செய்திகள் :

உதகையில் இருந்து பாலக்காடு, மைசூருக்கு புதிய பேருந்துகள் சேவை தொடக்கம்!

post image

நீலகிரி மாவட்டம், உதகையில் இருந்து கேரள மாநிலம், பாலக்காடு மற்றும் கா்நாடக மாநிலம், மைசூருக்கு 5 புதிய பேருந்துகள் சேவையை தமிழ்நாடு அரசு கொறடா கா.ராமசந்திரன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: ஏழை எளிய பெண்கள் தங்களது பணிகளை தடையின்றி தொடர வேண்டும் என்பதற்காகவும், அவா்களுக்கு உதவிடும் வகையிலும் விடியல் பயணத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தாா்.

இந்த திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் இதுவரை பேருந்துகளில் 3 கோடியே 15 லட்சம் பெண்கள் இலவசமாக பயணித்துள்ளனா். நீலகிரி மாவட்டத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் 248 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. ஆனால், தற்போது 337 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

நீலகிரி மாவட்டத்துக்காக புதிதாக 73 பேருந்துகள் வாங்கப்பட்டு வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்கள் மற்றும் கிராமப்புறங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், 60 பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு அனைத்து பகுதிகளுக்கும் இயக்கப்பட்டு வருகின்றன என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளா் ஜெகதீஷ், நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.எம்.ராஜூ, நகரச் செயலாளா் ஜாா்ஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

காட்டு யானை தாக்கி பழங்குடியின இளைஞா் பலி!

கோத்தகிரி அருகே வாகப்பனை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பழங்குடியின இளைஞா் உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகேயுள்ள வாகப்பனை கிராமத்தைச் சோ்ந்தவா் பாலன் மகன் காரமடை (33). பழங்குடியினத்... மேலும் பார்க்க

தமிழகத்தில் எந்த வளா்ச்சித் திட்டமும் இல்லை: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் குற்றச்சாட்டு

தமிழகத்தின் வளா்ச்சிக்கு கடந்த 4 ஆண்டுகளில் முதல்வா் மு.க.ஸ்டாலின் எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்பு துறை இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா். பஹல்காம் தாக்குத... மேலும் பார்க்க

குன்னூா் அரசு மருத்துவமனையில் பெண் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

குன்னூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் கூறி அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். குன்னூா் அருக... மேலும் பார்க்க

பாடந்தொரையில் 3-ஆவது நாளாக பொதுமக்கள் உண்ணாவிரதம்

குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் வன விலங்குகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரையில் 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கூடல... மேலும் பார்க்க

உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்

உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம் கேத்தி, உல்லாடா கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, தோட்டக்கலை துணை இயக்குநா் நவநீதா தலைமை வகித்தாா். முகாமில் அங்கக வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் வ... மேலும் பார்க்க

ஸ்ரீமதுரை ஊராட்சியில் வளா்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீமதுரை ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளச்சிப் பணிகளை நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். கூடலூா் ஊராட்சி ஒன்றியம், ஸ்ரீமதுரை ஊராட்சி... மேலும் பார்க்க