செய்திகள் :

பொதுத்துறை வங்கிகள் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5.82 லட்சம் கோடி கடன்கள் தள்ளுபடி!

post image

புதுதில்லி: கடந்த ஐந்து நிதியாண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் சுமார் ரூ.5.82 லட்சம் கோடி வாராக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

2024-25 ஆம் ஆண்டில், பொதுத்துறை வங்கிகளின் கடன் தள்ளுபடி ரூ.91,260 கோடியாக இருந்தது. இதுவே அதன் முந்தைய நிதியாண்டில் ரூ.1.15 லட்சம் கோடியாக இருந்தது என்று நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்திரி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

இதுவே 2020-21 ஆம் ஆண்டில் வாராக் கடன் ரூ.1.33 லட்சம் கோடியாக உயர்ந்தது. அடுத்த ஆண்டில் இது ரூ.1.16 லட்சம் கோடியாகவும், 2022-23ஆம் ஆண்டில் இது ரூ.1.27 லட்சம் கோடியாகவும் குறைந்தது.

அதே வேளையில் பொதுத்துறை வங்கிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் ரூ.1.65 லட்சம் கோடியை வசூலித்துள்ளன. இதுவே முந்தைய ஐந்து நிதியாண்டுகளில் மொத்த தள்ளுபடியில் இந்த மீட்பு 28 சதவிகிதமாகும்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த சௌத்திரி, 2024-25 நிதியாண்டிற்கான ரிசர்வ் வங்கி வழங்கிய தற்காலிக தரவுகளின் அடிப்படையில் SARFAESI சட்டத்தின் கீழ் 2,15,709 வழக்குகளில் தொடங்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் ரூ.32,466 கோடியை மீட்டெடுத்துள்ளன என்றார்.

இதையும் படிக்க: சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் நிறைவு!

ஆயில் இந்தியா லாபம் 1.4% ஆக உயர்வு!

புது தில்லி: எண்ணெய் விலை சரிந்ததால், ஜூன் முடிய உள்ள காலாண்டில் அதன் நிகர லாப வளர்ச்சி கிட்டத்தட்ட நிலையாக இருந்ததாக அரசுக்குச் சொந்தமான ஆயில் இந்தியா லிமிடெட் இன்று தெரிவித்தது.ஏப்ரல் முதல் ஜூன் வரை... மேலும் பார்க்க

பொதுத்துறை வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு கட்டணம் நீக்கம்: நிதி அமைச்சகம்

புதுதில்லி: பெரும்பாலான பொதுத்துறை வங்கிகளின் உள்ள சேமிப்பு வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச மாதாந்திர இருப்பு கட்டணங்களை நீக்கியுள்ளன என்றார் நிதித்துறை இணை அமைச்சரான பங்கஜ் சௌத்திரி.சேமிப்பு கணக்கில்... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.87.72 ஆக நிறைவு!

மும்பை: உள்நாட்டு பங்குச் சந்தைகளில் எதிர்மறையான போக்கு நிலவிய நிலையில், செவ்வாய்க்கிழமை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறுகிய வரம்பில் ஒருங்கிணைந்து 3 காசுகள் உயர்ந்து ரூ.87.72 ஆக ந... மேலும் பார்க்க

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் நிறைவு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட், எஃப்எம்சிஜி மற்றும் நிதித்துறையில் ஏற்பட்ட விற்பனை அழுத்தம் காரணமாக நிஃப்டி 50 பங்குகள் 24,500 புள்ளிகளுக்குக் கீழே சரிந்து முடிவடைந்தன.நிலையற்ற வர்த்தகம், ... மேலும் பார்க்க

சுதந்திர நாளையொட்டி ஃபிளிப்கார்ட்டில் தள்ளுபடி விற்பனை! சலுகைகள் என்னென்ன?

ஃபிளிப்கார்ட் இணைய விற்பனை தளத்தில் சுதந்திர நாளையொட்டி ஆக. 13 முதல் 17ஆம் தேதி வரை சிறப்புத் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்கள், மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோகப் பொரு... மேலும் பார்க்க

கேமரா பிரியர்களுக்காக... விவோ வி 60 அறிமுகம்!

விவோ வி60 என்ற புதிய ஸ்மார்ட்போனை விவோ நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஸ்மார்ட்போனில் கேமராவை அதிகம் விரும்புபவர்களுக்கான விருப்பத் தேர்வாக விவோ வி60 இருக்கும் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரி... மேலும் பார்க்க