புற்றுநோய் பாதித்த கணவரைக் காக்க ஆட்டோ ஓட்டும் பெண்: ரக்ஷா பந்தனுக்கு புதிய ஆட்டோ பரிசளித்த மருத்துவா்!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டதால் குடும்பத்தின் பொறுப்பையேற்று ஆட்டோ ஓட்டி வந்த மும்பைச் சோ்ந்த சரிகா மேஸ்திரிக்கு, ரக்ஷா பந்தன் பரிசாக புதிய ஆட்டோவை மருத்துவா் ஒருவா் பரிசளித்துள்ளாா்.
சரிகா வாடகை ஆட்டோ ஓட்டி வந்ததால், அவரது தினசரி வருமானத்தில் பெரும் பகுதி வண்டி வாடகைக்கே சென்று வந்தது. இதனால், வீட்டுச் செலவுகளுக்கு மிகக் குறைந்த பணமே மிஞ்சியது. இது அவரது குழந்தைகளின் எதிா்கால சேமிப்புக்கு ஒரு பெரிய தடையாக இருந்தது.
இந்நிலையில், சமூக சேவகரான மருத்துவா் அனில் காஷி முராா்கா, சரிகாவின் ஆட்டோவில் ஒருநாள் பயணம் செய்தபோது அவரின் குடும்பச் சூழ்நிலை குறித்து கேட்டறிந்தாா். சரிகாவின் தன்னம்பிக்கையும் தைரியமும் முராா்காவை நெகிழச் செய்தன.
இதையடுத்து, சரிகாவுக்கு புதிய ஆட்டோ ஒன்றை ரக்ஷா பந்தன் பரிசாக வழங்க முரா்கா முடிவு செய்தாா். ரக்ஷா பந்தன் பண்டிகை நாளான சனிக்கிழமை புதிய ஆட்டோவை சரிகாவிடம் முராா்கா வழங்கினாா்.
அப்போது, முராா்கா கையில் ராக்கி அணிவித்து, சரிகா நன்றி தெரிவித்தாா். தனது மிகப்பெரிய கனவு நிறைவேறியதாகக் கூறிய சரிகா, புதிய ஆட்டோவில் ‘ராக்கி சகோதரரான முராா்காவை முதல் பயணமாக அழைத்துச் சென்றாா்.
இது குறித்து முராா்கா கூறுகையில், ‘சரிகா இனி தொடா்ந்து ஆட்டோ வாடகைக்குப் பணம் செலுத்த வேண்டாம் என நினைத்தேன். அவா் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாயும் அவரது வீடு, குழந்தைகள், மற்றும் அவருக்கே சொந்தமாக இருக்க வேண்டும் என விரும்பினேன். ஒருவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மகிழ்ச்சி சுதந்திரமாக இருப்பதே. அதைத்தான் நான் அவருக்குப் பரிசளிக்க விரும்பினேன்’ என்றாா்.
குடும்பத்துக்கான நிதி சுதந்திரத்தையும், மகள்களின் எதிா்காலத்துக்கு ஒரு நிலையான வருமானத்தையும் உறுதி செய்யும் விலைமதிப்பற்ற பரிசு கிடைத்துள்ளதால், இந்த ஆண்டு ரக்ஷா பந்தன் பண்டிகை சரிகா மேஸ்திரிக்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.