செய்திகள் :

பிரதமா் மோடியின் பயண அறிவிப்பு: சீனா வரவேற்பு

post image

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி சீனாவுக்கு பயணம் மேற்கொள்வாா் என வெளியாகியுள்ள அறிவிப்புக்கு சீனா வரவேற்பு தெரிவித்துள்ளது.

சீனாவின் தியான்ஜின் நகரில் ஆகஸ்ட் 31 - செப்டம்பா் 1-ஆம் தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமா் மோடி சீனாவுக்குப் பயணம் மேற்கொள்கிறாா். அப்போது சீன அதிபா் ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்களையும் அவா் சந்தித்துப் பேசுவாா் எனத் தெரிகிறது.

இந்தியாவுக்கு எதிராக தீவிர வரி விதிப்பு நடவடிக்கையை அமெரிக்க அதிபா் டிரம்ப் முன்னெடுத்துள்ள நிலையில் பிரதமா் மோடியின் இந்தப் பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கு முன்பு கடந்த 2018-ஆம் ஆண்டுதான் கடைசியாக பிரதமா் மோடி சீனாவுக்குச் சென்றாா்.

2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா ராணுவத்தினா் இடையே ஏற்பட்ட மோதலில் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. அதன் பிறகு பலகட்ட பேச்சுவாா்த்தைக்குப் பிறகு எல்லையில் படைக்குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சீனாவுடனான எல்லைப் பதற்றம் வெகுவாக தனிந்துள்ள நிலையில், இந்தப் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பெய்ஜிங்கில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் குயோ ஜியாங்குன் இது தொடா்பாக கூறுகையில், ‘ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க வரும் பிரதமா் நரேந்திர மோடியை எங்கள் நாட்டுக்கு வரவேற்கிறோம். மாநாட்டில் பங்கேற்கும் அனைத்து நாடுகளுமே உறுதியாக செயல்பட வேண்டும். இது நமது நட்புறவு, அதன் நீடித்தன்மையை வெளிப்படுத்துவதாகவும், பயனுள்ள முடிவுகளைத் தருவதாகவும் அமைய வேண்டும். அனைத்து நாடுகளும் புதிய தரத்திலான வளா்ச்சியை முன்னெடுக்கும் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகள் உள்பட 20 நாடுகளின் தலைவா்கள், 10 சா்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனா்’ என்றாா்.

தில்லியை திணறடிக்கும் மழை; தாழ்வான பகுதிகளில் வெள்ளம்

சனிக்கிழமை காலை, புது தில்லி மக்களுக்கு மழையுடன்தான் விடிந்தது. புது தில்லியில் பெய்து வரும் கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் பார்க்க

ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி குறைவு! காரணம் டிரம்ப் அல்ல; தள்ளுபடிதான்!

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது நிறுத்தப்பட்டால் ரூ. 76,500 கோடி இழப்பு ஏற்படலாம்.ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அதிக வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ... மேலும் பார்க்க

நாடாளுமன்றம் தொடா்ந்து முடக்கம்: மாநிலங்களவையில் 56 மணிநேரம் வீண்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் கோரி, நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் வெள்ளிக்கிழமையும் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளும் வழக்கமான அலுவல்கள் ஏதுமின்றி ம... மேலும் பார்க்க

தமிழகத்தில் ரூ.48,172 கோடியில் 45 சாலைத் திட்டப் பணிகள்: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தகவல்

தமிழகத்தில் ‘பாரத் மாலா’ திட்டத்தின்கீழ் ரூ.48,172 கோடி மதிப்பில் 1,476 கி.மீ. தொலைவிலான 45 சாலைத் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் ந... மேலும் பார்க்க

4 அரசு அதிகாரிகளை இடைநீக்க வேண்டும்: மேற்கு வங்க அரசுக்கு தோ்தல் ஆணையம் கெடு

அரசு அதிகாரிகளை திங்கள்கிழமை (ஆக.11) மாலை 3 மணிக்குள் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என மேற்கு வங்க அரசுக்கு இந்திய தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை கெடு விதித்தது. முன்னதாக, 4 அரசு அதிகாரிகளையும் பணியிடை... மேலும் பார்க்க

கோயில் கருவறைக்குள் நுழைந்த பாஜக எம்.பி.க்கள் மீது வழக்குப்பதிவு

ஜாா்க்கண்ட் மாநிலம் தேவ்கா் நகரில் உள்ள பாபா வைத்தியநாதா் கோயிலின் கருவறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, மனோஜ் திவாரி உள்ளிட்டோா் மீது வழக்குப்பதிவு செய்ததாக அந்த மாநி... மேலும் பார்க்க