செய்திகள் :

Gaza: 5 பத்திரிகையாளர்களைக் குறி வைத்து கொன்ற இஸ்ரேல் ராணுவம்; வலுக்கும் கண்டனம்; என்ன நடந்தது?

post image

ஒவ்வொரு நாளும் இஸ்ரேல் - பாலஸ்தீனப் போரின் கொடுமைகள் மேலும் மேலும் அதிகரித்துகொண்டே இருக்கின்றன.

தற்போது இந்தப் போரில் ஐந்து பத்திரிகைளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

என்ன நடந்தது?

அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு காசாவில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு வெளியே ஊடகக் கூடாரம் உள்ளது.

அந்தக் கூடாரத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நிருபர் அனஸ் அல்-ஷரீஃப் உட்பட ஐந்து அல் ஜசீரா ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அல் ஜசீரா
அல் ஜசீரா

இஸ்ரேலின் அறிக்கையும், அல் ஜசீராவின் பதிலும்

இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹமாஸின் ஆயுதப் பிரிவின் ஒரு பிரிவை அல்-ஷரீஃப் வழிநடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் இந்த அறிக்கையை அல் ஜசீரா நிறுவனம் முற்றிலும் மறுத்துள்ளது.

யார் யார் இறந்தனர்?

இந்தத் தாக்குதலில் அனஸ் அல்-ஷரீஃப் உடன் அல் ஜசீரா நிருபர் முகமது க்ரீகே, ஒளிப்பதிவாளர்கள் இப்ராஹிம் ஜாஹர் மற்றும் மொமென் அலிவா மற்றும் அவர்களின் உதவியாளர் முகமது நௌஃபல் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவில் இஸ்ரேல் நடத்தும் அத்தனை தாக்குதலையும் வெளியிட்டு வந்தது அல் ஜசீரா பத்திரிகை நிறுவனம். அதற்குக் களத்தில் இருந்த இவர்கள்தான் முக்கிய காரணம்.

இஸ்ரேல் - பாலஸ்தீன போர்
இஸ்ரேல் - பாலஸ்தீன போர்

அச்சுறுத்தல்

காசாவில் என்ன நடக்கிறது என்பதை உலகம் தெரிந்துகொள்ள கூடாது என்றுதான் இந்தத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது என்று பெரும் கண்டனம் எழுந்து வருகிறது.

இந்தக் கொலைகள் பத்திரிகை சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

SIR: வாக்குத் திருட்டு; `தேர்தல் ஆணைய முற்றுகைப் போராட்டம்' - 300க்கும் மேற்பட்ட எம்.பிகள் பேரணி?

2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க அரசுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு ஆதாரங்களை முன்வைத்து ஊடகங்களிடம் பேசினார். மேலும், பீகாரில் நடைபெற்றுவரும் சிறப்பு வ... மேலும் பார்க்க

US Tarrif: `நண்பனாக இருப்பது உயிரைக் கொல்லும்? - அமெரிக்கா சொல்லும் பாடம்' - இரா.சிந்தன்

(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)மாநிலக்குழு உறுப்பினர், சி.பி.ஐ(எம்)கட்டுரையாளர்: இரா.சிந்... மேலும் பார்க்க

PMK: `நான் சொல்வது தான் நடக்கும்' - மகன் அன்புமணிக்கு பதிலளித்த தந்தை ராமதாஸ் - என்னப் பேசினார்?

கடந்த சில மாதங்களாகவே பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கும் அவரின் மகனும், பா.ம.க தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. அதன் நீட்சியாக இருவரும் தனித் தனிப் பொதுக்கூட்டம் நடத்துவதாக அற... மேலும் பார்க்க

SIR:``பீகார் துணை முதல்வரிடமும் 2 வாக்காளர் அடையாள அட்டைகள் இருக்கு" - தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

பீகார் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் தீவிரத் திருத்தப்பணியை மேற்கொண்டு வருகிறது. பீகாருக்குப் பிறகு மேற்கு வங்கம், தமிழ்நாடு எனத் தேர்தல் நடைபெறவிருக்கும் ஒவ்வொரு மாநி... மேலும் பார்க்க

Trump: ''தான்தான் Bossனு சிலர் நினைக்கிறாங்க" - ட்ரம்பை மறைமுகமாகச் சாடுகிறாரா ராஜ்நாத் சிங்?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது 50 சதவிகித வரியோடு அபராதத்தையும் விதித்துள்ளார். 'விவசாயிகளின் நலனுக்காக இந்த வரியை ஏற்க தயார்' என்று பிரதமர் மோடி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இன்னொரு பக்கம், இ... மேலும் பார்க்க