செய்திகள் :

ஏற்றத்தில் பங்குச் சந்தை! இன்றைய நிலவரம் என்ன?

post image

நேற்று பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிவடைந்த நிலையில் இன்று(ஆக. 13) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 80,492.17 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.50 மணியளவில் சென்செக்ஸ் 196.88 புள்ளிகள் அதிகரித்து 80,432.48 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 93.00 புள்ளிகள் உயர்ந்து 24,580.40 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

பங்குச்சந்தை ஏற்றத்தில் வர்த்தகமாவது முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அப்போலோ மருத்துவமனை, ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், ஹீரோ மோட்டோகார்ப், ஹெச்டிஎப்சி லைஃப், எடர்னல் ஆகியவை நிஃப்டியில் முக்கிய லாபத்தைப் பெற்றன. அதே நேரத்தில் இண்டஸ்இண்ட் வங்கி, அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, ஐடிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.

எப்எம்சிஜி தவிர மற்ற அனைத்துத் துறைக் குறியீடுகளும் உயர்ந்தன. ஆட்டோ, உலோகம், ரியல் எஸ்டேட், மருந்துகள் துறை 0.5-1 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச்சந்தை மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 0.5% உயர்ந்துள்ளன.

Stock market update: Nifty at 24,550, Sensex rises 180 pts; mid, smallcaps shine

வெறும் ரூ.59,990-ல்..! ஒரே சார்ஜிங்கில் 100 கி.மீ. செல்லும் ஜெலோ நைட் ஸ்கூட்டர்!

வெறும் ரூ.59,990 விலையில் ஒரே சார்ஜிங்கில் 100 கி.மீ. செல்லும் ஜெலோ நைட் பிளஸ் என்ற மின்சார ஸ்கூட்டரை ஜெலோ நைட் பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.இந்த ஸ்கூட்டரில் 1.8 கிலோ வாட் ஹவர் எல்எப்பி பேட்டரி... மேலும் பார்க்க

7% வளா்ச்சி கண்ட இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை

2025-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) இந்திய சந்தையில் அறிதிறன் பேசிகளின் (ஸ்மாா்ட்போன்) விற்பனை அளவில் 7.3 சதவீதம் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ஐடிச... மேலும் பார்க்க

ஆயில் இந்தியா லாபம் 1.4% ஆக உயர்வு!

புது தில்லி: எண்ணெய் விலை சரிந்ததால், ஜூன் முடிய உள்ள காலாண்டில் அதன் நிகர லாப வளர்ச்சி கிட்டத்தட்ட நிலையாக இருந்ததாக அரசுக்குச் சொந்தமான ஆயில் இந்தியா லிமிடெட் இன்று தெரிவித்தது.ஏப்ரல் முதல் ஜூன் வரை... மேலும் பார்க்க

பொதுத்துறை வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு கட்டணம் நீக்கம்: நிதி அமைச்சகம்

புதுதில்லி: பெரும்பாலான பொதுத்துறை வங்கிகளின் உள்ள சேமிப்பு வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச மாதாந்திர இருப்பு கட்டணங்களை நீக்கியுள்ளன என்றார் நிதித்துறை இணை அமைச்சரான பங்கஜ் சௌத்திரி.சேமிப்பு கணக்கில்... மேலும் பார்க்க

பொதுத்துறை வங்கிகள் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5.82 லட்சம் கோடி கடன்கள் தள்ளுபடி!

புதுதில்லி: கடந்த ஐந்து நிதியாண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் சுமார் ரூ.5.82 லட்சம் கோடி வாராக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.2024-25 ஆம் ஆண்டில், பொதுத்துறை வங்... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.87.72 ஆக நிறைவு!

மும்பை: உள்நாட்டு பங்குச் சந்தைகளில் எதிர்மறையான போக்கு நிலவிய நிலையில், செவ்வாய்க்கிழமை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறுகிய வரம்பில் ஒருங்கிணைந்து 3 காசுகள் உயர்ந்து ரூ.87.72 ஆக ந... மேலும் பார்க்க