செய்திகள் :

அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? மைத்ரேயன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!

post image

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது குறித்து மைத்ரேயன் விளக்கம் அளித்துள்ளார்.

அதிமுக சார்பில் மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ள மைத்ரேயன், புதன்கிழமை காலை திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து அந்த கட்சியில் இணைந்தார்.

இதனைத் தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த மைத்ரேயன் பேசியதாவது:

”முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மிகப்பெரிய முன்னேறிய மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. கல்வி, சமூதாய முன்னேற்றம், தனிநபர் வருமானம், பொருளாதார முன்னேற்றம் என அனைத்து துறைகளிலும் முன்னணி மாநிலமாக இருப்பது மத்திய அரசு அறிக்கையில் தெளிவாக இருக்கிறது.

கருணாநிதியின் மாநில சுயாட்சி முழக்கத்தை இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைத்து முதல்வர் செயல்பட்டு வருகிறார். இதனால், ஸ்டாலினின் சிப்பாயாக திமுகவில் இணைந்துள்ளேன்.

2026 சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி என்பது நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. இந்தாண்டு மட்டுமல்ல, அடுத்தாண்டும் ஸ்டாலின்தான் சுதந்திர தினத்தன்று கோட்டையில் கொடியேற்றுவார். வருகின்ற தேர்தல் 2 ஆம் இடத்துக்கானது.

அதிமுக போக்கு சரியாக இல்லை. பாஜகவுடன் இபிஎஸ் கூட்டணி அமைத்துள்ளார். கூட்டணி ஆட்சி, குறைந்தபட்ச செயல்திட்டம் என்று அமித் ஷா கூறியுள்ளார். அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் இருக்கிறது. ஒருசிலர் திட்டமிட்டு கட்சியை கைப்பிடியில் வைத்திருக்கிறார்கள். என்னை பயன்படுத்திக் கொள்ளாததால் அதிமுகவில் இருந்து விலகியுள்ளேன்.

திராவிட கட்சிகளை பொறுத்தவரை கூட்டணியை முடிவு செய்வது அவர்களாகதான் இருப்பார்கள். ஆனால், அதிமுக கூட்டணியை முடிவு செய்யும் சுவிட்ச் தில்லியில் இருக்கிறது. தில்லிக்கு அதிமுக தலைமை கட்டுப்படுகிறது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் பாஜகவின் பங்கு குறித்து மக்கள் யோசிப்பார்கள். திமுக ஆட்சி தொடர்வதற்குதான் மக்கள் வாக்களிப்பார்கள். 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெறுவார்கள்.” எனத் தெரிவித்தார்.

Maitreyan has explained why he left the AIADMK and joined the DMK.

இதையும் படிக்க : திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன்!

தமிழக ஆளுநரிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு!

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு தெரிவித்தார்.திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழ... மேலும் பார்க்க

காவல்துறை குவிப்பு! போராட்டத்தைக் கைவிட தூய்மைப் பணியாளர்கள் மறுப்பு!! மீண்டும் பேச்சுவார்த்தை?

சென்னை: போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் போராட்டத்தைக் கைவிட அவர்கள் மறுத்துவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில், போராடி வரும் தூய்... மேலும் பார்க்க

தேனி: பயிற்சியின்போது தலையில் ஈட்டி பாய்ந்ததில் மாணவா் மரணம்!

ராயப்பன்பட்டியில் பள்ளி மைதானத்தில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ஈட்டி தலையில் பாய்ந்ததில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மாணவர் 6 நாள்களுக்குப் பின் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்... மேலும் பார்க்க

போக்சோ சட்டத்தில் பொய்ப் புகார் அளித்தால்.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

சென்னை: சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டமான போக்சோ-வின் கீழ் பொய்ப் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டம் பாயும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.போக்சோ சட்டத்தின் ... மேலும் பார்க்க

ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவிப்பு!

சுதந்திர நாளையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர நாளன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கடந்த 13 நாள்களாக தொடர்ந்து போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை மாநகராட்சி மண்டலம் 5 மற்றும் 6-ஆவது பகுதி தூய்மைப் பணி த... மேலும் பார்க்க