செய்திகள் :

மோடியின் வெற்றியை கேள்விக்குறியாக்கும் வாரணாசி வாக்காளர் பட்டியல்.! 50 பேருக்கு ஒரே தந்தை.!

post image

பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் பெரிய அளவிலான வாக்காளர் மோசடி நடந்துள்ளதாக உத்தரப் பிரதேச காங்கிரஸ் ‘அடுத்த அணுகுண்டை’ வீசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி, கடந்த 7 ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்து முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்களையும் வெளியிட்டார்.

பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியிலுள்ள மகாதேவபுர பேரவைத் தொகுதியில் வாக்காளர் பட்டியலை எடுத்து, பல்வேறு அதிசயங்களையும் ராகுல் பட்டியலிட்டார். அதன் தொடர்ச்சியாக, தேர்தல் ஆணையத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மீது ராகுல் வீசிய முதல் ‘அணுகுண்டு’ தீவிரமே இன்னும் அடங்காத நிலையில், பிரதமர் மோடியின் வெற்றியைக் கேள்விக் குறியாக்கும் வகையில் அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற வாரணாசித் தொகுதியில் பல்வேறு வாக்களர் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அம்மாநில காங்கிரஸ் கட்சி ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

பிரசாரத்தின் போது...

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியின் 51வது வார்டு காஷ்மீரிகஞ்ச் பகுதியில் 50-க்கும் மேற்பட்டோர் ‘ராம்கமல் தாஸ்’ என்பவரின் மகன்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, உத்தரப் பிரதேச காங்கிரஸ் சமூக ஊடகங்களில் வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. இதனால், மிகப் பெரிய சர்ச்சை வெடித்துள்ளது.

இதுகுறித்து உத்தரப் பிரதேச காங்கிரஸ் தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

அந்தப் பதிவில், “வாரணாசியில் தேர்தல் ஆணையத்தின் மற்றொரு அதிசயத்தைப் பாருங்கள்! 'ராம்கமல் தாஸ்' என்ற ஒரே நபரின் பெயரில் 50 மகன்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்!

இளைய மகன் ராகவேந்திரா - 28 வயது, மூத்த மகன் பன்வாரி தாஸ் - 72 வயது!

தேர்தல் ஆணையம் இந்த முரண்பாடை தவறாகவுள்ளது என நினைத்து நிராகரிக்குமா? அல்லது மோசடி வெளிப்படையாக நடந்துள்ளதை ஏற்றுக்கொள்ளுமா?

இந்த வாக்குத் திருட்டு சம்பவம் வாரணாசி மக்கள் மட்டுமின்றி, முழு ஜனநாயகமும் ஏமாற்றப்பட்டதைத்தான் சொல்கிறது. இதற்கு நீங்கள் எப்போது பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்போகிறீர்கள்” எனக் கேள்வியெழுப்பியுள்ளது.

2023 ஆம் ஆண்டு மாநகராட்சி தேர்தல் பட்டியலில் இருந்து எடுக்கப்பட்ட அந்த வாக்காளர் பட்டியலில், பி 24/19 என்ற முகவரியில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ராம்கமல் தாஸ் என்பவரே தங்கள் தந்தை என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்தப் பட்டியலில் 37 வயதுடைய 13 பேரும், 39 வயதுடைய ஐந்து பேரும், 40 வயதுடைய நான்கு பேரும், 40 வயதுடைய சிலர் மற்றும் 72 வயதுடைய இரண்டு பேரும் அடங்குவர்.

இதுகுறித்து அந்த முகவரியில் சென்று விசாரித்தபோது, அங்கு ஆச்சார்ய ராம்கமல் தாஸால் நிறுவப்பட்ட ராம் ஜானகி மட கோவில் ஒன்று இருந்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கோயிலின் தற்போதைய மேலாளர் ராமபரத் சாஸ்திரி கூறுகையில், “இந்த மடம் குருகுலமாக செயல்பட்டு வருகிறது. எங்கள் ஆசிரமத்தில், உலக வாழ்க்கையைத் துறந்த சீடர்கள் குருவையே தங்கள் தந்தையாகக் கருதுகிறார்கள்.

ஒருவர் துறவறம் பூண்ட பின்னர், அவரின் குடும்ப உறவுகள் துண்டிக்கப்படுகின்றன. அவர்களை அனைவரும் தங்கள் குருவையே அனைத்துமாகக் கருதுகின்றனர்” என்றார்.

ஆளும் பாஜக மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மீது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், பிரதமர் மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியிலேயே இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மீதே பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன.

முன்னதாக, மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி 6,12,970 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய்யை விட 1,52,513 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது நினைவுகூரத்தக்கது.

Congress cites '50 sons of 1 man' to claim Varanasi voter fraud. What's the truth?

இதையும் படிக்க :

ஆப்கன் எல்லையில் பாக். ராணுவம் நடவடிக்கை: 4 நாள்களில் 50 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் 50 பயங்கரவாதிகள் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கன் எல்லையில் உள்ள ஸோப் மாவட்டத்தின் சம்பாஸா பகுதியில் ஆகஸ்ட... மேலும் பார்க்க

124 வயது.. நாட் அவுட்! எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டும் அதிசய பெண் யார்?

பாட்னா: வாக்குத் திருட்டு என்ற குற்றச்சாட்டில், வாக்காளர் பட்டியல் குளறுபடிகள் ஒவ்வொன்றாக வெளியாகி வரும் நிலையில், ஊடகங்களில் நேற்று தலைப்புச் செய்தியானவர் மிண்டா தேவி.பிகார் மாநிலம் தரௌந்தா பகுதியைச்... மேலும் பார்க்க

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை ஆய்வு மையம்

கொல்கத்தா: மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கக் கடலில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக... மேலும் பார்க்க

ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு: ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆன்லைன் சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் ஆஜராகுமாறு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.சமீபகாலமாக, பிரபல கிரிக்கெட் வீரர்கள், நடிகர... மேலும் பார்க்க

டிரம்ப்பை சந்திக்கும் பிரதமர் மோடி! அடுத்த மாதம் அமெரிக்கா பயணம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருகின்றன.ரஷியாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வந்த இந்தியாவுக்கு அமெரிக்கா அதிபர் டிரம்ப், ம... மேலும் பார்க்க

எத்தனால் கலப்பு பெட்ரோல் குறித்து அச்சம் வேண்டாம்- மத்திய அரசு விளக்கம்

எத்தனால் 20 சதவீதம் கலக்கப்பட்ட ‘இ20’ பெட்ரோலைப் பயன்படுத்துவதால் வாகனங்கள் பாதிப்புக்குள்ளாகும் என்று சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என மத்திய அரசு விளக்க... மேலும் பார்க்க