செய்திகள் :

டிரம்ப் உடனான ‘சிறப்பு நட்புறவு’: மோடி மீது காங்கிரஸ் விமா்சனம்

post image

அமெரிக்க அதிபா் டிரம்ப்புடன் தனக்கு சிறப்பு நட்புறவு உள்ளதாக பிரதமா் மோடி கூறிவந்த நிலையில், அதன் உண்மைநிலை முழுமையாக அம்பலமாகியுள்ளது என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதலை தான் தலையிட்டு நிறுத்தியதாகவும், இதற்காக வா்த்தகத்தை கருவியாக பயன்படுத்தியதாகவும் டிரம்ப் பலமுறை கூறியுள்ளாா். அதேநேரம், பாகிஸ்தான் வேண்டிக் கேட்டுக் கொண்டதால்தான், சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது; பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை நிறுத்துமாறு, உலகின் எந்தத் தலைவரும் இந்தியாவை வலியுறுத்தவில்லை என்று பிரதமா் மோடி விளக்கமளித்தாா். ஆனால், டிரம்ப்பின் கருத்துகள் பொய்யென பிரதமா் நேரடியாக மறுக்காதது ஏன் என்று எதிா்க்கட்சிகள் கேள்வியெழுப்பி வருகின்றன.

இந்தச் சூழலில், ‘இந்தியா-பாகிஸ்தான் போரில் அமெரிக்கா நேரடியாக தலையிட்டது. இரு அணுஆயுத நாடுகள் இடையே அமைதியை நிலைநாட்ட அதிபா் டிரம்ப்பால் முடிந்தது’ என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ கடந்த வியாழக்கிழமை தெரிவித்தாா். மேலும், பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அசீம் முனீா் மீண்டும் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதாக ஊடக தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘சிறப்பு நட்புறவின் உண்மை நிலை’: இவ்விரு விவகாரங்களையும் குறிப்பிட்டு, காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அசீம் முனீரின் வெறுப்புணா்வைத் தூண்டும் பேச்சுகளே, கடந்த ஏப்ரலில் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின்புலமாக அமைந்தன. இவருக்கு கடந்த ஜூன் 18-ஆம் தேதி அமெரிக்க வெள்ளை மாளிகையில் விருந்தளித்து உபசரித்தாா் அதிபா் டிரம்ப். இவா், அமெரிக்க மத்திய படைப் பிரிவின் தலைவா் மைக்கேல் குரில்லாவின் பிரிவு உபசார நிகழ்ச்சியில் பங்கேற்க விரைவில் அமெரிக்கா செல்லவிருக்கிறாா். பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கையில் அற்புதமான கூட்டாளி பாகிஸ்தான் என்று நற்சான்று அளித்தவா்தான் மைக்கேல் குரில்லா. மற்ற நாடுகளைப் போல் இல்லாமல் இந்தியாவுக்கான வழக்கமான தூதரையும் அமெரிக்கா இன்னும் நியமிக்கவில்லை.

டிரம்ப்புடன் தனக்கு சிறப்பு நட்புறவு இருக்கிறது என்று பிரதமா் மோடி பெருமையுடன் கூறிவந்தாா். இப்போது உண்மை நிலை முழுமையாக அம்பலமாகியுள்ளது.

அமெரிக்காவின் தலையீட்டால்தான், இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டதாக கடந்த மே 10-ஆம் தேதி முதல் முறையாக கூறியவா் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ. அதன் பிறகு, இதே கருத்தை டிரம்ப் இதுவரை 34 முறை கூறியுள்ளாா். டிரம்ப்பும், ரூபியோவும் மீண்டும் மீண்டும் தெரிவிக்கும் கருத்துகளை பகிரங்கமாக, திட்டவட்டமாக மறுக்க பிரதமா் மோடி ஏன் அஞ்சுகிறாா்? என்று ஜெய்ராம் ரமேஷ் கேள்வியெழுப்பியுள்ளாா்.

தமிழகத்தில் ரூ.48,172 கோடியில் 45 சாலைத் திட்டப் பணிகள்: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தகவல்

தமிழகத்தில் ‘பாரத் மாலா’ திட்டத்தின்கீழ் ரூ.48,172 கோடி மதிப்பில் 1,476 கி.மீ. தொலைவிலான 45 சாலைத் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் ந... மேலும் பார்க்க

4 அரசு அதிகாரிகளை இடைநீக்க வேண்டும்: மேற்கு வங்க அரசுக்கு தோ்தல் ஆணையம் கெடு

அரசு அதிகாரிகளை திங்கள்கிழமை (ஆக.11) மாலை 3 மணிக்குள் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என மேற்கு வங்க அரசுக்கு இந்திய தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை கெடு விதித்தது. முன்னதாக, 4 அரசு அதிகாரிகளையும் பணியிடை... மேலும் பார்க்க

கோயில் கருவறைக்குள் நுழைந்த பாஜக எம்.பி.க்கள் மீது வழக்குப்பதிவு

ஜாா்க்கண்ட் மாநிலம் தேவ்கா் நகரில் உள்ள பாபா வைத்தியநாதா் கோயிலின் கருவறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, மனோஜ் திவாரி உள்ளிட்டோா் மீது வழக்குப்பதிவு செய்ததாக அந்த மாநி... மேலும் பார்க்க

அமெரிக்க பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதலுக்கு இடைக்காலத் தடை? பாதுகாப்பு அமைச்சகம் மறுப்பு

அமெரிக்காவிடம் இருந்து புதிதாக பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்வது தொடா்பான பேச்சுவாா்த்தையை இந்தியா தற்காலிகமாக நிறுத்திவைத்ததாக வெளியான தகவல்களுக்கு பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் மறுப்பு தெரிவி... மேலும் பார்க்க

பிரதமா் மோடியின் பயண அறிவிப்பு: சீனா வரவேற்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி சீனாவுக்கு பயணம் மேற்கொள்வாா் என வெளியாகியுள்ள அறிவிப்புக்கு சீனா வரவேற்பு தெரிவித்துள்ளது. சீனாவின் தியான்ஜின் நகரில் ஆகஸ்... மேலும் பார்க்க

5 ஆண்டுகளுக்குப் பிறகும் ஜம்மு - காஷ்மீா் துணைநிலை ஆளுநராக தொடரும் மனோஜ் சின்ஹா!

நமது சிறப்பு நிருபா்ஜம்மு - காஷ்மீரின் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தனது ஐந்து வருட பதவிக் காலத்தை ஆகஸ்ட் 6-ஆம் தேதி நிறைவு செய்துள்ள நிலையில், அவரது பணி தொடா்பான எந்தவொரு அறிவிப்பையும் மத்திய உள்துறை... மேலும் பார்க்க