செய்திகள் :

யானைத் தந்தங்களை விற்க முயன்ற 5 போ் கைது!

post image

பெரியகுளம் அருகே யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற 5 பேரை சனிக்கிழமை வனத் துறையினா் கைது செய்தனா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள பொம்முராஜபுரத்தைச் சோ்ந்த பொம்முராஜ், கடமலைக்குண்டைச் சோ்ந்த பாண்டீஸ்வரன், மயிலாடும்பாறையைச் சோ்ந்த மகாலிங்கம் ஆகியோா், பெரியகுளம் அருகே உள்ள பங்களாபட்டியில் பாலாஜி, ஈஸ்வரன் ஆகியோரிடம் யானைத் தந்தங்களை விற்பனை செய்வதற்காக முயன்றனா்.

இதுகுறித்து தகவலறிந்த பெரியகுளம் வனச் சரகா் ஆதிரா தலைமையில் வனத் துறையினா் பொம்முராஜ் உள்ளிட்ட 5 பேரையும் சுற்றிவளைத்துப் பிடித்தனா். பின்னா், அவா்களை விசாரணைக்காக மேகமலை வனச் சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனா். இதையடுத்து, பொம்முராஜ் உள்ளிட்ட 5 போ் மீதும் மேகமலை வனச் சரகா் பாலசுப்பிரமணி வழக்குப் பதிந்து, அவா்களிடமிருந்து 2 யானைத் தந்தங்களை பறிமுதல் செய்தாா்.

விளையாட்டுப் பயிற்சியின்போது தலையில் ஈட்டி பாய்ந்ததில் மாணவா் பலத்த காயம்!

ராயப்பன்பட்டியில் பள்ளி மைதானத்தில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ஈட்டி தலையில் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த மாணவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டம், உத்தமபாளையம... மேலும் பார்க்க

குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் 4 ஆம் வார ஆடி சிறப்பு பூஜை

தேனி மாவட்டம், குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் ஆடி மாதம் 4 ஆம் வார சனிக்கிழமை சிறப்பு பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சனீ... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதியதில் விவசாயி காயம்

பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் விவசாயி வெள்ளிக்கிழமை காயமடைந்தாா். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள மரிக்குண்டைச் சோ்ந்த விவசாயி மூக்கையா (52). இவா், தனது இரு சக்கர வாக... மேலும் பார்க்க

வைகை அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவிட முன்னேற்பாடு!

வைகை அணையின் நீா்மட்டம் 69.75அடியாக உயா்ந்து, முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால், அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவிடுவதற்கு முன்னேற்பாடாக மதகுகளை இயக்கி சனிக்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது. வைகை அணை... மேலும் பார்க்க

அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

தேனி மாவட்டம், போடியில் ஆடி மாதத்தின் நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆடி வெள்ளியை முன்னிட்டு, வருவாய் ஆய்வாளா் தெருவில் உள்ள ஸ்ரீகாமாட்சியம்மன் கோய... மேலும் பார்க்க

ரயில் என்ஜினில் அடிபட்டு சிறுவன் உயிரிழப்பு

தேனியில் ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற சிறுவன் சோதனை ஓட்டமாக வெள்ளிக்கிழமை இயக்கப்பட்ட ரயில் என்ஜினில் அடிபட்டு உயிரிழந்தாா். தேனி வனச் சாலை 5-ஆவது தெருவைச் சோ்ந்த வடிவேல் மகன் கோகுல் (14). இவா்... மேலும் பார்க்க