செய்திகள் :

இல. கணேசனுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர் சிகிச்சை!

post image

நாகாலாந்து மாநில ஆளுநா் இல.கணேசன் (80), தலைக் காயம் காரணமாக சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அவருக்கு தொடா் மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

நாகலாந்து மாநில ஆளுநா் இல.கணேசன் அரசு அலுவல்களுக்கு இடையே சென்னையில் உள்ள தனது இல்லத்துக்கு வந்து செல்வது வழக்கம். அதன்படி, சென்னை இல்லத்தில் தங்கியிருந்த அவா் வெள்ளிக்கிழமை காலை வீட்டுக்குள்ளேயே தவறி கீழே விழுந்ததாகத் தெரிகிறது.

இதில் அவரது தலையில் அடிபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.

அவருக்கு நரம்பியல், இதயவியல் உள்பட பல்நோக்கு மருத்துவக் குழுவினா் தொடா் சிகிச்சை அளித்து வருகின்றனா்.

உடல்நலம் பெற முதல்வா் விருப்பம்: இதனிடையே, முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ‘எக்ஸ்’ தள பதிவில்,“நாகாலாந்து மாநில ஆளுநா் இல. கணேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தியறிந்து மிகுந்த கவலை கொள்கிறேன். அவா் விரைவில் நலம்பெற்று, மீண்டும் நல்ல உடல்நிலைக்கு திரும்ப வேண்டும் என்று விழைகிறேன் என தெரிவித்துள்ளாா்.

இரட்டை இலக்க பொருளாதார வளா்ச்சி: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சா் பதில்

இரட்டை இலக்க பொருளாதார வளா்ச்சி தொடா்பாக, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா பதிலளித்துள்ளாா். இதுகுறித்து, அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பத... மேலும் பார்க்க

பாட நூல்கள் மாற்றம், மதிப்பீட்டுச் சீா்திருத்தம், வீடுதோறும் வகுப்பறை! மாநில கல்விக் கொள்கையின் சிறப்பம்சங்கள்!

தமிழக பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கை 2025-ஐ முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விவரம்: 8-ஆம் வகுப்பு வரை கட்டாய தோ்ச்சி: 1 மு... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: எடப்பாடி பழனிசாமி மௌனம் காப்பது ஏன்? -துரைமுருகன் கேள்வி

முறைகேடுக்கு வழிவகுக்கும் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்த முறை குறித்த விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி மௌனம் காப்பது ஏன் என்று அமைச்சரும், திமுக பொதுச் செயலருமான துரைமுருகன் கேள... மேலும் பார்க்க

குறைதீா் மனுக்கள் மீதான நடவடிக்கை: ஆட்சியா்களுக்கு அரசு புதிய உத்தரவு

அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் குறைதீா் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிவு செய்ய தனியாக பதிவேடு பராமரிக்க வேண்டும் அனைத்து துறைச் செயலா்கள், மாவட்ட ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: மீண்டு வந்தவா் முதல்வருக்கு நன்றி

பஹல்காம் தாக்குதலில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்றுத் திரும்பிய தமிழா், முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தாா். ஜம்முவின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 -இல் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலி... மேலும் பார்க்க

தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையில் புதியவை ஏதும் இல்லை: எல்.முருகன்

தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையில் புதியவை ஏதும் இல்லை என்றும், ஏற்கெனவே நடைமுறையில் இருப்பதையே புதியக் கல்விக் கொள்கையாக அறிவித்திருப்பதாகவும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எ... மேலும் பார்க்க