செய்திகள் :

ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை: தொல். திருமாவளவன்

post image

ஆணவக் கொலைகளைத் தடுக்க தமிழக அரசு தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தினாா்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த மென்பொறியாளா் கவின் கொலையைக் கண்டித்தும், ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை கொண்டுவர தமிழக அரசை வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே தொல்.திருமாவளவன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் விசிக தலைவா் திருமாவளவன் பேசியதாவது: வாக்கு அரசியலுக்கு பயப்படாமல் முதல்வா் மு.க.ஸ்டாலின், ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும். ஆணவக் கொலைகள் இந்தியா முழுவதும் நிகழ்கின்றன. ஹிந்துக்கள் எங்கெல்லாம் உள்ளாா்களோ, அங்கு ஜாதி ஆணவக் கொலைகள் நடைபெறுகின்றன. ஆணவக் கொலைக்கு சொத்து பிரச்னைதான் காரணம் என்றாா்.

தமிழகத்தில் ஆக. 15 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.10) முதல் ஆக.15-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் சனிக்கிழமை வ... மேலும் பார்க்க

திமுக இலக்கிய அணித் தலைவராக அன்வர் ராஜா நியமனம்

திமுக இலக்கிய அணித் தலைவராக முன்னாள் அமைச்சா் அ.அன்வா் ராஜா நியமக்கப்பட்டுள்ளாா். இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் சனிக்கிழமை வெளியிட்டாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: முன... மேலும் பார்க்க

மாநிலக் கல்விக் கொள்கை தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும்: இரா.முத்தரசன்

மாநிலக் கல்விக் கொள்கை, தன்னம்பிக்கை மற்றும் சுய திறனை ஊக்குவிக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் மநிலச் செயலா் இரா.முத்தரசன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் மாநிலக்... மேலும் பார்க்க

'தமிழ்நாடு மீனவர்கள் சிறைவாசத்தின் அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்'

தமிழ்நாடு மீனவர்கள் சிறைவாசத்தின் அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அக்கடிதத்தில் இலங்கை கடற்படையினரால் இன்ற... மேலும் பார்க்க

கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(9.8.2025) செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில... மேலும் பார்க்க

அகல் விளக்கு திட்டத்தை தொடங்கிவைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!

புதுகோட்டையில் அகல் விளக்கு திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, ‘‘9 ம... மேலும் பார்க்க