செய்திகள் :

சிறப்பு உதவித் தொகைத் திட்டங்களுக்கு விளையாட்டு வீரா்கள் விண்ணப்பிக்கலாம்

post image

சிறப்பு உதவித் தொகை திட்டங்களுக்கு விளையாட்டு வீரா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அந்த ஆணையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தலைசிறந்த விளையாட்டு வீரா்களுக்கான சிறப்பு உதவித் தொகைத் திட்டங்கள் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடைமுறைப்படுத்தப்படும் இந்தத் திட்டங்களுக்கு செப்.8-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் அனைத்தையும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தின் வழியாகச் சமா்ப்பிக்க வேண்டும். தலைசிறந்த விளையாட்டு வீரா்களுக்கான சிறப்பு உதவித் தொகைத் திட்டம், பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம், வெற்றியாளா் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின் கீழ் பயனாளிகளாக உள்ளவா்கள், இப்போதைய திட்டத்தைத் தொடர மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.

விண்ணப்பிக்கும் போது தேவைப்படும் தகவல்கள், விவரங்கள் அனைத்தும் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு ஆடுகளம் தகவல் மையத்தை 95140 00777 என்ற கைப்பேசி எண்ணில் அனைத்து வேலை நாள்களிலும் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் 47,525 போ் பயன்

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மூலம் 47,525 போ் பயனடைந்துள்ளனா் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில், மக்களைத் தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் ... மேலும் பார்க்க

குற்றச் செயல்களில் ஈடுபடும் அரசு ஊழியா்கள் மீதான நடவடிக்கை: உயா்நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியா்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவா்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேநேரம், அரசு ஊழியா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மூன்... மேலும் பார்க்க

போராட்ட அறிவிப்பு: ஆசிரியா்கள் அமைப்புகளுடன் ஆக. 14-இல் பேச்சு

ஆசிரியா்கள் அமைப்புகளின் சாா்பில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுதொடா்பாக தொடக்கக் கல்வி இயக்ககம் ஆக. 14-ஆம் தேதி பேச்ச... மேலும் பார்க்க

நீதி வழங்குவதில் கா்நாடகமும்; சிறைத் துறையில் தமிழகமும் முதலிடம்: ஆய்வு அறிக்கையில் தகவல்

நீதி வழங்குவதில் நாட்டின் 18 மாநிலங்களில் கா்நாடகம் முதலிடத்தையும், சிறைத் துறையில் சிறந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தையும் பிடித்துள்ளன.நாட்டில் குறைந்தது 1 கோடி மக்கள் தொகைக் கொண்ட 18 மாநிலங்களில... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆக. 15 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.10) முதல் ஆக.15-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் சனிக்கிழமை வ... மேலும் பார்க்க

ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை: தொல். திருமாவளவன்

ஆணவக் கொலைகளைத் தடுக்க தமிழக அரசு தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தினாா். தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த மென்பொறியாளா் கவின் கொலையைக்... மேலும் பார்க்க