செய்திகள் :

SIR: வாக்குத் திருட்டு; `தேர்தல் ஆணைய முற்றுகைப் போராட்டம்' - 300க்கும் மேற்பட்ட எம்.பிகள் பேரணி?

post image

2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க அரசுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு ஆதாரங்களை முன்வைத்து ஊடகங்களிடம் பேசினார். மேலும், பீகாரில் நடைபெற்றுவரும் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தப்பணி குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்தமாக தேர்தல் ஆணையம் மீது முன்பெப்போதும் இல்லாத வகையில் பல்வேறு அதிர்ச்சிகரக் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கிறது.

அதன் அடிப்படையில், இந்தியா கூட்டணியில் இருக்கும் கட்சிகளை ஒருங்கிணைத்து, ராகுல் காந்தி பேரணி நடத்தவிருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியான நிலையில், இன்று 25 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திலிருந்து தேசிய தலைநகரில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) தலைமையகத்திற்கு பேரணியாகச் செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.

SIR-க்கு எதிராக நாடாளுமன்றத்தில் போராட்டம்
SIR-க்கு எதிராக நாடாளுமன்றத்தில் போராட்டம்

காங்கிரஸ், சமாஜ்வாடி, டி.எம்.சி, தி.மு.க, ஆம் ஆத்மி, இடதுசாரி கட்சிகள், ஆர்.ஜே.டி, என்.சி.பி (எஸ்.பி), சிவசேனா (யுபிடி) மற்றும் தேசிய மாநாடு உள்ளிட்ட பல கட்சிகள் நாடாளுமன்றத்தின் மகர் துவாரிலிருந்து காலை 11.30 மணிக்கு இந்தப் பேரணியைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்கு திருட்டு

இந்தப் பேரணியில் "வாக்கு திருட்டு" என்பதை முன்னிலைப்படுத்தவும், ஆங்கிலம், இந்தி, தமிழ், பெங்காலி, மராத்தி மொழிகளில் சுவரொட்டிகள், பதாகைகளை ஏந்திச் செல்லவும் போராட்டக்காரர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ``வாக்குத் திருட்டு என்பது ‘ஒரு மனிதன், ஒரு வாக்கு’ என்ற அடிப்படைக் கருத்து மீதான தாக்குதல். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கு ஒரு நேர்மையான வாக்காளர் பட்டியல் அவசியம். வெளிப்படையாக இருக்க வேண்டும், டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் போன்ற எங்களின் கோரிக்கைகள் தேர்தல் ஆணையத்திடம் தெளிவாக முன்வைத்திருக்கிறோம். ஜனநாயகத்தைப் பாதுகாப்பதே எங்கள் போராட்டத்தின் நோக்கம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இதற்கிடையில், பெயர் வெளியிட விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர், ``டெல்லி காவல்துறை 2 கி.மீ.க்கும் குறைவான தொலைவில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தை அடையும் இந்தப் பேரணியை அனுமதிக்க வாய்ப்பில்லை. காவல்துறையின் அனுமதிக்கான முறையான கோரிக்கை எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை" எனத் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

`ராஜினாமா செய்த தன்கர் எங்கே?; சீனா, ரஷ்யாவில்தான் இப்படி நடக்கும்’ - கேள்வி எழுப்பும் சஞ்சய் ராவத்

சமீபத்தில் துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கிய நீதிபதிக்கு எதிராக ராஜ்ய சபையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்தை துணை ஜனாதிப... மேலும் பார்க்க

US Tarrif: `நண்பனாக இருப்பது உயிரைக் கொல்லும்? - அமெரிக்கா சொல்லும் பாடம்' - இரா.சிந்தன்

(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)மாநிலக்குழு உறுப்பினர், சி.பி.ஐ(எம்)கட்டுரையாளர்: இரா.சிந்... மேலும் பார்க்க

PMK: `நான் சொல்வது தான் நடக்கும்' - மகன் அன்புமணிக்கு பதிலளித்த தந்தை ராமதாஸ் - என்னப் பேசினார்?

கடந்த சில மாதங்களாகவே பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கும் அவரின் மகனும், பா.ம.க தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. அதன் நீட்சியாக இருவரும் தனித் தனிப் பொதுக்கூட்டம் நடத்துவதாக அற... மேலும் பார்க்க

SIR:``பீகார் துணை முதல்வரிடமும் 2 வாக்காளர் அடையாள அட்டைகள் இருக்கு" - தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

பீகார் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் தீவிரத் திருத்தப்பணியை மேற்கொண்டு வருகிறது. பீகாருக்குப் பிறகு மேற்கு வங்கம், தமிழ்நாடு எனத் தேர்தல் நடைபெறவிருக்கும் ஒவ்வொரு மாநி... மேலும் பார்க்க

Gaza: 5 பத்திரிகையாளர்களைக் குறி வைத்து கொன்ற இஸ்ரேல் ராணுவம்; வலுக்கும் கண்டனம்; என்ன நடந்தது?

ஒவ்வொரு நாளும் இஸ்ரேல் - பாலஸ்தீனப் போரின் கொடுமைகள் மேலும் மேலும் அதிகரித்துகொண்டே இருக்கின்றன. தற்போது இந்தப் போரில் ஐந்து பத்திரிகைளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். என்ன நடந்தது? அல் ஜசீரா செய்தி நிறுவனத்... மேலும் பார்க்க

Trump: ''தான்தான் Bossனு சிலர் நினைக்கிறாங்க" - ட்ரம்பை மறைமுகமாகச் சாடுகிறாரா ராஜ்நாத் சிங்?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது 50 சதவிகித வரியோடு அபராதத்தையும் விதித்துள்ளார். 'விவசாயிகளின் நலனுக்காக இந்த வரியை ஏற்க தயார்' என்று பிரதமர் மோடி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இன்னொரு பக்கம், இ... மேலும் பார்க்க