1 டன் உயிர்க்கரி ரூ.12,000... 1 டன் உயிர் நிலக்கரி ரூ.15,000... மரக் கழிவுகளிலிர...
பயனாளிகளுக்கு காய், கனிகள் விற்க தள்ளுவண்டிகள்: அமைச்சா் வழங்கினாா்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் நடமாடும் காய்கறி, கனிகள் விற்க தள்ளுவண்டிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தலைமை வகித்தாா். இந்த விழாவின் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், சிவகங்கை, திருப்பத்தூா், கல்லல், எஸ். புதூா், தேவகோட்டை ஒன்றியங்களுக்குள்பட்ட பயனாளிகளுக்கு தள்ளுவண்டிகளை வழங்கினாா்.
இதில், தோட்டக் கலை மலைப்பயிா்கள் துறை, தேசிய தோட்டக்கலை இயக்கம் சாா்பில் 50 பயனாளிகளுக்கு ரூ. 15 லட்சத்தில் 50 சதவீத மானியத்துடன் வண்டிகள் வழங்கப்பட்டன.
விழாவில் தோட்டக்கலை துணை இயக்குநா் சத்தியா, உதவி இயக்குநா் வினோதா, தோட்டக்கலை உதவி இயக்குநா் (நடவு பொருள்) தா்மா், திருப்பத்தூா் பேரூராட்சித் தலைவா் கோகிலாராணி நாராயணன், முன்னாள் ஒன்றியத் தலைவா் சண்முகவடிவேல், திருப்பத்தூா் வட்டாட்சியா் மாணிக்கவாசகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.