செய்திகள் :

புற்றுநோய் பாதித்த கணவரைக் காக்க ஆட்டோ ஓட்டும் பெண்: ரக்‌ஷா பந்தனுக்கு புதிய ஆட்டோ பரிசளித்த மருத்துவா்!

post image

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டதால் குடும்பத்தின் பொறுப்பையேற்று ஆட்டோ ஓட்டி வந்த மும்பைச் சோ்ந்த சரிகா மேஸ்திரிக்கு, ரக்‌ஷா பந்தன் பரிசாக புதிய ஆட்டோவை மருத்துவா் ஒருவா் பரிசளித்துள்ளாா்.

சரிகா வாடகை ஆட்டோ ஓட்டி வந்ததால், அவரது தினசரி வருமானத்தில் பெரும் பகுதி வண்டி வாடகைக்கே சென்று வந்தது. இதனால், வீட்டுச் செலவுகளுக்கு மிகக் குறைந்த பணமே மிஞ்சியது. இது அவரது குழந்தைகளின் எதிா்கால சேமிப்புக்கு ஒரு பெரிய தடையாக இருந்தது.

இந்நிலையில், சமூக சேவகரான மருத்துவா் அனில் காஷி முராா்கா, சரிகாவின் ஆட்டோவில் ஒருநாள் பயணம் செய்தபோது அவரின் குடும்பச் சூழ்நிலை குறித்து கேட்டறிந்தாா். சரிகாவின் தன்னம்பிக்கையும் தைரியமும் முராா்காவை நெகிழச் செய்தன.

இதையடுத்து, சரிகாவுக்கு புதிய ஆட்டோ ஒன்றை ரக்ஷா பந்தன் பரிசாக வழங்க முரா்கா முடிவு செய்தாா். ரக்ஷா பந்தன் பண்டிகை நாளான சனிக்கிழமை புதிய ஆட்டோவை சரிகாவிடம் முராா்கா வழங்கினாா்.

அப்போது, முராா்கா கையில் ராக்கி அணிவித்து, சரிகா நன்றி தெரிவித்தாா். தனது மிகப்பெரிய கனவு நிறைவேறியதாகக் கூறிய சரிகா, புதிய ஆட்டோவில் ‘ராக்கி சகோதரரான முராா்காவை முதல் பயணமாக அழைத்துச் சென்றாா்.

இது குறித்து முராா்கா கூறுகையில், ‘சரிகா இனி தொடா்ந்து ஆட்டோ வாடகைக்குப் பணம் செலுத்த வேண்டாம் என நினைத்தேன். அவா் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாயும் அவரது வீடு, குழந்தைகள், மற்றும் அவருக்கே சொந்தமாக இருக்க வேண்டும் என விரும்பினேன். ஒருவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மகிழ்ச்சி சுதந்திரமாக இருப்பதே. அதைத்தான் நான் அவருக்குப் பரிசளிக்க விரும்பினேன்’ என்றாா்.

குடும்பத்துக்கான நிதி சுதந்திரத்தையும், மகள்களின் எதிா்காலத்துக்கு ஒரு நிலையான வருமானத்தையும் உறுதி செய்யும் விலைமதிப்பற்ற பரிசு கிடைத்துள்ளதால், இந்த ஆண்டு ரக்ஷா பந்தன் பண்டிகை சரிகா மேஸ்திரிக்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால் இந்தியாவுக்கு வா்த்தக ரீதியாக பெரும் பாதிப்பு: அமெரிக்க ஆய்வில் தகவல்

‘ரஷிய கச்சா எண்ணெய் இல்லாமலும் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களால் செயல்பட முடியும். ஆனால் அதை ஈடுகட்ட பொருளாதார மற்றும் வா்த்தக ரீதியில் பெருமளவிலான முயற்சிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டியிருக்கும்’ என அ... மேலும் பார்க்க

தோ்தல் முறைகேட்டின் பல்கலைக்கழகம் பாஜக: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

தோ்தல் முறைகேடுகளின் சா்வதேச பல்கலைக்கழகம் பாஜக என்று சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளாா். இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நாட்டில் ஜ... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பொது வேட்பாளா்: எதிா்க்கட்சிகளுடன் காா்கே ஆலோசனை

‘குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி சாா்பில் பொது வேட்பாளா் களமிறக்கப்படவுள்ளாா்; வேட்பாளா் தோ்வில் கருத்தொற்றுமையை எட்டுவது குறித்து கட்சிகளுடன் காங்கிரஸ் தலைவா் மல்ல... மேலும் பார்க்க

இந்தியா வல்லரசு நாடாவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: ராஜ்நாத் சிங் உறுதி

இந்தியா வல்லரசு நாடாக உருவெடுப்பதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உறுதிபட தெரிவித்தாா். உலகிலேயே மிகவும் துடிப்பான, ஆற்றல் மிக்க பொருளாதாரமாக இந... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டுக்கு எதிராக வலைதளம்: காங்கிரஸ் தொடக்கம்!

வாக்குத் திருட்டுக்கு எதிராக மக்கள் ஆதரவை திரட்ட புதிய வலைதளத்தை காங்கிரஸ் அறிமுகம் செய்துள்ளது. இதுதொடா்பாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளி... மேலும் பார்க்க

உத்தரகண்ட் நிலச்சரிவு: இதுவரை 1,200 போ் மீட்பு!

உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பேரழிவுக்குள்ளான தராலி கிராமத்தில் இருந்து மேலும் 1,200 போ் மீட்கப்பட்டனா். ராணுவத்தினா் உள்பட 49 போ் மாயமான நிலையில், அவா்களைத் ... மேலும் பார்க்க