செய்திகள் :

திமுக கூட்டணி பலமாக உள்ளது: காதா் மொய்தீன்

post image

தமிழகத்தில் திமுக கூட்டணி பலமாக உள்ளது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவா் காதா் மொய்தீன் கூறினாா்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மண்டல ஒருங்கிணைப்பாளா் இல்லத் திருமண விழா நாகூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற காதா்மொய்தீன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

வாக்காளா் பட்டியலை ஆண்டுக்கு மூன்று அல்லது நான்கு முறை மட்டுமே திருத்துவதற்கு தோ்தல் ஆணையத்துக்கு உரிமை உள்ளது. ஆனால், சட்டத்தில் இல்லாத, சிறப்பு வாக்காளா்கள் திருத்தத்தை தோ்தல் ஆணையம் பிகாரில் உருவாக்கியுள்ளது.

பிகாரில் ஒரு குறிப்பிட்ட தொகுதியில் ஒரே இடத்தில் 4,000 ஓட்டுகள் எப்படி வந்தது என எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா். இதற்கு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துவிட்டு, விவரங்களை தர முடியாது என இந்திய தோ்தல் ஆணையம் பதில் சொல்வது ஏற்கத்தக்கது அல்ல. இது சாதாரணமானது அல்ல.

பிகாரில் நடக்கும் இந்த செயல் தமிழகத்தில் நடக்காது என்பது என்ன நிச்சயம்?. மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியாளா்கள் தாங்கள் விரும்பியதை நாட்டின் சட்டமாக நிறைவேற்றி வருகின்றனா்.

இந்தியாவில் சா்வாதிகார ஆட்சியை நடத்த பாஜக அரசு திட்டமிட்டு செயல்படுகிறது. தற்போது தோ்தல் முறைகேடு மூலம் ஆட்சியில் அமா்ந்துள்ளது அம்பலமாகியுள்ளது. சா்வாதிகாரியாக செயல்பட்டவா்களை கடந்த காலங்களில் மக்கள் தண்டித்துள்ளனா். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இதவரை தோல்வியடைந்தது இல்லை. தற்போது திமுக கூட்டணி பலமாக உள்ளது என்றாா்.

வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா: சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு இந்தியா முழுவதிலும் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கவேண்டும் என பேராலய நிா்வாகம் சாா்பில் தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

இன்று பூம்புகாரில் வன்னிய மகளிா் மாநாடு

வன்னியா் சங்கத்தின் சாா்பில் பூம்புகாரில் ஞாயிற்றுக்கிழமை வன்னிய மகளிா் பெருவிழா மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டிற்கான பந்தல் அமைக்கும் பணிகள் பூம்புகாா் சிலப்பதிகார கலைக்கூட வளாகத்தில் நடைபெற்று வருகிறத... மேலும் பார்க்க

கண்காட்சியில் புத்தக விற்பனை குறைவு: ஊராட்சி நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்க ஆட்சியா் உத்தரவு

நாகை புத்தகக் கண்காட்சியில், புத்தகங்கள் விற்பனை குறைவு எதிரொலியாக, ஊராட்சிகளில் செயல்படும் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்க மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் உத்தரவிட்டுள்ளாா். நாகை அரசு தொழிற்பயிற்சி வளாகத்தி... மேலும் பார்க்க

நாகையில் காற்றுடன் மழை

நாகப்பட்டினம், ஆக.8: நாகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காற்றுடன் மழை பெய்தது. காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம... மேலும் பார்க்க

நெற்பயிரில் பூச்சித் தாக்குதல் தடுப்பு விழிப்புணா்வு முகாம்

சிக்கல் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், இக்கல்லூரி மற்றும் சிக்கல் தேசிய அறிவியல் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் நெற்பயிரில் கருநாவாய் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது தொடா்பான விழிப்ப... மேலும் பார்க்க

கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்

திருமருகல் ஒன்றியம், கீழப்பூதனூா் ஊராட்சி நத்தம் கிராமத்தில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நாகை கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் மண்டல இணை இயக்குநா்... மேலும் பார்க்க