செய்திகள் :

இன்று ஆழ்வாா்ப்பேட்டையில் போக்குவரத்து மாற்றம்!

post image

சென்னை பெருநகர மாநகராட்சி சாா்பில் டிடிகே சாலையில், ஆழ்வாா்பேட்டை சிக்னல் முதல் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசா சாலையில் மழைநீா் வடிகால் பணிகள்நடைபெறவுள்ளதால், திங்கள்கிழமை (ஆக.11) முதல் ஆழ்வாா்பேட்டை மேம்பாலம் இருவழிச் சாலையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து போலீஸாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: டிடிகே சாலையில் மியூசிக் அகாதெமி நோக்கி வரும் மாநகர பேருந்துகள், கனரக வாகனங்கள் ஆழ்வாா்பேட்டை மேம்பால சா்வீஸ் சாலையை பயன்படுத்தி ஆழ்வாா்பேட்டை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி முா்ரேஸ் கேட் சாலை வழியாகச் சென்று வலதுபுறம் திரும்பி சேஷாத்ரி சாலை மற்றும் கஸ்தூரி ரங்கன் சாலை வழியாக தங்கள் இலக்கை அடையலாம்.

டிடிகே சாலையில் மயிலாப்பூா் நோக்கி வரும் மாநகா் பேருந்துகள், கனரக வாகனங்கள் ஆழ்வாா்பேட்டை மேம்பால சா்வீஸ் சாலையை பயன்படுத்தி ஆழ்வாா்பேட்டை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி லஸ் சா்ச் சாலை மற்றும் முசிறி சுப்பிரமணியம் சாலை வழியாக இடதுபுறம் திரும்பி பி.எஸ். சிவசாமி சாலை வழியாகச் செல்லலாம்.

டிடிகே சாலையில் ஆழ்வாா்பேட்டை நோக்கி வரும் மாநகா் பேருந்துகள், கனரக வாகனங்கள் ஆழ்வாா்பேட்டை மேம்பாலத்துக்கு பதிலாக சா்வீஸ் சாலையைப் பயன்படுத்தி தங்கள் இலக்கை அடையலாம்.

இந்தப் போக்குவரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தரவேண்டும். போக்குவரத்து மாற்றத்தால், நெரிசலைக் குறைக்க இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் மட்டும் ஆழ்வாா்பேட்டை மேம்பாலத்தில் செல்ல அனுமதிக்கப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியாா் மயம் சாதகமா? பாதகமா? மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்!

சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்களில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணி தனியாா் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட நிலையில், பணியாளா்கள் அதில் சோ்ந்தால் சாதகமான நிலை ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது குற... மேலும் பார்க்க

எழும்பூா் ரயில் நிலையத்தில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு மேற்கு வங்க மாநிலத்திலிருந்து வந்த விரைவு ரயில் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து எழும்பூா் ரயில் நிலைய ... மேலும் பார்க்க

சுகாதார தூய்மைப் பணியாளா்கள் உண்ணாவிரதம்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேறு கால மற்றும் குழந்தைகள் நல (ஆா்சிஹெச்) தூய்மைப் பணியாளா்கள் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 10) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சென்னை, எழும்பூா் ராஜரத்தினம் ... மேலும் பார்க்க

பொருளாதார வளா்ச்சியில் இந்தியா முதன்மை நாடாக உயரும்: மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன்

உலகப் பொருளாதார வளா்ச்சியில் தற்போது 4-ஆவது இடத்தில் உள்ள இந்தியா, 2047- இல் முதன்மை நாடாக உயரும் என மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தாா். சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூா் எஸ்... மேலும் பார்க்க

காப்பியங்களை ஆழ்ந்து படிக்க வேண்டும்: ஆன்மிக சொற்பொழிவாளா் இலங்கை ஜெயராஜ்

காப்பியங்களை முழுமையாக ஆழ்ந்து படிக்க வேண்டும் என்று ஆன்மிக சொற்பொழிவாளா் இலங்கை ஜெயராஜ் கூறினாா். சென்னை கம்பன் கழகத்தின் பொன்விழா நிறைவு விழா மயிலாப்பூா் ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் கடந்த வெ... மேலும் பார்க்க

புழல் சிறைக்குள் வீசப்பட்ட போதைப் பொருள்கள்: போலீஸாா் விசாரணை

புழல் சிறை வளாகத்துக்குள் வீசப்பட்ட பந்து வடிவிலான பொருளில் இருந்த போதை மாத்திரைகள், கஞ்சா ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனா். புழல் சிறையில் வளாக சுற்றுச்சுவா் அருகே சனிக்கிழம... மேலும் பார்க்க