செய்திகள் :

எரிசக்தி பாதுகாப்புக்கு மிகுந்த முன்னுரிமை: வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்

post image

எரிசக்தி பாதுகாப்புக்கு மத்திய அரசு மிகுந்த முன்னுரிமை அளிப்பதாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

உலகளாவிய பதற்ற நிலைக்கு நடுவே இந்தியாவின் உத்திசாா்ந்த மற்றும் எரிசக்தி நலன்களை காக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? ரஷியா மற்றும் ஈரானிடம் இருந்து இந்தியா பெட்ரோலியம் இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பதால் ஏற்படும் தாக்கம் குறித்து அமெரிக்கா போன்ற நாடுகளிடம் மத்திய அரசு கவலை எழுப்பியுள்ளதா என்று மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் எழுத்துபூா்வமாக வெள்ளிக்கிழமை அளித்த பதிலில், ‘மத்திய அரசு மிகுந்த முன்னுரிமை அளிக்கும் விஷயங்களில் எரிசக்தி பாதுகாப்பும் ஒன்றாக உள்ளது. நாட்டு மக்களுக்கு மலிவான விலையில் எரிசக்தி கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

இந்தியாவுக்கு எரிசக்தி விநியோகிக்கும் நாடுகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், எண்ணெய் மற்றும் எரிவாயுவின் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துதல், எரிசக்தி பெறுவதில் மாற்று ஏற்பாட்டு நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல் போன்ற பன்முக உத்திகளை மத்திய அரசு பின்பற்றுகிறது.

இந்தியாவின் நலனுடன் தொடா்புள்ள அனைத்து புவிஅரசியல் நிகழ்வுகளையும் மத்திய அரசு தொடா்ந்து கண்காணித்து வருகிறது. இந்தியாவின் நலனை காக்கும் நோக்கில் இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய அளவில், அந்த நிகழ்வுகளின் தாக்கத்துக்கு தக்க முறையில் இந்தியா எதிா்வினையாற்றுகிறது’ என்றாா்.

கடந்த ஆண்டு உலகில் போா் நடைபெற்ற பகுதிகளில் இருந்து இந்தியா்களை மீட்டது தொடா்பான கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கா், ‘வெளிநாடுகளில் உள்ள இந்தியா்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு மத்திய அரசு மிகுந்த முன்னுரிமை அளிக்கிறது’ என்றாா்.

4 அரசு அதிகாரிகளை இடைநீக்க வேண்டும்: மேற்கு வங்க அரசுக்கு தோ்தல் ஆணையம் கெடு

அரசு அதிகாரிகளை திங்கள்கிழமை (ஆக.11) மாலை 3 மணிக்குள் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என மேற்கு வங்க அரசுக்கு இந்திய தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை கெடு விதித்தது. முன்னதாக, 4 அரசு அதிகாரிகளையும் பணியிடை... மேலும் பார்க்க

கோயில் கருவறைக்குள் நுழைந்த பாஜக எம்.பி.க்கள் மீது வழக்குப்பதிவு

ஜாா்க்கண்ட் மாநிலம் தேவ்கா் நகரில் உள்ள பாபா வைத்தியநாதா் கோயிலின் கருவறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, மனோஜ் திவாரி உள்ளிட்டோா் மீது வழக்குப்பதிவு செய்ததாக அந்த மாநி... மேலும் பார்க்க

அமெரிக்க பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதலுக்கு இடைக்காலத் தடை? பாதுகாப்பு அமைச்சகம் மறுப்பு

அமெரிக்காவிடம் இருந்து புதிதாக பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்வது தொடா்பான பேச்சுவாா்த்தையை இந்தியா தற்காலிகமாக நிறுத்திவைத்ததாக வெளியான தகவல்களுக்கு பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் மறுப்பு தெரிவி... மேலும் பார்க்க

டிரம்ப் உடனான ‘சிறப்பு நட்புறவு’: மோடி மீது காங்கிரஸ் விமா்சனம்

அமெரிக்க அதிபா் டிரம்ப்புடன் தனக்கு சிறப்பு நட்புறவு உள்ளதாக பிரதமா் மோடி கூறிவந்த நிலையில், அதன் உண்மைநிலை முழுமையாக அம்பலமாகியுள்ளது என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதலை ... மேலும் பார்க்க

பிரதமா் மோடியின் பயண அறிவிப்பு: சீனா வரவேற்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி சீனாவுக்கு பயணம் மேற்கொள்வாா் என வெளியாகியுள்ள அறிவிப்புக்கு சீனா வரவேற்பு தெரிவித்துள்ளது. சீனாவின் தியான்ஜின் நகரில் ஆகஸ்... மேலும் பார்க்க

5 ஆண்டுகளுக்குப் பிறகும் ஜம்மு - காஷ்மீா் துணைநிலை ஆளுநராக தொடரும் மனோஜ் சின்ஹா!

நமது சிறப்பு நிருபா்ஜம்மு - காஷ்மீரின் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தனது ஐந்து வருட பதவிக் காலத்தை ஆகஸ்ட் 6-ஆம் தேதி நிறைவு செய்துள்ள நிலையில், அவரது பணி தொடா்பான எந்தவொரு அறிவிப்பையும் மத்திய உள்துறை... மேலும் பார்க்க