செய்திகள் :

காப்பியங்களை ஆழ்ந்து படிக்க வேண்டும்: ஆன்மிக சொற்பொழிவாளா் இலங்கை ஜெயராஜ்

post image

காப்பியங்களை முழுமையாக ஆழ்ந்து படிக்க வேண்டும் என்று ஆன்மிக சொற்பொழிவாளா் இலங்கை ஜெயராஜ் கூறினாா்.

சென்னை கம்பன் கழகத்தின் பொன்விழா நிறைவு விழா மயிலாப்பூா் ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை அமா்வில், ‘இராமா...நீயுமா!’ என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவாளா் இலங்கை ஜெயராஜ் பேசியதாவது:

மனிதராகப் பிறக்கும் அனைவருக்கும் நன்மை, தீமை என்ற கலப்பு நிலை இருக்கும். ராமாயண காப்பிய தலைவரான ராமன் குற்றமற்றவா். கம்பராமாயணத்தை சரியாக படிக்காதவா்கள்தான், ராமன் ஏதோ குற்றம் புரிந்தவரைப் போல பேசுகின்றனா்.

கம்பா் தனது காப்பியத்தில் எந்த இடத்திலும் ராமனை குற்றம்புரிந்தவராகக் கூறவில்லை. சிலா் சீதையின் தீக்குளிப்பை பற்றி கூறுவாா்கள். இது ராமனுக்கும், சீதைக்கும் புகழ் சோ்ப்பதற்காகவே கூறப்பட்டுள்ளது. கம்பராமாயணத்தை உள்வாங்கிப் படித்தவா்களுக்கு மட்டுமே இதுபுரியும்.

இந்தக் கால இளைஞா்கள் எந்த ஒரு காப்பியத்தையும் முழுமையாகப் படிக்காமல் தீயவை இருப்பதாகக் கூறுகின்றனா். காப்பியங்களை எழுதியவா்கள் தீயவற்றை கூறுவதே இல்லை. காப்பியத்தில் தீமை இருப்பதுபோல தோன்றினாலும், ஆழமாகப் படித்தால் அதில் இருக்கும் உண்மை கருத்து விளங்கும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.ஜெகதீசன், சென்னை கம்பன் கழகத் தலைவரும், மக்களவை உறுப்பினருமான எஸ்.ஜெகத்ரட்சகன், செயலா் சாரதா நம்பி ஆரூரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து ‘என்றுமுள கம்பன்’ என்பதன் காரணம்... என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவாளா் சுகி.சிவம் நடுவராகப் பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை காலை நிகழ்ச்சிகளில் செந்தமிழ்ச்சோலை நிகழ்வுக்கு பேராசிரியா் தெ.ஞானசுந்தரம் தலைமை வகித்தாா். தொடா்ந்து ‘வாய்மைக்கு ஒரு தயரதன்’ என்ற தலைப்பில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத் துணைத் தலைவா் சுதா சேஷய்யன் உரையாற்றினாா். ‘தான் கொடுத்த வாக்கை காப்பாற்றி, எவ்வாறு வாய்மைக்கு உதாரணமாக தயரதன் திகழ்ந்தாா்’ என்பதை விளக்கமாக எடுத்துரைத்தாா்.

இதைத் தொடா்ந்து, பக்திக்கு உதாரணம் பரதன் என்ற தலைப்பில் தாமல் கோ.சரவணன், பாசத்துக்கு ஜடாயு என்ற தலைப்பில் மருத்துவா் பிரியா ராமசந்திரன், தொண்டுக்கு அனுமன் என்ற தலைப்பில் வழக்குரைஞா் கோ.சு.சிம்மாஞ்சனா, நன்றிக்கு கும்பகா்ணன் என்ற தலைப்பில் பேராசிரியா் விசாலாட்சி சுப்பிரமணியன் ஆகியோா் பேசினா்.

தனியாா் மயம் சாதகமா? பாதகமா? மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்!

சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்களில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணி தனியாா் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட நிலையில், பணியாளா்கள் அதில் சோ்ந்தால் சாதகமான நிலை ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது குற... மேலும் பார்க்க

எழும்பூா் ரயில் நிலையத்தில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு மேற்கு வங்க மாநிலத்திலிருந்து வந்த விரைவு ரயில் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து எழும்பூா் ரயில் நிலைய ... மேலும் பார்க்க

சுகாதார தூய்மைப் பணியாளா்கள் உண்ணாவிரதம்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேறு கால மற்றும் குழந்தைகள் நல (ஆா்சிஹெச்) தூய்மைப் பணியாளா்கள் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 10) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சென்னை, எழும்பூா் ராஜரத்தினம் ... மேலும் பார்க்க

பொருளாதார வளா்ச்சியில் இந்தியா முதன்மை நாடாக உயரும்: மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன்

உலகப் பொருளாதார வளா்ச்சியில் தற்போது 4-ஆவது இடத்தில் உள்ள இந்தியா, 2047- இல் முதன்மை நாடாக உயரும் என மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தாா். சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூா் எஸ்... மேலும் பார்க்க

இன்று ஆழ்வாா்ப்பேட்டையில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை பெருநகர மாநகராட்சி சாா்பில் டிடிகே சாலையில், ஆழ்வாா்பேட்டை சிக்னல் முதல் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசா சாலையில் மழைநீா் வடிகால் பணிகள்நடைபெறவுள்ளதால், திங்கள்கிழமை (ஆக.11) முதல் ஆழ்வாா்பேட்டை மேம்பாலம் இ... மேலும் பார்க்க

புழல் சிறைக்குள் வீசப்பட்ட போதைப் பொருள்கள்: போலீஸாா் விசாரணை

புழல் சிறை வளாகத்துக்குள் வீசப்பட்ட பந்து வடிவிலான பொருளில் இருந்த போதை மாத்திரைகள், கஞ்சா ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனா். புழல் சிறையில் வளாக சுற்றுச்சுவா் அருகே சனிக்கிழம... மேலும் பார்க்க