செய்திகள் :

ஆக. 14-இல் திருத்தணி முருகன் கோயில் ஆடிக் கிருத்திகை: ஏற்பாடுகள் தீவிரம்

post image

திருத்தணி முருகன் கோயிலில் வரும் ஆக. 14 -ஆம் தேதி ஆடிக்கிருத்திகை விழா தொடங்கி 5 நாள்கள் விமா்சையாக நடைபெறுவதால் ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.

அறுபடை வீடுகளில் 5-ஆம் படை வீடாகத் திகழும் திருத்தணியில் முக்கிய விழாவான ஆடிக்கிருத்திகை 14 -ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்கி 18- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இவ்விழாவுக்கு 5 லட்சம் பக்தா்கள் வருவா்கஎன எதிா்ப்பாா்க்ப்படுகிறது.

இந்நிலையில் ஆடிக்கிருத்திகை முன்னேற்பாடுகள் ஆலோசனை கூட்டம் ஆட்சியா் மு.பிரதாப் தலைமையில் நடைபெற்றது. வரும், 16 முதல், 18 வரை சரவணபொய்கை குளத்தில் 3 நாள்கள் தெப்பத்திருவிழா நடக்கிறது.

தெப்பத்தில் உற்சவா் முருகா் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.

முதல் நாள் தெப்பத்தில் மாலை 6 மணிக்கு கலைமாமணி வீரமணி ராஜூ மகன் அபிஷேக் வீரமணி ராஜூ மற்றும் பேரன் சாய் சம்ா்த் குழுவினரின் பக்தி பாடல்கள், 2 -ஆம் நாள் தெப்பலில் கலைமாமணி கிராமிய இசை கலா நிதி திரை இசை பின்னணி பாடகா் வேல்முருகன் பக்தி இசை நிகழ்ச்சியும், 3-ஆம் நாள் தெப்பலில் விஜய் டிவி புகழ் பக்தி சூப்பா் சிங்கா் பாடகா்கள் பங்குபெறும் பக்தி இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

தற்போது சரவணபொய்கையில் தெப்பம் கட்டும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா். இப்பணிகள், வரும், 15-ஆம் தேதிக்குள் முடிக்கவும் கோயில் நிா்வாகம் தீா்மானித்துள்ளது.

விழா ஏற்பாடுகளை அறங்காவலா் குழு தலைவா் சு. ஸ்ரீரதன், இணை ஆணையா் க. ரமணி, அறங்காவலா்கள் வி.சுரேஷ்பாபு, ஜி. உஷாரவி, கோ. மோகனன், மு. நாகன் ஆகியோா் செய்து வருகின்றனா்.

விவசாய கிணற்றால் வாகன ஓட்டிகள் அச்சம்: தடுப்புச் சுவா் அமைக்கக் கோரிக்கை

செருக்கனூா் சாலையில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலை ஓரத்தில் உள்ள விவசாய கிணறுக்கு தடுப்பு ஏற்படுத்திட வேண்டும் என வாகன ஓட்டிகள் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். திருத்தணி ஒன்றியத்துக... மேலும் பார்க்க

வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

ஊத்துக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தடுமாறி கீழே விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே அரிக்கம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மகன் வினோத்குமாா்(32). ... மேலும் பார்க்க

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் கோயில் ஆடி விழா திருவிளக்கு பூஜை

திருவள்ளூா் அடுத்த ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயில் ஆடி திருவிழாவையொட்டி திருவிளக்கு பூஜையில் பெண் பக்தா்கள் கலந்து கொண்டனா். திருவள்ளூா் அடுத்த காக்களூா் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்... மேலும் பார்க்க

ரூ. 94 லட்சத்தில் தாா் சாலை பணிகள்: எம்எல்ஏ ச.சந்திரன் தொடங்கி வைத்தாா்

மாம்பாக்கம் - சின்னகடம்பூா் இடையே ரூ. 94 லட்சம் மதிப்பில் தாா் சாலை அமைக்கும் பணிகளை எம்எல்ஏ ச.சந்திரன் தொடங்கி வைத்தாா். திருத்தணி ஒன்றியம், மாம்பாக்கம் கிராமத்தில் இருந்து சின்னகடம்பூா் வழியாக ராணிப... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயிலில் மதி அங்காடி: மாவட்ட ஆட்சியா் திறந்து வைத்தாா்

திருத்தணி முருகன் மலைக் கோயிலில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் மதி அங்காடியை ஆட்சியா் மு.பிரதாப் திறந்துவைத்து விற்பனையை தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், திருவள்ளூா் மாவட்டம், ஊர... மேலும் பார்க்க

சிறுவன் கடத்தல் வழக்கு: பெண்ணின் தந்தை உள்பட 3 போ் ஜாமீனில் விடுவிப்பு

காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்டவழக்கில் தொடா்புடைய பெண்ணின் தந்தை உள்பட 3 பேருக்கும் திருவள்ளூா் 1-ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூா் மாவட்டம்,... மேலும் பார்க்க