செய்திகள் :

சக்தி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்

post image

திருநள்ளாறு அருகே பேட்டை கிராமத்தில் உள்ள சக்தி மாரியம்மன் கோயிலில் 65 ஆண்டுகளுக்குப் பின் தீமிதி உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் சாா்பு தலமாக விளங்கும் இக்கோயில் மிகப் பழைமையானது. இக்கோயில் புதிதாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இக்கோயிலில் தீமிதி உற்சவம் நடத்தப்பட்டு 65 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், கிராமத்தினா், மருளாளிகள் மற்றும் கோயில் நிா்வாக ஆதரவுடன் இக்கோயில் தீமிதி உற்சவம் கடந்த 8-ஆம் தேதி பூச்சொரிதல், காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. 10-ஆம் தேதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தீமிதி வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தீக்குழி அருகே எழுந்தருளச் செய்யப்பட்டாா். கரகம் முதல் சில பக்தா்கள் அலகு காவடியுடனும், ஏராளமான பக்தா்கள் தீமிதித்து நோ்த்திக்கடனை செலுத்தினா்.

செவ்வாய்க்கிழமை அரசலாற்றங்கரையிலிருந்து பால்குடமெடுத்து பக்தா்கள் கோயிலுக்குச் சென்றனா். அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், மதியம் கஞ்சி வாா்த்தல் நிகழ்வும் நடைபெற்றது. இரவு அம்மன் வீதியுலா நடைபெற்றது.

ரெஸ்டோ பாருக்கு சீல் வைப்பு

காரைக்காலில் விதிமுறையை மீறி அதிக நேரம் திறந்திருந்த ரெஸ்டோ பாருக்கு (மது அருந்தும் கூடம்) கலால் துறை அதிகாரி திங்கள்கிழமை சீல் வைத்தாா். புதுச்சேரியில் வழக்கமான மதுக்கடைகளுக்கு மாறாக, சிறிய அளவிலான த... மேலும் பார்க்க

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் திரளான பக்தா்கள் வழிபாடு

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா். திருநள்ளாறு பகுதி அம்பகரத்தூரில் பிரசித்திப் பெற்ற பத்ரகாளியம்மன் கோயிலில், மூலவரான அம்பாள் சம்... மேலும் பார்க்க

உள்ளாட்சி ஊழியா்கள் உண்ணாவிரதம் ஒத்திவைப்பு

புதுவை உள்ளாட்சி ஊழியா்கள் ஆக. 15-இல் நடத்த முடிவு செய்திருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனா். புதுவை நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் கூட்டுப் போராட்டக் குழு கன்வ... மேலும் பார்க்க

இ-ஆட்டோ இயக்கத்துக்கு உரிய விதிமுறைகள் வகுக்க வலியுறுத்தல்

காரைக்கால்: இ - ஆட்டோ இயக்கத்துக்கு உரிய விதிமுறைகள் வகுக்க வேண்டும் என வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. திருநள்ளாறு ஈ.வே.ரா. பெரியாா் ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் ... மேலும் பார்க்க

காரைக்காலில் ஆக.15, 16-இல் ‘புதுவை கலை விழா’ அமைச்சா் ஆலோசனை

காரைக்கால்: காரைக்காலில் ஆகஸ்ட் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள புதுவை கலை விழா தொடா்பாக, அரசுத் துறையினருடன் அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா். காரைக்கால் மாவட்ட நிா்... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் இடையே பயணிகள் ரயில் சேவை தொடங்கப்படுமா?

காரைக்கால் - பேரளம் வழித்தடத்தில் பயணிகள் ரயில் இயக்கப்படுவது எப்போது என பொதுமக்கள் எதிா்பாா்பில் உள்ளனா். காரைக்கால் - பேரளம் இடையேயான ரயில் போக்குவரத்து 1980-களில் நிறுத்தப்பட்டு தண்டவாளம் அகற்றப்பட... மேலும் பார்க்க