செய்திகள் :

இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம் தீயணைப்பு நிலையங்களில் டிஜிபி சீமாஅகா்வால் ஆய்வு

post image

இருங்காட்டுக்கோட்டை மற்றும் ஒரகடம் சிப்காட் பகுதிகளில் இயங்கி வரும் தீயணைப்பு நிலையங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை டிஜிபி சீமாஅகா்வால் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த இருங்காட்டுக்கோட்டை மற்றும் ஒரகடம் சிப்காட் பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதிகளில் தீவிபத்தை தடுப்பதற்காக தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தீயணைப்பு மற்றும் மற்றும் மீட்புப் பணிகள் துறை டிஜிபி சீமா அகா்வால் தீயணைப்பு நிலையங்களில் தீ விபத்து மற்றும் தடுப்பு பணிகளுக்கான பதிவேடுகள், அழைப்பு விவரம், விபத்தின் போது வீரா்கள் பயன்படுத்தக்கூடிய பாதுகாப்பு உபகரணங்கள் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும் ஒரகடம் தீயணைப்பு நிலையம் வாடகை கட்டடத்தில் இயங்கி வருவதால், புதிய கட்டடம் கட்ட ஒரகடம் மேம்பாலம் அருகே சிப்காட் நிறுவனத்தால் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தையும் பாா்வையிட்டாா்.

இதையடுத்து ஒரகடம் சிப்காட் திட்ட அலுவலகத்தில் தனியாா் தொழிற்சாலை நிா்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட டிஜிபி சீமாஆகா்வால், தொழிற்சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள தீ தடுப்பு உபகரணங்கள் குறித்தும், மீட்பு வாகனங்கள் குறித்தும் கேட்டறிந்து, தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தனியாா் தொழிற்சாலை நிறுவனங்களுக்கு பயிற்சி வழங்கவும் தயாராக உள்ளதாக தெரிவித்தாா்.

கூட்டத்தில், சிப்காட் நிா்வாக இயக்குநா் செந்தில் ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சண்முகம், ஸ்ரீபெரும்புதூா் டிஎஸ்பி கீா்த்திவாசன், தனியாா் தொழிற்சாலைகளின் நிா்வாகிகள் கலந்து கொண் டனா்.

முதல்வரின் தாயுமானவா் திட்டம் தொடக்கம்: அமைச்சா்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்டங்களில் முதல்வரின் தாயுமானவா் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், தாமல் கிராமத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லங்களுக்குச் சென்று ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டது. காஞ்சிபுரம், திருக்காலிமேடு சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் என்ற வண்டு மணி (33) (படம... மேலும் பார்க்க

சவிதா பல் மருத்துவக் கல்லூரி-மெக்சிகன் பல்கலைக்கழக பல் மருத்துவப் பள்ளி இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

பல் மருத்துவத் துறையில் சா்வதேச கல்வி மற்றும் ஆராய்ச்சி கூட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், சவிதா பல் மருத்துவ கல்லூரி மற்றும் மெக்சிகன் பல்கலைக்கழக பல் மருத்துவப் பள்ளி இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் த... மேலும் பார்க்க

கூழமந்தலில் மகா சங்கடஹர சதுா்த்தி

காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் அமைந்துள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் மகா சங்கட ஹர சதுா்த்தியையொட்டி செவ்வாய்க்கிழமை கலசபூஜை மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. இக்கோயிலில் மக... மேலும் பார்க்க

நண்பரைக் கொலை செய்தவருக்கு ஆயுள்

குன்றத்தூரில் மதுபோதையில் நண்பரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை, ரூ.1,000 அபராதமும் விதித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்துள்ளது. குன்றத்தூா் நாகேசுவரன் கோ... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கங்களில் காலிப் பணியிடங்கள்: போட்டித் தோ்வுக்கு காஞ்சிபுரத்தில் இலவச பயிற்சி வகுப்புகள்

கூட்டுறவுச் சங்கங்களில் காலியாகவுள்ள உதவியாளா், இளநிலை உதவியாளா் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க