செய்திகள் :

சுதந்திர நாளையொட்டி ஃபிளிப்கார்ட்டில் தள்ளுபடி விற்பனை! சலுகைகள் என்னென்ன?

post image

ஃபிளிப்கார்ட் இணைய விற்பனை தளத்தில் சுதந்திர நாளையொட்டி ஆக. 13 முதல் 17ஆம் தேதி வரை சிறப்புத் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்கள், மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், ஆடை அணிகலன்களுக்கு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பழைய பொருள்களுக்கு மாற்றாக புதிய மின்னணு சாதனங்களை, பொருள்களை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த சலுகை மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும் என ஃபிளிப்கார்ட் அறிவித்துள்ளது.

எவற்றுக்கெல்லாம் தள்ளுபடி

உயர்தர ரகத்தில்..

  • சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா - ரூ. 80,000 கீழ் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • ஆப்பிள் ஐபோன் 15 - ரூ. ₹60,000க்கு கீழ் விற்பனையாக வாய்ப்பு.

  • சாம்சங் கேலக்ஸி எஸ்24 - வங்கி தள்ளுபடி, வட்டியில்லா தவணை, எக்ஸ்சேஞ்ச் உள்பட.

மத்திய ரகத்தில்...

  • சாம்சங் கேலக்ஸி எஸ்24 எஃப்இ

  • ஓப்போ ரெனோ 14

  • விவோ டி 4 அல்ட்ரா

  • கூகுள் பிக்சல் 8ஏ

இவை அனைத்துக்கும் சிறப்புத் தள்ளுபடி, வங்கிக் கடன் அட்டை சலுகைகள், எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் உள்ளது.

இவை தவிர...

  • ஸ்மார்ட் டிவி, வீட்டு பொழுதுபோக்கு சாதனங்கள்

  • வீட்டு உபயோகப் பொருள்கள்

  • வீட்டு உபயோக மின்னணு பொருள்கள்

  • ஆடை, அழகு சாதன பொருள்கள்

ஃபிளிப்கார்ட் தளத்தில் சில வங்கிகள் தங்கள் கடன் அட்டைகளுக்கான சலுகைகளை ஏற்கெனவே அறிவித்துள்ளன. இவை வங்கிகளைப் பொருத்து மாறுபடும். ஃபிளிப்கார்ட் சலுகையை பயனர்கள் பயன்படுத்தி பெரிய அளவிலான சேமிப்பிற்கு தயாராக வேண்டும் என ஃபிளிப்கார்ட் கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிக்க | அமேசானில் ரூ. 32,780-க்கு ஐபோன் 15 வாங்கலாம்! ரூ. 47,120 தள்ளுபடி பெறுவது எப்படி?

Flipkart Independence Day Sale 2025

7% வளா்ச்சி கண்ட இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை

2025-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) இந்திய சந்தையில் அறிதிறன் பேசிகளின் (ஸ்மாா்ட்போன்) விற்பனை அளவில் 7.3 சதவீதம் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ஐடிச... மேலும் பார்க்க

ஆயில் இந்தியா லாபம் 1.4% ஆக உயர்வு!

புது தில்லி: எண்ணெய் விலை சரிந்ததால், ஜூன் முடிய உள்ள காலாண்டில் அதன் நிகர லாப வளர்ச்சி கிட்டத்தட்ட நிலையாக இருந்ததாக அரசுக்குச் சொந்தமான ஆயில் இந்தியா லிமிடெட் இன்று தெரிவித்தது.ஏப்ரல் முதல் ஜூன் வரை... மேலும் பார்க்க

பொதுத்துறை வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு கட்டணம் நீக்கம்: நிதி அமைச்சகம்

புதுதில்லி: பெரும்பாலான பொதுத்துறை வங்கிகளின் உள்ள சேமிப்பு வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச மாதாந்திர இருப்பு கட்டணங்களை நீக்கியுள்ளன என்றார் நிதித்துறை இணை அமைச்சரான பங்கஜ் சௌத்திரி.சேமிப்பு கணக்கில்... மேலும் பார்க்க

பொதுத்துறை வங்கிகள் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5.82 லட்சம் கோடி கடன்கள் தள்ளுபடி!

புதுதில்லி: கடந்த ஐந்து நிதியாண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் சுமார் ரூ.5.82 லட்சம் கோடி வாராக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.2024-25 ஆம் ஆண்டில், பொதுத்துறை வங்... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.87.72 ஆக நிறைவு!

மும்பை: உள்நாட்டு பங்குச் சந்தைகளில் எதிர்மறையான போக்கு நிலவிய நிலையில், செவ்வாய்க்கிழமை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறுகிய வரம்பில் ஒருங்கிணைந்து 3 காசுகள் உயர்ந்து ரூ.87.72 ஆக ந... மேலும் பார்க்க

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் நிறைவு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட், எஃப்எம்சிஜி மற்றும் நிதித்துறையில் ஏற்பட்ட விற்பனை அழுத்தம் காரணமாக நிஃப்டி 50 பங்குகள் 24,500 புள்ளிகளுக்குக் கீழே சரிந்து முடிவடைந்தன.நிலையற்ற வர்த்தகம், ... மேலும் பார்க்க