அவசர ஆலோசனையில் கே.என். நேரு, சேகர் பாபு; அதிகரிக்கப்படும் காவலர்கள்! - ரிப்பன் ...
ஆப்கன் எல்லையில் பாக். ராணுவம் நடவடிக்கை: 4 நாள்களில் 50 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் 50 பயங்கரவாதிகள் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கன் எல்லையில் உள்ள ஸோப் மாவட்டத்தின் சம்பாஸா பகுதியில் ஆகஸ்ட் 7 முதல் 11 வரை, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 50 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில் ஆகஸ்ட் 7 முதல் 9 வரை 47 குவாரிஜ்கள் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 10ம் நள்ளிரவு முதல் 11-ம் தேதி காலை பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள சம்பாசாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டது.
இந்த நடவடிக்கையின் போது, மேலும் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களிடமிருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள், வெடிபொருள்கள் ஆகியவை மீட்கப்பட்டன.
பாகிஸ்தான் ராணுவம் வெற்றிகரமான நடவடிக்கையை மேற்கொண்டதற்காக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் செவ்வாயன்று பாதுகாப்புப் படையினரைப் பாராட்டினார்.
முன்னதாக, ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வரும் தலிபான்கள் கடந்த 2022-ம் ஆண்டு பாகிஸ்தான் அரசுடனான தங்களது போர்நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்தனர்.
அதன் பிறகு, பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மற்றும் பலூசிஸ்தான் மாகாணங்களில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.