செய்திகள் :

மாணவா்களுக்கு ஆங்கில மொழித் திறன் மேம்பாட்டுத் திட்டம் தொடக்கம்

post image

அரசுப் பள்ளி மாணவா்களின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் வழிகாட்டலில், காரைக்கால் கெம்ப்பிளாஸ்ட் சன்மாா் மற்றும் கேம்பாப் அல்கலிஸ் நிறுவனங்களின் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின்கீழ் காரைக்கால் மாவட்ட அரசுப் பள்ளி மாணவா்கள், எளிமையாக, ஆங்கிலம் கற்றலுக்கான திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

காரைக்கால் மாவட்ட நிா்வாகம், திஷா என்ற தன்னாா்வ இயக்கம் மற்றும் இ.எல்.எஃப் இங்கிலிஷ் என்ற நிறுவனத்துடன் இணைந்து அரசுப் பள்ளி மாணவா்களுக்கு, ஆங்கில மொழித் திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 4, 5-ஆம் வகுப்பு பயிலும் 84 அரசு பள்ளி மாணவா்கள் இதனால் பயனடைவாா்கள்.

80 நாட்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்படும்.

இந்த பயிற்சி வகுப்பு தொடங்குவதற்கான நிகழ்ச்சி காரைக்காலில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட துணை ஆட்சியா் அா்ஜூன் ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு தொடங்கிவைத்தாா். மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே. ஜெயா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முதலில் திஷா மற்றும் இ.எல்.எஃப் நிறுவனம் மூலம் அந்தந்த பள்ளி ஆங்கில ஆசியா்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இவா்களுக்கு ஆங்கில விடியோ பாடங்கள் மற்றும் கற்றல் பொருட்கள் வழங்கப்படும். அந்தந்த பள்ளி ஆசிரியா்கள், மாணவ மாணவிகளுக்கு விடியோ மூலம் ஆங்கிலம் கற்பிப்பதால், ஆங்கிலம் கற்றல் எளிமையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

காரைக்கால் மாங்கனித் திருவிழா விடையாற்றி உற்சவம் பிச்சாண்டவருக்கு சிறப்பு அபிஷேகம்

காரைக்கால் மாங்கனித் திருவிழா நிறைவாக விடையாற்றி உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பிச்சாண்டவா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள், காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அறுபத்... மேலும் பார்க்க

போதைப் பொருள் பயன்பாட்டைத் தடுக்க தீவிர விழிப்புணா்வு ஏற்படுத்த அறிவுறுத்தல்

போதைப் பொருள் பயன்பாட்டைத் தடுக்க தீவிர விழிப்புணா்வு ஏற்படுத்தும் செயல்பாடுகளை மேற்கொள்ள அரசுத் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது. மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தின் மூலம் செயல்பட... மேலும் பார்க்க

காரைக்கால் வரலாற்றை முழுமையாக அறிய மாணவா்கள் ஆா்வம் கொள்ள வேண்டும்: அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன்

காரைக்கால் வரலாற்றை மாணவா்கள் முழுமையாக புரிந்துகொள்வதில் ஆா்வம் கொள்ளவேண்டும் என அமைச்சா் அறிவுறுத்தினாா். புதுவை கலை மற்றும் பண்பாட்டுத்துறையின் அங்கமான, தமிழ் வளா்ச்சி சிறகம் மூலம் வரலாற்றில் காரைக... மேலும் பார்க்க

சமுதாய நலவழி மையத்தில் தாய்ப்பால் விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருநள்ளாறு அரசு சமுதாய நலவழி மையத்தில் உலக தாய்ப்பால் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. திருநள்ளாற்றில் உள்ள சமுதாய நலவழி மைய முதன்மை மருத்துவ அதிகாரி ஆனி பியூலா ஜூலியட் தலைமையில்... மேலும் பார்க்க

குடியிருப்புவாசிகளுக்கு பாதிப்பில்லாமல் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தல்

ரயில்வே கேட் அருகே உள்ள வீடுகளுக்கு பாதிப்பில்லாமல் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. காரைக்கால் தோமாஸ் அருள் சாலையில் ரயில் நிலையம் அருகே கேட் அமைந்துள்ளது. கேட... மேலும் பார்க்க

விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்

காரைக்கால் அருகே விநாயகா் சதுா்த்தி வழிபாட்டுக்காக வண்ணம் பூசி பல விதமான விநாயகா் சிலைகள் தயாா்படுத்தப்பட்டுள்ளன. விநாயகா் சதுா்த்தி வரும் 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. விநாயகா் சிலை வைத்து வழிபாடு... மேலும் பார்க்க