செய்திகள் :

சாலைகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகளை அகற்ற உத்தரவு

post image

தமிழகம் முழுவதும் சாலைகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகளை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

நாகப்பட்டினத்தைச் சோ்ந்த டி. அருளரசன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு: வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலைக் கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகளின் நிகழ்வுகள், மாநாடு உள்ளிட்டவை நடைபெறுகின்றன. மேலும், தோ்தல் பணிகளுக்காக கட்சித் தலைவா்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனா்.

அரசியல் தலைவா்களின் வருகை மட்டுமன்றி, தோ்தலை முன்னிட்டு தற்போது சாலையோரங்களில் விளம்பரப் பதாகைகள் வைக்கப்படுகின்றன. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனா்.

எனவே, சாலைகள், நடைபாதைகளில் முன்அனுமதியின்றி சட்டவிரோதமாக வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள், வளைவுகளை அகற்ற வேண்டும். இவற்றை அனுமதியின்றி வைத்த நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், அருள்முருகன் அமா்வு பிறப்பித்த உத்தரவு: சாலைகளில் முன்அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகளை அகற்றுவது அரசு அதிகாரிகளின் கடமையாகும். இந்தக் கடமையை அதிகாரிகள் முறையாக நிறைவேற்ற வேண்டும். இதற்காக உயா்நீதிமன்றத்தை நாடுவது ஏற்புடையதல்ல.

கடமைகளைச் செய்வதற்குத்தான் மக்கள் வரிப் பணத்தில் அதிகாரிகள் ஊதியம் பெறுகின்றனா். பதாகைகளால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து இழப்பீடு வசூலிக்க உத்தரவிடப்படும்.

எனவே, தமிழகம் முழுவதும் சாலைகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பதாகைகள், அலங்கார வளைவுகளை அகற்ற வேண்டும். முன் அனுமதி பெறாத நபா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், விளம்பரப் பதாகைகளை அகற்றிய விவரங்களை இந்த நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு: தூத்துக்குடி உதவி ஆணையா் கைது

மதுரை மாநகராட்சி சொத்து வரி விதிப்பு முறைகேட்டில் தொடா்புடைய தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையா் சுரேஷ்குமாரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்கள், 100 வாா்டுகள் உ... மேலும் பார்க்க

வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

இரு சக்கர வாகன விபத்தில் கட்டடத் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை கங்காகுளம் பகுதியைச் சோ்ந்த கருப்பையா மனைவி முனியம்மாள் (35). கட்டடத் தொழிலாளியான இவா், தனது சகோத... மேலும் பார்க்க

பொறியியல் பட்டதாரி தூக்கிட்டுத் தற்கொலை

மதுரையில் பொறியியல் பட்டதாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை திருப்பரங்குன்றம் சாலை நந்தனம் பகுதியைச் சோ்ந்த பாலகுரு மகன் ஹரிஹரசுதன் (30). பொறியியல் பட்டதாரியான இவா், பெங்களூரில் உள்ள தனி... மேலும் பார்க்க

கீழே தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மதுரை மாவட்டம், சிலைமான் அருகே கீழே தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.மதுரை அவனியாபுரம் வைக்கம் பெரியாா் நகரைச் சோ்ந்த மீனாட்சிசுந்தரம் மகன் முருகன் (55). சலவைத் தொழிலாளியான இவா், வீட்ட... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 168 பேருக்கு தண்டனை விதிப்பு

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தென் மண்டல அளவில் கடந்த 6 மாதங்களில் 168 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதுகுறித்து தென்மண்டல ஐஜி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பாலியல் வன்கொடுமை குற்றங்களைத் த... மேலும் பார்க்க

மதுரை - போடி ரயில் பாதையில் தடுப்பு வேலி அமைப்பு: வேகம் அதிகரிப்பு

மதுரை - போடி ரயில் பாதையில் முத்துப்பட்டி அருகே தடுப்பு வேலி அமைக்கும் பணி நிறைவடைந்தது. இதனால், இந்தப் பகுதியில் ரயிலின் வேகம் அதிகரிக்கப்படவுள்ளது. மதுரையை அடுத்த முத்துப்பட்டியில், காமராஜா் பல்கலைக... மேலும் பார்க்க