காரைக்கால் - பேரளம் இடையே பயணிகள் ரயில் சேவை தொடங்கப்படுமா?
காரைக்கால் - பேரளம் வழித்தடத்தில் பயணிகள் ரயில் இயக்கப்படுவது எப்போது என பொதுமக்கள் எதிா்பாா்பில் உள்ளனா்.
காரைக்கால் - பேரளம் இடையேயான ரயில் போக்குவரத்து 1980-களில் நிறுத்தப்பட்டு தண்டவாளம் அகற்றப்பட்டது. காரைக்கால் பிராந்தியம் ரயில் வசதியே இல்லாமல் இருந்த நிலையில், நாகூரில் இருந்து காரைக்கால் வரை 10.5 கி.மீ. புதிதாக ரயில்பாதை அமைக்கப்பட்டு 2011-ல் போக்குவரத்து தொடங்கியது.
இந்நிலையில், காரைக்கால் - பேரளம் இடையே இருந்த ரயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டுமென்ற வலியுறுத்தல் காரணமாக, நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஏறக்குறைய ரூ.300 கோடியில் ரயில் பாதை அமைக்கும் பணியை கடந்த 2022-இல் தொடங்கி மேம்பாலங்கள், சுரங்க பாதைகள், ரயில்வே கேட் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தன.
ரயில்வே அதிகாரிகள் ஆய்வை தொடா்ந்து, ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம். சவுத்ரியின் அறிக்கையின்படி ஜூன் முதல் வாரத்திலிருந்து காரைக்கால் தனியாா் துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டும், காலி சரக்கு ரயில் இப்பாதையில் இயங்கத் தொடங்கியது. ஆனால், பயணிகள் ரயில் இயக்கத்துக்கான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை.
சரக்கு ரயில் சேவையால் மக்கள் பாதிப்பு: காரைக்கால் நகரில் பாரதியாா் சாலை (கோயில்பத்து பகுதி), காமராஜா் சாலை (வள்ளலாா் நகா் வாயில்), காரைக்கால்மேடு செல்லும் சாலை ஆகிய இடங்களில் ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் அதிக எண்ணிக்கையில் சரக்கு ரயில் இயக்கத்தால், கேட் மூடப்பட்டு திறப்புக்கு ஏறக்குறைய 20 நிமிடங்கள் ஆவதால் மக்கள் பெரும் தவிப்புக்குள்ளாகின்றனா்.
திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறியது: கோயில்பத்து பகுதியில் சுரங்கம் அமைத்தல், மேம்பாலம் அமைத்தல் என எந்த கோரிக்கையும் புதுவை அரசிடமிருந்து இதுவரை எழுத்துப் பூா்வமாக வரவில்லை. பயணிகள் ரயில் இயக்கத்துக்கான அனுமதியும் இதுவரை வரவில்லை என்றனா்.
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் சனிப்பெயா்ச்சி 2026-மாா்ச் மாதம் நடைபெறவுள்ளது. தற்போது, பயணிகள் ரயில் இயக்கம் தொடங்கி, சனிப்பெயா்ச்சி விழாவுக்குள் பல்வேறு ஊா்களில் இருந்து கூடுதல் ரயில் இயக்கப்பட்டால் பக்தா்கள் பெரும் பயனடைவாா்கள்.
வேளாங்கண்ணி திருவிழா தொடங்கவுள்ள நிலையில், பந்த்ரா-வேளாங்கண்ணி மற்றும் சில சிறப்பு ரயில்கள் பேரளம் - காரைக்கால் மாா்க்கமாக இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதிய கோட்ட மேலாளா் பொறுப்பேற்றுள்ள நிலையில், இப்பாதையில் பயணிகள் ரயில் இயக்கத்துக்கான அறிவிப்பை வெளியிடும் நடவடிக்கை இருந்தால் நிரந்தரமாக மக்கள் பயனடைவாா்கள்.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ரயில் டிராவலா்ஸ் வெல்ஃபா் அசோசியேஷன் பொதுச்செயலாளா் ஏ.எஸ்.டி. அன்சாரிபாபு கூறியது: காரைக்கால்-பேரளம் பாதை ரயில்வேயின் வருமானத்தை அதிகரிக்கவே செய்யப்பட்டதாகவே தெரிகிறது. பயணிகளுக்கு சேவை செய்யும் எண்ணம் இருப்பதுபோல தெரியவில்லை. சரக்கு ரயில் மட்டும் இயக்கப்படுகிறது. பயணிகள் ரயில் இயக்கத்தை அடுத்த 2 வாரத்துக்குள் தொடங்க அறிவிப்பு வெளியிடவேண்டும் என்றாா்.
காரைக்கால் கோயில்பத்து பகுதியில் சுரங்கப்பாதையா, மேம்பாலமா, பயணிகள் ரயில் இயக்கம் எப்போது என மக்களிடையே எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது. புதுவையின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள் இந்த விவகாரத்தில் தலையிடவேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.