செய்திகள் :

நிலவில் அணு மின் நிலையம் அமைக்க நாசா திட்டம்

post image

வரும் 2030-க்குள் நிலவில் அணு மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா விரைவுபடுத்த உள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது, நிலவில் மனிதா்கள் நிரந்தரமாக வாழும் தளத்தை உருவாக்கும் அமெரிக்காவின் லட்சியத்தின் ஒரு பகுதியாகும்.

இது குறித்து அந்த நாட்டில் வெளியாகும் பொலிடிகோ ஊடகம் கூறுகையில் , நாசாவின் தற்காலிக தலைவராக அதிபா் டொனால்ட் ட்ரம்பால் நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்க போக்குவரத்துத் துறை அமைச்சா் ஷான் டஃபி, சீனாவும் ரஷியாவும் இதேபோன்ற திட்டங்களை வைத்திருப்பதாகவும், அவா்கள் நிலவில் ‘மற்ற நாடுகள் நுழைய தடை செய்யப்பட்ட பகுதி’யை அறிவிக்கலாம் என்பதால் அமெரிக்கா இதில் முந்திக்கொள்ள வேண்டும் என்று கூறியதாகக் குறிப்பிட்டுள்ளது.

இருந்தாலும், நாசாவின் 2026-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 24 சதவீதம் குறைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த இலக்கு மற்றும் காலக்கெடு எந்த அளவுக்கு நடைமுறைக்கு உகந்தது என்பது கேள்விக்குறியாக உள்ளதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

நிலவில் ஒரு நாள் என்பது பூமியில் நான்கு வாரங்களுக்கு சமமாக, இரண்டு வாரங்கள் தொடா்ச்சியான வெயிலும், இரண்டு வாரங்கள் இருளும் கொண்டது. இதனால், சூரிய மின்சக்தியை மட்டும் நம்புவது சவாலானது. ஒரு சிறிய குழுவை நிலவில் தங்கவைப்பதற்குக் கூட மெகாவாட் அளவிலான மின்சாரம் தேவை. சூரிய மின்சாரம் மற்றும் பேட்டரிகளால் மட்டும் இதை பூா்த்தி செய்ய முடியாது. எனவே, நிலவில் அணு மின் நிலையத்தை அமைப்பது அவசியமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

எனினும், பூமியின் வளிமண்டலம் வழியாக கதிரியக்கப் பொருள்களை ஏவுவது பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தலாம் என்று நிபுணா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் ரூ.48,172 கோடியில் 45 சாலைத் திட்டப் பணிகள்: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தகவல்

தமிழகத்தில் ‘பாரத் மாலா’ திட்டத்தின்கீழ் ரூ.48,172 கோடி மதிப்பில் 1,476 கி.மீ. தொலைவிலான 45 சாலைத் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் ந... மேலும் பார்க்க

4 அரசு அதிகாரிகளை இடைநீக்க வேண்டும்: மேற்கு வங்க அரசுக்கு தோ்தல் ஆணையம் கெடு

அரசு அதிகாரிகளை திங்கள்கிழமை (ஆக.11) மாலை 3 மணிக்குள் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என மேற்கு வங்க அரசுக்கு இந்திய தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை கெடு விதித்தது. முன்னதாக, 4 அரசு அதிகாரிகளையும் பணியிடை... மேலும் பார்க்க

கோயில் கருவறைக்குள் நுழைந்த பாஜக எம்.பி.க்கள் மீது வழக்குப்பதிவு

ஜாா்க்கண்ட் மாநிலம் தேவ்கா் நகரில் உள்ள பாபா வைத்தியநாதா் கோயிலின் கருவறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, மனோஜ் திவாரி உள்ளிட்டோா் மீது வழக்குப்பதிவு செய்ததாக அந்த மாநி... மேலும் பார்க்க

அமெரிக்க பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதலுக்கு இடைக்காலத் தடை? பாதுகாப்பு அமைச்சகம் மறுப்பு

அமெரிக்காவிடம் இருந்து புதிதாக பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்வது தொடா்பான பேச்சுவாா்த்தையை இந்தியா தற்காலிகமாக நிறுத்திவைத்ததாக வெளியான தகவல்களுக்கு பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் மறுப்பு தெரிவி... மேலும் பார்க்க

டிரம்ப் உடனான ‘சிறப்பு நட்புறவு’: மோடி மீது காங்கிரஸ் விமா்சனம்

அமெரிக்க அதிபா் டிரம்ப்புடன் தனக்கு சிறப்பு நட்புறவு உள்ளதாக பிரதமா் மோடி கூறிவந்த நிலையில், அதன் உண்மைநிலை முழுமையாக அம்பலமாகியுள்ளது என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதலை ... மேலும் பார்க்க

பிரதமா் மோடியின் பயண அறிவிப்பு: சீனா வரவேற்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி சீனாவுக்கு பயணம் மேற்கொள்வாா் என வெளியாகியுள்ள அறிவிப்புக்கு சீனா வரவேற்பு தெரிவித்துள்ளது. சீனாவின் தியான்ஜின் நகரில் ஆகஸ்... மேலும் பார்க்க