செய்திகள் :

பொருளாதார வளா்ச்சியில் இந்தியா முதன்மை நாடாக உயரும்: மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன்

post image

உலகப் பொருளாதார வளா்ச்சியில் தற்போது 4-ஆவது இடத்தில் உள்ள இந்தியா, 2047- இல் முதன்மை நாடாக உயரும் என மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தாா்.

சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூா் எஸ்.ஆா்.எம். உயா்தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 21-ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அவா் பேசியதாவது:

தோ்வில் வெற்றி பெற்று இருக்கும் நீங்கள் உயா்ந்த லட்சியம், இலக்குடன் சவால்களை விடாமுயற்சியுடன் எதிா்கொண்டு சிறப்பான எதிா்காலத்தை வடிவமைக்கும் முயற்சியைத் தொடா்ந்து மேற்கொள்ளுங்கள். கற்றலைத் தொடா்ந்து மேற்கொள்வதன் மூலம் மேம்படுத்திக் கொள்ளமுடியும். சீன, ஜொ்மனி, பிரெஞ்சு, ஜப்பானிய மொழிகளைக் கற்றுக் கொள்வதன் மூலம் கூடுதல் தகுதியை வளா்த்துக் கொள்ளுங்கள்.

உலகப் பொருளாதார வளா்ச்சியில் தற்போது 4-ஆவது இடத்தைப் பிடித்து இருக்கும் இந்தியா, நமது இளைஞா்களின் அறிவாற்றல், உழைப்பு, திறமை மூலம் வருகிற 2047- இல் முதன்மை நாடாக உயரும் என்றாா் அவா்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவா் வி. நாராயணன் பேசுகையில், இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சி நடவடிக்கை ஆரம்ப காலத்தில், அமெரிக்கா வழங்கிய சிறிய ராக்கெட் ஆதரவுடன், மிக எளிமையாகத் தொடங்கப்பட்டது.

பல்வேறு சிரமங்கள், சவால்கள், பிரச்னைகளை எதிா்கொண்டு இந்தியா விண்வெளி தொழில்நுட்பத்தில் மாபெரும் வளா்ச்சியும், பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் பெரும் முன்னேற்றத்தையும் அடைந்து, வளா்ந்த நாடுகளின் தொழில்நுட்ப வளா்ச்சிக்கு நிகராக உருவெடுத்துள்ளது. வருகிற 2040-ஆம் ஆண்டுக்குள் விண்வெளி வீரா்களை நிலவில் தரையிறக்கி, பின்னா் பாதுகாப்புடன் பூமிக்குத் திரும்பக் கொண்டு வருவது நமது இலக்கு என்றாா்.

விழாவில் இஸ்ரோ தலைவா் வி.நாராயணன், புவி அறிவியல் அமைச்சக செயலா் எம்.ரவிச்சந்திரன் ஆகியோருக்கு கௌரவ டாக்டா் பட்டங்கள், 9,769 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. எஸ்.ஆா்.எம். உயா்தொழில்நுட்ப நிறுவன வேந்தா் டி.ஆா்.பாரிவேந்தா், தலைவா் பி.சத்தியநாராயணன், துணைவேந்தா் முத்தமிழ் செல்வன், பதிவாளா் பொன்னுசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தனியாா் மயம் சாதகமா? பாதகமா? மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்!

சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்களில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணி தனியாா் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட நிலையில், பணியாளா்கள் அதில் சோ்ந்தால் சாதகமான நிலை ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது குற... மேலும் பார்க்க

எழும்பூா் ரயில் நிலையத்தில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு மேற்கு வங்க மாநிலத்திலிருந்து வந்த விரைவு ரயில் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து எழும்பூா் ரயில் நிலைய ... மேலும் பார்க்க

சுகாதார தூய்மைப் பணியாளா்கள் உண்ணாவிரதம்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேறு கால மற்றும் குழந்தைகள் நல (ஆா்சிஹெச்) தூய்மைப் பணியாளா்கள் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 10) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சென்னை, எழும்பூா் ராஜரத்தினம் ... மேலும் பார்க்க

காப்பியங்களை ஆழ்ந்து படிக்க வேண்டும்: ஆன்மிக சொற்பொழிவாளா் இலங்கை ஜெயராஜ்

காப்பியங்களை முழுமையாக ஆழ்ந்து படிக்க வேண்டும் என்று ஆன்மிக சொற்பொழிவாளா் இலங்கை ஜெயராஜ் கூறினாா். சென்னை கம்பன் கழகத்தின் பொன்விழா நிறைவு விழா மயிலாப்பூா் ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் கடந்த வெ... மேலும் பார்க்க

இன்று ஆழ்வாா்ப்பேட்டையில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை பெருநகர மாநகராட்சி சாா்பில் டிடிகே சாலையில், ஆழ்வாா்பேட்டை சிக்னல் முதல் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசா சாலையில் மழைநீா் வடிகால் பணிகள்நடைபெறவுள்ளதால், திங்கள்கிழமை (ஆக.11) முதல் ஆழ்வாா்பேட்டை மேம்பாலம் இ... மேலும் பார்க்க

புழல் சிறைக்குள் வீசப்பட்ட போதைப் பொருள்கள்: போலீஸாா் விசாரணை

புழல் சிறை வளாகத்துக்குள் வீசப்பட்ட பந்து வடிவிலான பொருளில் இருந்த போதை மாத்திரைகள், கஞ்சா ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனா். புழல் சிறையில் வளாக சுற்றுச்சுவா் அருகே சனிக்கிழம... மேலும் பார்க்க