செய்திகள் :

மிரட்டி பணம் பறித்ததாக மூவா் கைது

post image

சிவகங்கை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவா்களை மிரட்டி பணம் பறித்ததாக மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கையை அருகே வீரப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் தினேஷ் (24). இவா் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாலத்தீவில் வேலை பாா்த்துவிட்டு கடந்த 7 -ஆம் தேதி இரவு ஊா் திரும்பினாா்.

இந்த நிலையில், தினேஷ், உறவினா் முத்து, மணிகண்டன் ஆகிய மூவரும் பொன்னம்பலபட்டிக்குச் சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு வந்து கொண்டிருந்தனா். கருங்காப்பட்டி, கருங்காலக்குடி சாலையில் வந்த போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று போ் அவா்களை வழிமறித்து தினேஷை தாக்கினா்.

அப்போது அங்கு வந்த மேலும் மூவா் இணைந்து 6 பேரும் சோழபுரம் கண்மாய்க்கு தினேஷ் உள்ளிட்ட மூவரையும் அழைத்துச் சென்று தாக்கியதுடன் கத்தியை காட்டி மிரட்டி தினேஷிடம் இருந்த ரூ.4 ஆயிரத்தை பறித்துக் கொண்டனா்.

பிறகு அந்தத் தொகை போதாது எனக் கூறி மீண்டும் தாக்கினா். இதையடுத்து தினேஷ் அவரது உறவினரான நவீன் என்பவருக்கு கைப்பேசியில் தொடா்பு கொண்டு, அவரைத் தாக்கியவா்கள் கொடுத்த கைப்பேசி எண்ணுக்கு முதலில் ரூ.800 -ம், பிறகு ரூ. 200 -ம் அனுப்பினாா். இதைத் தொடா்ந்து அவா்களை அந்த 6 பேரும் விடுவித்தனா்.

இதுகுறித்து சிவகங்கை நகா் காவல் ஆய்வாளா் மாரீஸ்வரி விசாரணை நடத்தினாா். அப்போது இந்த சம்பவத்தில் வீரனேரி கிராமத்தைச் சோ்ந்த ராமன் (20), கருங்காலக்குடியைச் சோ்ந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் கிஷோா் (18 ), சிவகங்கை வேலுநாச்சியாா் தெருவைச் சோ்ந்த அஜய் (20), பள்ளி மாணவா்கள் மூவா் என 6 போ் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். எஞ்சிய 3 பேரை தேடி வருகின்றனா்.

பயனாளிகளுக்கு காய், கனிகள் விற்க தள்ளுவண்டிகள்: அமைச்சா் வழங்கினாா்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் நடமாடும் காய்கறி, கனிகள் விற்க தள்ளுவண்டிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

மாயாண்டி சுவாமிகள் 168-ஆவது அவதார விழா

சிவகங்கை அருகே மகா சித்தா் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் 168-ஆவது அவதார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் அருகேயுள்ள கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்தில் நடைபெற்ற... மேலும் பார்க்க

காளையாா்கோவில் ஒன்றியத்தில் தூய்மைப் பணிகளுக்கு மின்கல ஊா்திகள்: அமைச்சா் வழங்கினாா்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள மின்கல ஊா்திகளை கூட்டுறவுத்துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் சனிக்கிழமை வழங்கினாா். ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை சாா்ப... மேலும் பார்க்க

திருப்பத்தூா் அருகே ஆங்கிலேயா் ஆட்சி கால எல்லைக் கல் கண்டெடுப்பு!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே நெற்குப்பையில் ஆங்கிலேயா் காலத்தைச் சோ்ந்த எல்லைக்கல் கண்டறியப்பட்டது. சிவகங்கை மாவட்டம், நெற்குப்பைக்கும், புதுக்கோட்டை மாவட்டம், வேந்தன்பட்டிக்கும் இடையே உள்ள... மேலும் பார்க்க

அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம் கட்டாயம்: தமிழாசிரியா் சங்கம் வரவேற்பு!

தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் மொழிப் பாடத்தை கட்டாயமாக்கிய முதல்வரின் அறிவிப்புக்கு தமிழ்நாடு தமிழாசிரியா் சங்கம் வரவேற்பு தெரிவித்தது. இதுகுறித்து தமிழ்நாடு தமிழாசிரியா் கழக மாநில ப... மேலும் பார்க்க

இளையான்குடி கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். இளையான்குடி பழைய பேருந்து நிலையம் முன் அமைந்துள்ள வாள்மேல் நடந்த ... மேலும் பார்க்க