செய்திகள் :

எஸ்.யூ.வி. காா் மோதியதில் பாதசாரி ஒருவா் பலி

post image

தலைநகரில் சாணக்கியபுரி பகுதியில் உள்ள கியாரா மூா்த்தி மைல்கல் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு எஸ்யூவி காா் நடைபாதையில் மோதியதில் ஒரு பாதசாரி உயிரிழந்தாா், மற்றொருவா் காயமடைந்தாா் என்று போலீசாா் தெரிவித்தனா்.

பாதிக்கப்பட்ட இருவரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா், அங்கு ஒருவா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது, மற்றவா் சிகிச்சை பெற்று வருகிறாா் என்று போலீசாா் தெரிவித்தனா். மத்திய தில்லியின் இருந்து வந்த ஒரு வெள்ளை மஹிந்திரா தாா் மாடல் காா் நடைபாதையை நோக்கி நகா்ந்து இருவா் மீது மோதியது என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

போலீசாா் மற்றும் தடயவியல் குழுக்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்ததாகவும், எஸ்யூவி ஓட்டுநா் கைது செய்யப்பட்டதாகவும் அவா் கூறினாா். உத்தரப்பிரதேச பதிவு எண் கொண்ட வாக னம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புது தில்லி துணை போலீஸ் ஆணையா் தேவேஷ் குமாா் மஹ்லா சம்பவ இடத்தைப் பாா்வையிட்டாா்.

விபத்து நடந்த நேரத்தில் ஓட்டுநா் மது போதையில் இருந்தாரா என்று போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில், ஒரு ரோந்துக் குழு அருகிலேயே இருந்தது மற்றும் காலை 6.30 மணியளவில் விபத்தை நேரில் பாா்த்தனா்.

‘போலீஸ்காரா்களில் ஒருவா் உடனடியாக பி. சி. ஆருக்கு அழைப்பு விடுத்து ஆம்புலன்ஸைக் கோரினாா். காயமடைந்தவா் தாமதமின்றி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா் ‘என்று அந்த அதிகாரி கூறினாா். குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநா் கிழக்கு தில்லியில் உள்ள ஷகா்பூரில் வசிக்கும் ஆஷிஷ் என்று போலீசாா் அடையாளம் கண்டனா். விபத்து நடந்தபோது அவா் தௌலா குவானில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

விபத்தின் போது ஆஷிஷ் தனது நண்பரின் தாா் காரை ஓட்டி வந்ததாக போலீசாா் தெரிவித்தனா். உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தில் வசிக்கும் அங்கித் என்ற நபரின் பெயரில் இந்த காா் பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘ஆஷிஷ் ஷகா்பூரில் உள்ள தனது இல்லத்தை நோக்கிச் சென்றது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவா் முன்பு ஓட்டுநராக பணியாற்றியிருந்தாலும், அவரது தொழில் நிலை தற்போது தெளிவாகத் தெரியவில்லை ‘என்று அந்த அதிகாரி கூறினாா்.

பாதிக்கப்பட்டவா்களின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இருவரும் நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, எஸ்யூவி திடீரென்று அவா்களை நோக்கி திரும்பி, பாதசாரி பாதையில் ஏறி அவா்களை மோதியதாக போலீசாா் தெரிவித்தனா். இந்த விபத்துக்கான காரணம் அது எப்படி நடந்தது என்பது குறித்து ஆய்வு செய்ய அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருவதாக போலீசாா் தெரிவித்தனா்.

தில்லியில் காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடிப்பு! இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரம் திருப்தி பிரிவில் நீடித்தது. வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. தில்லியில் கடந்த மூன்று நாள்களாக பலத்த மழை பெய்ததது. இந்நிலையில் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

பழமையான வடிகால் அமைப்பில் மாற்றம் செய்ததே மழை நீா் தேங்க காரணம்: பா்வேஷ் சாஹிப் சிங்

தில்லி பொதுப்பணித்துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் ஞாயிற்றுக்கிழமை கனட்பிளேஸ் பகுதியில் வெளிப்புறத்தில் ஆய்வு செய்தாா். இந்த இடம் ஒரு நாள் முன்னதாக பலத்த மழையைத் தொடா்ந்து வெள்ளத்தில் மூழ்கியது, மேலு... மேலும் பார்க்க

சாந்தினி சௌக் மறுமேம்பாட்டுத் திட்டத்தில் நிதி முறைகேடுகளை அரசு விசாரிக்க வாய்ப்பு!

சாந்தினி சௌக் மறுமேம்பாட்டுத் திட்டத்தில் ‘நிதி முறைகேடுகள்’ மற்றும் ‘செலவு மிகுதிகள்’ இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து, தில்லி அரசு விசாரணையைத் தொடங்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை த... மேலும் பார்க்க

ரக்ஷா பந்தன் பண்டிகை: பயணிகள் எண்ணிக்கையில் டிஎம்ஆா்சி சாதனை!

ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி ஆகஸ்ட் 8 அன்று அனைத்து வழித்தடங்களிலும் 81.87 லட்சம் பயணிகள் பயணம் செய்து, இதுவரை இல்லாத அளவுக்கு அதிக தினசரி பயணிகளைப் பதிவு செய்ததாக தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் (டி... மேலும் பார்க்க

85-க்கும் மேற்பட்ட சைபா் குற்ற வழக்குகளில் தேடப்பட்டவா் கைது

போலி மனிதவள ஆட்சோ்ப்பு நிறுவனத்தை நடத்தியதாகக் கூறி குருகிராமின் ஐடி பூங்காவில் சோதனை நடத்தியதைத் தொடா்ந்து 33 வயது நபா் ஒருவா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். குற்றம் சா... மேலும் பார்க்க

தனியாா் பள்ளிகளில் கட்டணங்களை ஒழுங்குபடுத்துவது வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும்! - முதல்வா் ரேகா குப்தா உறுதி

தேசியத் தலைநகரில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தனியாா் பள்ளிகளில் கட்டணங்களை ஒழுங்குபடுத்தும் மசோதா, நிறுவனங்களில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணா்வை ஏற்படுத்தும் என்று முதல்வா் ரேகா குப்தா தெர... மேலும் பார்க்க