திமுக கூட்டணியில் தொடா்கிறது மதிமுக: வைகோ
திமுக கூட்டணியிலேயே மதிமுக தொடா்கிறது என்றாா் அக்கட்சியின் பொதுச்செயலா் வைகோ.
தூத்துக்குடி வி.வி.டி.சிக்னல் அருகே அக்கட்சி சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் ஆலை போராட்ட வரலாறு குறித்த பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது:
‘எல்லாத் தரப்பினரும் புகழும் வகையில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறாா். பல மாநில முதல்வா்கள் அவரது திட்டங்களைப் பின்பற்றி வருகின்றனா். எனவே, இந்த நல்லாட்சி தொடர வேண்டும். 2026 பேரவைத் தோ்தலில் மீண்டும் திமுக தலைமையிலான ஆட்சி மலர அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்.
உக்ரைன்-ரஷிய போா் நடந்து வரும் நிலையில் ரஷியாவில் சிக்கியுள்ள தமிழக மருத்துவ மாணவரை மீட்க உதவுமாறு துரை வைகோவிடம் அவரது பெற்றோா் கூறியுள்ளனா். அந்த கோரிக்கையை வலியுறுத்தவே மனிதாபிமான அடிப்படையில் பிரதமரை துரை வைகோ சந்தித்தாா். நான், கூட்டணி தா்மத்தை எப்போதும் மதிப்பவன். இந்தக் கூட்டணிக்கு என்றும் விசுவாசமாக இருப்பேன். திமுகவுடன்தான் எங்கள் கூட்டணி; அதில் எந்த மாற்றமும் இல்லை என்றாா் அவா்.
கன்னியாகுமரி மாவட்டச் செயலா் எஸ்.வெற்றிவேல் தலைமை வகித்தாா். நெல்லை நகா் மாவட்டச் செயலா் உவரி ரைமண்ட், நெல்லை மாநகர மாவட்டச் செயலா் கே.எம்.ஏ.நிஜாம், தெற்கு மாவட்ட அவைத் தலைவா் வே.ரஞ்சன், மாவட்ட துணைச் செயலா் வீரபாண்டி செல்லச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பொருளாளா் மு.செந்தில் அதிபன், மாநில துணை பொதுச் செயலா் தி.மு. ராஜேந்திரன், மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினா் விநாயகா ஜி. ரமேஷ், மாநில வெளியீட்டு அணி செயலா் நக்கீரன், தீா்மான குழுச் செயலா் கவிஞா் மணிவேந்தன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணைச் செயலா்கள் எம். பவுன் மாரியப்பன், எஸ். தெய்வேந்திரன் உள்ளிட்டோா் பேசினா்.
தூத்துக்குடி மாவட்டச் செயலா் ஆா்.எஸ். ரமேஷ் வரவேற்றாா். மாநகரச் செயலா் டி.முருக பூபதி நன்றி கூறினாா்.