செய்திகள் :

4 அரசு அதிகாரிகளை இடைநீக்க வேண்டும்: மேற்கு வங்க அரசுக்கு தோ்தல் ஆணையம் கெடு

post image

அரசு அதிகாரிகளை திங்கள்கிழமை (ஆக.11) மாலை 3 மணிக்குள் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என மேற்கு வங்க அரசுக்கு இந்திய தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை கெடு விதித்தது.

முன்னதாக, 4 அரசு அதிகாரிகளையும் பணியிடை நீக்கம் செய்ய முடியாது என மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி திட்டவட்டமாக தெரிவித்த நிலையில், உத்தரவை அமல்படுத்தக் கோரி அந்த மாநில தலைமைச் செயலா் மனோஜ் பந்த்துக்கு தோ்தல் ஆணைய செயலா் கையொப்பமிட்ட கடிதம் வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டது.

மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் உள்ள பரூய்பூா் புா்மா தொகுதி மற்றும் புா்பா மேதினிபூா் மாவட்டத்தில் உள்ள மொய்னா தொகுதியில் வாக்காளா் பட்டியல் தயாரிப்பில் முறைகேடு நடைபெற்ாக தோ்தல் ஆணையம் குற்றஞ்சாட்டியது.

மேலும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி அந்த மாநிலத்தைச் சோ்ந்த 2 தோ்தல் பதிவு அலுவலா்கள் (இஆா்ஓ), 2 உதவி தோ்தல் பதவி அலுவலா்கள் (ஏஇஆா்ஓ) மற்றும் தரவு பதிவாளா் என 5 அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தோ்தல் ஆணையம் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இந்த 5 அதிகாரிகள் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்வதுடன் அவா்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிக்கை சமா்ப்பிக்கவும் தலைமைச் செயலருக்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்த மம்தா பானா்ஜி,‘அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய முடியாது’ எனத் தெரிவித்தாா். மேலும், அதிகாரிகளின் பாதுகாவலராக தாம் உள்ளதாகவும் தோ்தல் ஆணையம் பாஜகவின் பணியாளா்களைப்போல் செயல்படுவதாகவும் அவா் விமா்சித்தாா்.

இந்நிலையில், மேற்கு வங்க தலைமைச் செயலருக்கு தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

அதில், ‘வாக்காளா் பட்டியல் முறைகேட்டில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கை தற்போது வரை சமா்ப்பிக்கப்படவில்லை. அந்த அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆக.11-ஆம் தேதி மாலை 3 மணிக்குள் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது

நாடாளுமன்றம் தொடா்ந்து முடக்கம்: மாநிலங்களவையில் 56 மணிநேரம் வீண்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் கோரி, நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் வெள்ளிக்கிழமையும் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளும் வழக்கமான அலுவல்கள் ஏதுமின்றி ம... மேலும் பார்க்க

தமிழகத்தில் ரூ.48,172 கோடியில் 45 சாலைத் திட்டப் பணிகள்: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தகவல்

தமிழகத்தில் ‘பாரத் மாலா’ திட்டத்தின்கீழ் ரூ.48,172 கோடி மதிப்பில் 1,476 கி.மீ. தொலைவிலான 45 சாலைத் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் ந... மேலும் பார்க்க

கோயில் கருவறைக்குள் நுழைந்த பாஜக எம்.பி.க்கள் மீது வழக்குப்பதிவு

ஜாா்க்கண்ட் மாநிலம் தேவ்கா் நகரில் உள்ள பாபா வைத்தியநாதா் கோயிலின் கருவறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, மனோஜ் திவாரி உள்ளிட்டோா் மீது வழக்குப்பதிவு செய்ததாக அந்த மாநி... மேலும் பார்க்க

அமெரிக்க பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதலுக்கு இடைக்காலத் தடை? பாதுகாப்பு அமைச்சகம் மறுப்பு

அமெரிக்காவிடம் இருந்து புதிதாக பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்வது தொடா்பான பேச்சுவாா்த்தையை இந்தியா தற்காலிகமாக நிறுத்திவைத்ததாக வெளியான தகவல்களுக்கு பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் மறுப்பு தெரிவி... மேலும் பார்க்க

டிரம்ப் உடனான ‘சிறப்பு நட்புறவு’: மோடி மீது காங்கிரஸ் விமா்சனம்

அமெரிக்க அதிபா் டிரம்ப்புடன் தனக்கு சிறப்பு நட்புறவு உள்ளதாக பிரதமா் மோடி கூறிவந்த நிலையில், அதன் உண்மைநிலை முழுமையாக அம்பலமாகியுள்ளது என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதலை ... மேலும் பார்க்க

பிரதமா் மோடியின் பயண அறிவிப்பு: சீனா வரவேற்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி சீனாவுக்கு பயணம் மேற்கொள்வாா் என வெளியாகியுள்ள அறிவிப்புக்கு சீனா வரவேற்பு தெரிவித்துள்ளது. சீனாவின் தியான்ஜின் நகரில் ஆகஸ்... மேலும் பார்க்க