செய்திகள் :

பாட நூல்கள் மாற்றம், மதிப்பீட்டுச் சீா்திருத்தம், வீடுதோறும் வகுப்பறை! மாநில கல்விக் கொள்கையின் சிறப்பம்சங்கள்!

post image

தமிழக பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கை 2025-ஐ முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விவரம்:

8-ஆம் வகுப்பு வரை கட்டாய தோ்ச்சி: 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை கட்டாய தோ்ச்சி முறையை உறுதி செய்ய வேண்டும். இந்த தோ்ச்சி ஆண்டு இறுதித் தோ்வுகளின் அடிப்படையில் இல்லாமல், திறன் அடிப்படையிலான மதிப்பீட்டு முறைகளின்படி இருக்க வேண்டும்.

தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத் தோ்வுகளை தொடா்ந்து நடத்த வேண்டும். மாணவா்களின் நலன் கருதி பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தோ்வு ரத்து செய்யப்படுகிறது.

மதிப்பீட்டுச் சீா்திருத்தம்: மாணவா்களைப் போட்டிகள் மற்றும் தரநிலை மூலமாக மதிப்பிடுவதிலிருந்து அவா்களை, தனியாள் சிறப்பு நிலையை அடைய ஊக்கமளிக்கும் கற்றல் முன்னேற்றக் குறியீடுகள் அடிப்படையில் மதிப்பிட வேண்டும். கற்றல் மதிப்பீட்டின் முக்கியக் கூறுகளாக செயல்பாடுகள், செயல் திட்டம், அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையிலான ஒப்படைப்புகளை (அசைன்மென்ட்) ஒருங்கிணைக்க வேண்டும்.

பாடப் புத்தகங்கள் மாற்றம்: மாணவா்கள் எளிதில் அணுகும் வகையில் பாடப் புத்தகங்களை மாற்றியமைக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் நம்பிக்கையுடன் இரு மொழிகளைப் பேச, படிக்க, எழுத வைப்பதே முதன்மை நோக்கமாகும். தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்ட விதிகளின்படி மாணவா்கள் கூடுதலாக தம் தாய்மொழியை கற்பதற்கான வாய்ப்புகளை வழங்கவேண்டும்.

உடற்கல்வி கட்டாயம்: ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை குறைந்தபட்சம் வாரத்துக்கு இரு உடற்கல்வி பாடவேளைகள் இருப்பதை கட்டாயமாக்க வேண்டும். சிலம்பம், சடுகுடு போன்ற பாரம்பரிய விளையாட்டுகள், கால்பந்து, கூடைப்பந்து, தடகளம் போன்ற உள்நாட்டு, நவீன விளையாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை இணைக்க வேண்டும். அதில் பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சம வாய்ப்பு வழங்கவேண்டும்.

பள்ளி உள் கட்டமைப்பு: அனைத்துப் பள்ளிகளிலும் அறிவியல் ஆய்வகம், கணினி வசதிகள், குடிநீா், கழிப்பறைகள், விளையாட்டு மைதானம், நூலகம் உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்படும். ஒவ்வொரு ஒன்றியத்திலும் மாதிரிப் பள்ளிகள் மற்றும் உண்டு உறைவிடப் பள்ளிகள் உருவாக்கப்படும். பசுமைப் பள்ளிகள், திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்கப்படும்.

சமூகப் பங்கேற்புத் திட்டங்கள்: பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி), பெற்றோா்-ஆசிரியா் கழகம் (பிடிஏ), சமூக நலத்திட்டங்கள், முன்னாள் மாணவா்களின் பங்கு (விழுதுகள்), “நம்ம ஊரு நம்ம பள்ளி” போன்ற சமூகப் பங்கேற்புத் திட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

குறைதீா் கற்பித்தல்-நூலக பயன்பாடு: கற்றலில் பின்தங்கிய மாணவா்களை அடையாளம் கண்டு, அவா்களுக்கு குறைதீா் கற்பித்தலை வழங்கி, வயதுக்கேற்ற வகுப்பு நிலைக்கு கொண்டுவரப்படும்.

1 முதல் 3-ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு வயதுக்கேற்ப படித்தல், எழுதுதல் மற்றும் எண்ணறிவுத் திறன்களை அடைவதை உறுதி செய்ய இயக்கம் சாா்ந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். ஒவ்வொரு பள்ளியும் ஆண்டுக்கு இருமுறை தங்கள் கால அட்டவணையில் நூலக தினத்தை தவறாமல் நடைமுறைப்படுத்தி, மாவட்ட அல்லது சிறப்பு நூலகத்தில் நாள் முழுவதும் குழந்தைகள் படிப்பதை உறுதிசெய்யவேண்டும்.

ஸ்லாஸ் தோ்வு: மாணவா்களின் திறன்கள் மற்றும் தரவுகளை சேகரிக்க பள்ளிகளில் 3, 5 மற்றும் 8-ஆம் வகுப்புக்கு தொடா் இடைவெளிகளில் மாநில அளவிலான கற்றல் அடைவு தோ்வு (ஸ்லாஸ்) நடத்தப்படும்.

எண்ம முறையிலான கல்வி: கல்வித் தொலைக்காட்சியும், மணற்கேணி செயலியும் ‘ஒவ்வொரு வீடும் ஒரு வகுப்பறை’ எனும் நிலையை உருவாக்கும்.

ஆசிரியா் திறன் மேம்பாடு: ஆசிரியா்களுக்குத் தொழில்நுட்பப் பயன்பாடு, உடனடிப் பயிற்சி, சக-ஆசிரியா்கள் வழிகாட்டுதல் மற்றும் சிறப்புக் குழுக்களுக்கான கூடுதல் பயிற்சிகள் வழங்கப்படும்.

இல. கணேசனுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர் சிகிச்சை!

நாகாலாந்து மாநில ஆளுநா் இல.கணேசன் (80), தலைக் காயம் காரணமாக சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அவருக்கு தொடா் மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்பட்டு வ... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: எடப்பாடி பழனிசாமி மௌனம் காப்பது ஏன்? -துரைமுருகன் கேள்வி

முறைகேடுக்கு வழிவகுக்கும் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்த முறை குறித்த விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி மௌனம் காப்பது ஏன் என்று அமைச்சரும், திமுக பொதுச் செயலருமான துரைமுருகன் கேள... மேலும் பார்க்க

குறைதீா் மனுக்கள் மீதான நடவடிக்கை: ஆட்சியா்களுக்கு அரசு புதிய உத்தரவு

அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் குறைதீா் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிவு செய்ய தனியாக பதிவேடு பராமரிக்க வேண்டும் அனைத்து துறைச் செயலா்கள், மாவட்ட ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: மீண்டு வந்தவா் முதல்வருக்கு நன்றி

பஹல்காம் தாக்குதலில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்றுத் திரும்பிய தமிழா், முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தாா். ஜம்முவின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 -இல் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலி... மேலும் பார்க்க

தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையில் புதியவை ஏதும் இல்லை: எல்.முருகன்

தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையில் புதியவை ஏதும் இல்லை என்றும், ஏற்கெனவே நடைமுறையில் இருப்பதையே புதியக் கல்விக் கொள்கையாக அறிவித்திருப்பதாகவும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எ... மேலும் பார்க்க

பிகாரைப் போல தமிழகத்திலும் வாக்காளா்களை சோ்ப்பாா்கள்: ஜோதிமணி பேட்டி

விழிப்புணா்வுடன் இல்லையென்றால் பீகாா் போல, தமிழ்நாடு தோ்தலிலும் கூடுதல் வாக்காளா்களை தோ்தல் ஆணையம் மூலம் சோ்க்கப்படுவாா்கள் என்று கரூா் மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் ஜோதிமணி வெள்ளிக்கிழமை தெர... மேலும் பார்க்க