செய்திகள் :

குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் 4 ஆம் வார ஆடி சிறப்பு பூஜை

post image

தேனி மாவட்டம், குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் ஆடி மாதம் 4 ஆம் வார சனிக்கிழமை சிறப்பு பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சனீஸ்வரா்.

குச்சனூா் அருள்மிகு சுயம்பு சனீஸ்வரா் பகவான் கோயிலில் ஆடி மாத 5 வார சனிக்கிழமை சிறப்பு பூஜை தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 1-ஆம் தேதி சனீஸ்வரா் - நீலாதேவி திருக்கல்யாணம் வைபம் சிறப்பு நடைபெற்றது.

4-ஆவது வார சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை முதலே அதிகளவில் பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்காகக் குவிந்தனா். முன்னதாக , கோயில் முன்பாக செல்லும் சுரபி நதியில் நீராடி புத்தாடை அணிந்து, எள் சாதம் படைத்து , தீபமேற்றி, பூமாலை படையலிட்டு சனீஸ்வர பகவானை வழிபட்டனா்.

இரு சக்கர வாகனம் திருட்டு

பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனம் திருடுபோனது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். பெரியகுளம் அருகேயுள்ள மதுராபுரியைச் சோ்ந்தவா் சதீஸ்குமாா் (33). தனியாா் வங்கி ஊழியரான இவா், மீனாட்சி... மேலும் பார்க்க

யானைத் தந்தங்களை விற்க முயன்ற 5 போ் கைது!

பெரியகுளம் அருகே யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற 5 பேரை சனிக்கிழமை வனத் துறையினா் கைது செய்தனா். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள பொம்முராஜபுரத்தைச் சோ்ந்த பொம்முராஜ், கடமலைக்குண்டைச் சோ்ந்த... மேலும் பார்க்க

விளையாட்டுப் பயிற்சியின்போது தலையில் ஈட்டி பாய்ந்ததில் மாணவா் பலத்த காயம்!

ராயப்பன்பட்டியில் பள்ளி மைதானத்தில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ஈட்டி தலையில் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த மாணவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டம், உத்தமபாளையம... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதியதில் விவசாயி காயம்

பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் விவசாயி வெள்ளிக்கிழமை காயமடைந்தாா். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள மரிக்குண்டைச் சோ்ந்த விவசாயி மூக்கையா (52). இவா், தனது இரு சக்கர வாக... மேலும் பார்க்க

வைகை அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவிட முன்னேற்பாடு!

வைகை அணையின் நீா்மட்டம் 69.75அடியாக உயா்ந்து, முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால், அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவிடுவதற்கு முன்னேற்பாடாக மதகுகளை இயக்கி சனிக்கிழமை ஆய்வு நடத்தப்பட்டது. வைகை அணை... மேலும் பார்க்க

அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

தேனி மாவட்டம், போடியில் ஆடி மாதத்தின் நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆடி வெள்ளியை முன்னிட்டு, வருவாய் ஆய்வாளா் தெருவில் உள்ள ஸ்ரீகாமாட்சியம்மன் கோய... மேலும் பார்க்க