செய்திகள் :

போக்சோ சட்டத்தில் பொய்ப் புகார் அளித்தால்.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

post image

சென்னை: சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டமான போக்சோ-வின் கீழ் பொய்ப் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டம் பாயும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போக்சோ சட்டத்தின் கீழ் பொய்ப் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டப்பிரிவு 22 ( 1)-ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமியை, அவரது தாத்தா பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில், சிறுமியின் பெற்றோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் குடும்பப் பிரச்னையில் மாமனார் மீது போக்சோவில் மருமகள் பொய் புகார் அளித்துள்ளார். கடந்த ஜூன் மாதம், தன்னுடைய 8 வயது மகளுக்கு, மாமனார் பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல்நிலையத்தில் பொய்ப் புகார் கொடுத்து, அவரைக் கைது செய்யவும் முயன்று வந்துள்ளனர்.

இது தொடர்பான தகவல் கிடைத்ததும், குழந்தைகள் நல அதிகாரிகள், விரைந்து சென்று, சிறுமியிடம் தனியாக விசாரணை நடத்தினர். அதில், 60 வயதுடைய தனது தாத்தா மீது எந்தத் தவறும் இல்லை என்று பெண் குழந்தை கூறியிருக்கிறது.

தனது தாத்தாவுக்கும் தந்தைக்கும் இடையேயான சண்டையில், தாத்தாவை, தனது தந்தைதான் அடிக்கச் சென்றார் என்றும், தாத்தாவை பழிவாங்கவே, தாத்தா தன்னை பேட் டச் செய்ததாக பொய் சொல்லுமாறு தந்தைதான் சொன்னார் என்றும் அந்த பெண் குழந்தை கூறியிருக்கிறது.

இதை நீதிமன்றத்தில் குழநதைகள் நல அதிகாரிகள் பதிவு செய்திருந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு வந்த போது, போக்சோ சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போக்சோ சட்டப்பிரிவு 22 (1)ன் கீழ் பொய்ப் புகார் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிமனற்ம் உத்தரவிட்டுள்ளது.

சொத்து விவகாரத்தில் இந்த பொய்ப் புகார் பதிவு செய்யப்பட்டதும், திருமணமாகி, மகள் பிறந்த பிறகும், வேலைக்குச் செல்லாமல் இருந்த மகன், தன்னுடைய தந்தையின் அனைத்து சொத்துகளையும் தன் பெயரில் எழுதிக்கொடுக்கும்படி மிரட்டி வந்துள்ளதும், இந்த சண்டையில்தான் தந்தையை கைது செய்ய, மகனே போக்சோ சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது.

தமிழக ஆளுநரிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு!

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு தெரிவித்தார்.திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழ... மேலும் பார்க்க

காவல்துறை குவிப்பு! போராட்டத்தைக் கைவிட தூய்மைப் பணியாளர்கள் மறுப்பு!! மீண்டும் பேச்சுவார்த்தை?

சென்னை: போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் போராட்டத்தைக் கைவிட அவர்கள் மறுத்துவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில், போராடி வரும் தூய்... மேலும் பார்க்க

தேனி: பயிற்சியின்போது தலையில் ஈட்டி பாய்ந்ததில் மாணவா் மரணம்!

ராயப்பன்பட்டியில் பள்ளி மைதானத்தில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ஈட்டி தலையில் பாய்ந்ததில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மாணவர் 6 நாள்களுக்குப் பின் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்... மேலும் பார்க்க

ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவிப்பு!

சுதந்திர நாளையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர நாளன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கடந்த 13 நாள்களாக தொடர்ந்து போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை மாநகராட்சி மண்டலம் 5 மற்றும் 6-ஆவது பகுதி தூய்மைப் பணி த... மேலும் பார்க்க

அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? மைத்ரேயன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது குறித்து மைத்ரேயன் விளக்கம் அளித்துள்ளார்.அதிமுக சார்பில் மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ள மைத்ரேயன், புதன்கிழமை காலை திமுக தலைவர் மு.க. ஸ்டால... மேலும் பார்க்க