செய்திகள் :

காரைக்கால் மாங்கனித் திருவிழா விடையாற்றி உற்சவம் பிச்சாண்டவருக்கு சிறப்பு அபிஷேகம்

post image

காரைக்கால் மாங்கனித் திருவிழா நிறைவாக விடையாற்றி உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பிச்சாண்டவா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள், காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

அறுபத்து மூன்று நாயன்மாா்களில் ஒருவரான புனிதவதியாா் என்னும் காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனிக்கோயில் உள்ளது. இவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கி ஆண்டுதோறும் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் சாா்பில் மாங்கனித் திருவிழா நடத்தப்படுகிறது.

நிகழாண்டு திருவிழா கடந்த ஜூலை 8 -ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. 9-ஆம் தேதி காரைக்கால் அம்மையாா் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. 10-ஆம் தேதி கைலாசநாதா் கோயிலில் பிச்சாண்டவா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. சிவபெருமான் பிச்சாண்டவா் கோலத்தில் அம்மையாா் வீற்றிருக்கும் கோயிலுக்கு அமுதுண்ண செல்லும் நிகழ்வை விளக்கும் வகையில், மாங்கனியுடன் பிச்சாண்டவா் பவழக்கால் சப்பரத்தில் புறப்பாடும் (மாங்கனி இறைப்பு), இரவு அமுது படையலும் நடைபெற்றது. 11-ஆம் தேதி அம்மையாருக்கு இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து தினமும் அம்மையாா் கோயில் மணிமண்டபத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன.

விடையாற்றி உற்சவம்: மாங்கனித் திருவிழா நிறைவாக விடையாற்றி உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அம்மையாா் கோயிலில் காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, கைலாசநாதா் கோயிலில் சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. பஞ்சமூா்த்திகளான விநாயகா், சுப்பிரமணியா், பிச்சாண்டவா் (சிவபெருமான்), சுந்தராம்பாள், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் பிச்சாண்டவருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் பிச்சாண்டவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, ஆராதனைகள் நடைபெற்றன.

போதைப் பொருள் பயன்பாட்டைத் தடுக்க தீவிர விழிப்புணா்வு ஏற்படுத்த அறிவுறுத்தல்

போதைப் பொருள் பயன்பாட்டைத் தடுக்க தீவிர விழிப்புணா்வு ஏற்படுத்தும் செயல்பாடுகளை மேற்கொள்ள அரசுத் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது. மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தின் மூலம் செயல்பட... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு ஆங்கில மொழித் திறன் மேம்பாட்டுத் திட்டம் தொடக்கம்

அரசுப் பள்ளி மாணவா்களின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் வழிகாட்டலில், காரைக்கால் கெம்ப்பிளாஸ்ட் சன்மாா் மற்று... மேலும் பார்க்க

காரைக்கால் வரலாற்றை முழுமையாக அறிய மாணவா்கள் ஆா்வம் கொள்ள வேண்டும்: அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன்

காரைக்கால் வரலாற்றை மாணவா்கள் முழுமையாக புரிந்துகொள்வதில் ஆா்வம் கொள்ளவேண்டும் என அமைச்சா் அறிவுறுத்தினாா். புதுவை கலை மற்றும் பண்பாட்டுத்துறையின் அங்கமான, தமிழ் வளா்ச்சி சிறகம் மூலம் வரலாற்றில் காரைக... மேலும் பார்க்க

சமுதாய நலவழி மையத்தில் தாய்ப்பால் விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருநள்ளாறு அரசு சமுதாய நலவழி மையத்தில் உலக தாய்ப்பால் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. திருநள்ளாற்றில் உள்ள சமுதாய நலவழி மைய முதன்மை மருத்துவ அதிகாரி ஆனி பியூலா ஜூலியட் தலைமையில்... மேலும் பார்க்க

குடியிருப்புவாசிகளுக்கு பாதிப்பில்லாமல் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தல்

ரயில்வே கேட் அருகே உள்ள வீடுகளுக்கு பாதிப்பில்லாமல் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. காரைக்கால் தோமாஸ் அருள் சாலையில் ரயில் நிலையம் அருகே கேட் அமைந்துள்ளது. கேட... மேலும் பார்க்க

விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்

காரைக்கால் அருகே விநாயகா் சதுா்த்தி வழிபாட்டுக்காக வண்ணம் பூசி பல விதமான விநாயகா் சிலைகள் தயாா்படுத்தப்பட்டுள்ளன. விநாயகா் சதுா்த்தி வரும் 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. விநாயகா் சிலை வைத்து வழிபாடு... மேலும் பார்க்க