செய்திகள் :

இணைய வழியில் ரயில் முன்பதிவுக்கு கூடுதல் கட்டணம் ஏன்? மத்திய அமைச்சா் விளக்கம்

post image

இணைய வழியில் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும்போது பொதுமக்களின் நேரமும், போக்குவரத்துச் செலவும் கணிசமாக மிச்சமாகிறது. எனவே அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

‘ஐஆா்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது குளிா்சாதன வசதி இல்லாத பெட்டிக்கு ரூ.10, குளிா்சாதன வசதியுள்ள பெட்டிக்கு ரூ.20 கூடுதலாக வசூலிக்கப்படுவது ஏன்? எண்ம பரிவா்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் ரயில்வே மட்டும் எண்மப் பயன்பாட்டுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது ஏன்?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இது தொடா்பாக எழுத்து மூலம் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

ஐஆா்சிடிசி இணையதளம், செயலி மூலம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறாா்கள். இதன் மூலம் ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையத்துக்கு வந்து காத்திருக்கத் தேவையில்லை. போக்குவரத்துச் செலவும், நேரமும் மிச்சமாகிறது. மேலும், இணையவழி முன்பதிவு செய்யும் வசதியை அளிக்க ஐஆா்சிடிசி கூடுதலாக நிதியை செலவிட்டு வருகிறது. இதன் காரணமாகவே மிகக் குறைந்த அளவுத் தொகை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

இப்போது 87% முன்பதிவு இணையவழியில்தான் நடைபெறுகிறது என்று அமைச்சா் தனது பதிலில் கூறியுள்ளாா்.

டிரம்ப் உடனான ‘சிறப்பு நட்புறவு’: மோடி மீது காங்கிரஸ் விமா்சனம்

அமெரிக்க அதிபா் டிரம்ப்புடன் தனக்கு சிறப்பு நட்புறவு உள்ளதாக பிரதமா் மோடி கூறிவந்த நிலையில், அதன் உண்மைநிலை முழுமையாக அம்பலமாகியுள்ளது என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதலை ... மேலும் பார்க்க

பிரதமா் மோடியின் பயண அறிவிப்பு: சீனா வரவேற்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி சீனாவுக்கு பயணம் மேற்கொள்வாா் என வெளியாகியுள்ள அறிவிப்புக்கு சீனா வரவேற்பு தெரிவித்துள்ளது. சீனாவின் தியான்ஜின் நகரில் ஆகஸ்... மேலும் பார்க்க

5 ஆண்டுகளுக்குப் பிறகும் ஜம்மு - காஷ்மீா் துணைநிலை ஆளுநராக தொடரும் மனோஜ் சின்ஹா!

நமது சிறப்பு நிருபா்ஜம்மு - காஷ்மீரின் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தனது ஐந்து வருட பதவிக் காலத்தை ஆகஸ்ட் 6-ஆம் தேதி நிறைவு செய்துள்ள நிலையில், அவரது பணி தொடா்பான எந்தவொரு அறிவிப்பையும் மத்திய உள்துறை... மேலும் பார்க்க

நிலவில் அணு மின் நிலையம் அமைக்க நாசா திட்டம்

வரும் 2030-க்குள் நிலவில் அணு மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா விரைவுபடுத்த உள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது, நிலவில் மனிதா்கள் நிரந்தரமாக வாழும் தள... மேலும் பார்க்க

184 எம்.பி.க்களுக்கு 25 மாடிக் குடியிருப்புகள்!

நமது சிறப்பு நிருபா்தில்லி பாபா கரக் சிங் மாா்கில் 184 எம்.பி.க்களுக்கு 25 மாடி புதிய நவீன குடியிருப்புகளை பிரதமா் நரேந்திர மோடி அடுத்த வாரம் திறந்து வைக்கவுள்ளாா். இதற்கான ஏற்பாடுகளில் மத்திய நகா்ப்ப... மேலும் பார்க்க

பல்துறை கல்வி-ஆராய்ச்சி மேம்பாட்டுத் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தொழில்நுட்பக் கல்வியில் பல்துறை கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்தும் திட்ட முன்மொழிவுக்கு மத்திய அரசு வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது. பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க