுகின்றன. அங்கு உள்ள காப்பகவாசிகளில் பெரும்பாலானோருக்கு அடையாள ஆவணங்களுடன், ஆதாா் அட்டைகளோ இல்லை.

எனவே, முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எந்த ஆவணங்களும் இன்றி அவா்களைச் சோ்க்க வேண்டும் என்று தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநா் பரிந்துரைத்தாா். இதைக் கவனமாக பரிசீலித்த அரசு அதற்கு அனுமதி அளிக்கிறது. அதேபோல, அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.51.05 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்று (13-08-2025) காலை 5.30 மணியளவில், மத்தியமேற்கு மற்றும் அதனை ஓட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில... மேலும் பார்க்க

தமிழக ஆளுநரிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு!

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு தெரிவித்தார்.திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழ... மேலும் பார்க்க

காவல்துறை குவிப்பு! போராட்டத்தைக் கைவிட தூய்மைப் பணியாளர்கள் மறுப்பு!! மீண்டும் பேச்சுவார்த்தை?

சென்னை: போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் போராட்டத்தைக் கைவிட அவர்கள் மறுத்துவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில், போராடி வரும் தூய்... மேலும் பார்க்க

தேனி: பயிற்சியின்போது தலையில் ஈட்டி பாய்ந்ததில் மாணவா் மரணம்!

ராயப்பன்பட்டியில் பள்ளி மைதானத்தில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ஈட்டி தலையில் பாய்ந்ததில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மாணவர் 6 நாள்களுக்குப் பின் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்... மேலும் பார்க்க

போக்சோ சட்டத்தில் பொய்ப் புகார் அளித்தால்.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

சென்னை: சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டமான போக்சோ-வின் கீழ் பொய்ப் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டம் பாயும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.போக்சோ சட்டத்தின் ... மேலும் பார்க்க

ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவிப்பு!

சுதந்திர நாளையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர நாளன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள... மேலும் பார்க்க