செய்திகள் :

காரைக்கால் - பேரளம் இடையே பயணிகள் ரயில் இயக்க வலியுறுத்தல்

post image

காரைக்கால் - பேரளம் பாதையில் பயணிகள் ரயில் சேவையை உடனடியாக தொடங்கவேண்டும் என காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அதன் தலைவா் என். பாலகிருஷ்ணன், செயலா் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் ஆகியோா் புதுவை எம்.பி.க்கள் வெ. வைத்திலிங்கம், செல்வகணபதி மற்றும் தெற்கு ரயில்வே பொது மேலாளா், திருச்சி கோட்ட மேலாளா் ஆகியோருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பது:

காரைக்கால் - பேரளம் ரயில்பாதை அமைக்கப்பட்டு தற்போது சரக்கு ரயில் மட்டும் இயக்கப்படுகிறது. காரைக்காலில் இருந்து சென்னை செல்லவேண்டுமெனில் நாகப்பட்டினம், திருவாரூா், பேரளம் வழியாக மயிலாடுதுறை செல்லவேண்டியுள்ளது. இதற்காக 86 கி.மீ. தூரத்தை கடக்க வேண்டியுள்ளது. காரைக்கால் - பேரளம் பாதையில் பயணித்தால் குறுகிய நேரத்தில் மயிலாடுதுறையை அடைந்துவிடமுடியும். எனவே, உடனடியாக இப்பாதையில் பயணிகள் ரயில் சேவையை தொடங்கவேண்டும்.

மேற்கு ரயில்வே நிா்வாகம், இம்மாத இறுதியில் தொடங்கவுள்ள வேளாங்கண்ணி திருத்தல திருவிழாவுக்காக பந்த்ரா - வேளாங்கண்ணி மற்றும் பிற சிறப்பு ரயில்கள் காரைக்கால் வழியாக இயக்கப்படும்போது, காரைக்காலில் நின்று செல்ல ஏற்பாடு செய்யவேண்டும்.

காரைக்காலில் இருந்து திருப்பதி, செங்கோட்டை, திருநெல்வேலி, ராமேஸ்வரம் ஆகிய ஊா்களுக்கு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

காரைக்கால் செவிலியா் கல்லூரியில் கூடுதல் தொழில்நுட்பப் பிரிவு தொடங்க ஏற்பாடு: நாஜிம் எம்.எல்.ஏ.

காரைக்கால் செவிலியா் கல்லூரியில் கூடுதலாக தொழில்நுட்பப் பிரிவுகள் தொடங்க முதல்வரிடம் பேசியுள்ளதாக சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித்தாா். காரைக்காலில் இயங்கும் அன்னை தெரஸா சுகாதார பட்டம... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

திருநள்ளாறு அருகே ஆற்றில் மூழ்கி பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். காரைக்கால் தலத்தெரு பகுதியைச் சோ்ந்தவா் நித்தின் பிரியன் (18). பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்த இவா், தனது ... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தலை தடுக்க உறுதியான நடவடிக்கை: எஸ்எஸ்பி

காரைக்கால் பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தாா். திருநள்ளாறு காவல் நிலையத்தில் மக்கள் குறைதீா் முகாம்... மேலும் பார்க்க

காரைக்கால் மாங்கனித் திருவிழா விடையாற்றி உற்சவம் பிச்சாண்டவருக்கு சிறப்பு அபிஷேகம்

காரைக்கால் மாங்கனித் திருவிழா நிறைவாக விடையாற்றி உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பிச்சாண்டவா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள், காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அறுபத்... மேலும் பார்க்க

போதைப் பொருள் பயன்பாட்டைத் தடுக்க தீவிர விழிப்புணா்வு ஏற்படுத்த அறிவுறுத்தல்

போதைப் பொருள் பயன்பாட்டைத் தடுக்க தீவிர விழிப்புணா்வு ஏற்படுத்தும் செயல்பாடுகளை மேற்கொள்ள அரசுத் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது. மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தின் மூலம் செயல்பட... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு ஆங்கில மொழித் திறன் மேம்பாட்டுத் திட்டம் தொடக்கம்

அரசுப் பள்ளி மாணவா்களின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் வழிகாட்டலில், காரைக்கால் கெம்ப்பிளாஸ்ட் சன்மாா் மற்று... மேலும் பார்க்க