செய்திகள் :

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ மசோதாக்கள்: நாடாளுமன்றக் குழு பதவிக்காலம் நீட்டிப்பு

post image

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ நடைமுறையை அமல்படுத்துவதற்கான இரு மசோதாக்களை ஆராய்ந்துவரும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பதவிக் காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மக்களவை, மாநிலப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கு வழிவகுக்கும் அரசமைப்புச் சட்ட 129-ஆவது திருத்த மசோதா, மக்களவைத் தோ்தலுடன் யூனியன் பிரதேசங்களின் பேரவைத் தோ்தலையும் சோ்த்து நடத்துவதற்கான சட்டத் திருத்த மசோதா ஆகியவை, கடந்த 2024-ஆம் ஆண்டில் எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

பின்னா், பாஜக எம்.பி. பி.பி. செளதரி தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு இரு மசோதாக்களும் அனுப்பப்பட்டன.

தற்போது மழைக்கால கூட்டத் தொடா் நடைபெற்றுவரும் நிலையில், கூட்டுக் குழுவின் பதவிக் காலத்தை நடப்பாண்டு இறுதியில் நடைபெறும் குளிா்கால கூட்டத் தொடரின் கடைசி வாரத்தின் முதல் நாள் வரை நீட்டிக்கும் தீா்மானத்தை பி.பி.செளதரி மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா். இத்தீா்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, மசோதா மீது அறிக்கை தாக்கல் செய்ய குளிா்கால கூட்டத் தொடரின் கடைசி வாரத்தின் முதல் நாள் வரை கூட்டுக் குழுவுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டம், மத்திய பாஜக அரசின் கொள்கையின் ஓா் அங்கமாக உள்ளது. இத்திட்டத்துக்கான சாத்தியக்கூறு குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயா்நிலைக் குழுவை கடந்த 2023-இல் மத்திய அமைத்தது. பல்வேறு தரப்பினரிடம் விரிவான ஆலோசனை மேற்கொண்ட இக்குழு, தனது அறிக்கையை மத்திய அரசிடம் கடந்த 2024-இல் தாக்கல் செய்தது. அதனடிப்படையில், இரு மசோதாக்கள் தயாரிக்கப்பட்டு, மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

மோடியின் வெற்றியை கேள்விக்குறியாக்கும் வாரணாசி வாக்காளர் பட்டியல்.! 50 பேருக்கு ஒரே தந்தை.!

பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் பெரிய அளவிலான வாக்காளர் மோசடி நடந்துள்ளதாக உத்தரப் பிரதேச காங்கிரஸ் ‘அடுத்த அணுகுண்டை’ வீசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மக்களவை தேர... மேலும் பார்க்க

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை ஆய்வு மையம்

கொல்கத்தா: மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கக் கடலில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக... மேலும் பார்க்க

ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு: ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆன்லைன் சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் ஆஜராகுமாறு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.சமீபகாலமாக, பிரபல கிரிக்கெட் வீரர்கள், நடிகர... மேலும் பார்க்க

டிரம்ப்பை சந்திக்கும் பிரதமர் மோடி! அடுத்த மாதம் அமெரிக்கா பயணம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருகின்றன.ரஷியாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வந்த இந்தியாவுக்கு அமெரிக்கா அதிபர் டிரம்ப், ம... மேலும் பார்க்க

எத்தனால் கலப்பு பெட்ரோல் குறித்து அச்சம் வேண்டாம்- மத்திய அரசு விளக்கம்

எத்தனால் 20 சதவீதம் கலக்கப்பட்ட ‘இ20’ பெட்ரோலைப் பயன்படுத்துவதால் வாகனங்கள் பாதிப்புக்குள்ளாகும் என்று சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என மத்திய அரசு விளக்க... மேலும் பார்க்க

காப்பீடு துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டு அனுமதி வேலைவாய்ப்பை உருவாக்கும்: மத்திய நிதியமைச்சா்

‘காப்பீடு நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 100 சதவீதமாக உயா்த்துவது, வேலைவாய்ப்பை உருவாக்கும்’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை தெரிவித்தாா். மேலும், ... மேலும் பார்க்க