செய்திகள் :

PMK: `நான் சொல்வது தான் நடக்கும்' - மகன் அன்புமணிக்கு பதிலளித்த தந்தை ராமதாஸ் - என்னப் பேசினார்?

post image

கடந்த சில மாதங்களாகவே பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கும் அவரின் மகனும், பா.ம.க தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. அதன் நீட்சியாக இருவரும் தனித் தனிப் பொதுக்கூட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.

அதில் அன்புமணி கடந்த 9-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்தி முடித்துவிட்டார். அதில், ``எங்கள் வழிகாட்டி ஐயா தான். அவருக்காக எப்போதும் இங்கு ஒரு இருக்கை தயாராக இருக்கிறது. அவர் இங்கு வருவார் என நம்புகிறேன். திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். விரைவில் பா.ம.க யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்பேன்" எனப் பேசினார்.

அன்புமணி
அன்புமணி

இதற்கு பதிலளிக்கும் விதமாக, நேற்று பூம்புகாரில் நடந்த மகளிர் மாநாட்டில் பேசிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ``கங்கை கொண்ட சோழபுரம் வந்த பிரதமர் மோடி, 'தந்தையை மிஞ்சிய தனயன் இருக்கக் கூடாது. அதற்கு உதாரணம், பெரியகோவிலும். கங்கை கொண்ட சோழபுரத்தில் இருக்கும் கோவிலும் தான்,' என்றார். இது அருமையான வார்த்தை. சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை விடுக்கிறேன். அப்படி செய்தால், தமிழகத்தில் இருக்கும் 320 சமுதாயங்களின் நிலை குறித்த தகவல்கள் வெளியாகும்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20% இடஒதுக்கீடு என் அருமை நண்பர் கருணாநிதி கொடுத்தார். 108 சமுதாயங்கள் பயன்பெற்றன. இப்போது, தந்தையை மிஞ்சிய தனயனாக நீங்கள், இந்த சாதி வாரி கணக்கெடுப்பை ஏன் எடுக்கக் கூடாது? பக்கத்து மாநிலங்கள் இந்தக் கணக்கெடுப்பை எடுத்துள்ளார்கள். உங்களுக்கு ஏன் தயக்கம்? சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, இந்த சமூக சரித்திரத்தில் இடம்பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ராமதாஸ்
ராமதாஸ்

10.5 இடஒதுக்கீட்டுக்காக தமிழகமே அதிரும் அளவுக்கு மிகப்பெரிய போராட்டம் நடத்த தயாராக இருக்கிறோம். எங்களை அந்த அளவுக்கு கொண்டு செல்லாதீர்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிக் கூட்டணியை அமைப்பேன். யார் எதை சொன்னாலும் காது கொடுத்து கேட்க வேண்டாம். நான் சொல்வது தான் நடக்கும்." என உறுதியான குரலில் பேசினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

`ராஜினாமா செய்த தன்கர் எங்கே?; சீனா, ரஷ்யாவில்தான் இப்படி நடக்கும்’ - கேள்வி எழுப்பும் சஞ்சய் ராவத்

சமீபத்தில் துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கிய நீதிபதிக்கு எதிராக ராஜ்ய சபையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்தை துணை ஜனாதிப... மேலும் பார்க்க

SIR: வாக்குத் திருட்டு; `தேர்தல் ஆணைய முற்றுகைப் போராட்டம்' - 300க்கும் மேற்பட்ட எம்.பிகள் பேரணி?

2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க அரசுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு ஆதாரங்களை முன்வைத்து ஊடகங்களிடம் பேசினார். மேலும், பீகாரில் நடைபெற்றுவரும் சிறப்பு வ... மேலும் பார்க்க

US Tarrif: `நண்பனாக இருப்பது உயிரைக் கொல்லும்? - அமெரிக்கா சொல்லும் பாடம்' - இரா.சிந்தன்

(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)மாநிலக்குழு உறுப்பினர், சி.பி.ஐ(எம்)கட்டுரையாளர்: இரா.சிந்... மேலும் பார்க்க

SIR:``பீகார் துணை முதல்வரிடமும் 2 வாக்காளர் அடையாள அட்டைகள் இருக்கு" - தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

பீகார் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் தீவிரத் திருத்தப்பணியை மேற்கொண்டு வருகிறது. பீகாருக்குப் பிறகு மேற்கு வங்கம், தமிழ்நாடு எனத் தேர்தல் நடைபெறவிருக்கும் ஒவ்வொரு மாநி... மேலும் பார்க்க

Gaza: 5 பத்திரிகையாளர்களைக் குறி வைத்து கொன்ற இஸ்ரேல் ராணுவம்; வலுக்கும் கண்டனம்; என்ன நடந்தது?

ஒவ்வொரு நாளும் இஸ்ரேல் - பாலஸ்தீனப் போரின் கொடுமைகள் மேலும் மேலும் அதிகரித்துகொண்டே இருக்கின்றன. தற்போது இந்தப் போரில் ஐந்து பத்திரிகைளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். என்ன நடந்தது? அல் ஜசீரா செய்தி நிறுவனத்... மேலும் பார்க்க

Trump: ''தான்தான் Bossனு சிலர் நினைக்கிறாங்க" - ட்ரம்பை மறைமுகமாகச் சாடுகிறாரா ராஜ்நாத் சிங்?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது 50 சதவிகித வரியோடு அபராதத்தையும் விதித்துள்ளார். 'விவசாயிகளின் நலனுக்காக இந்த வரியை ஏற்க தயார்' என்று பிரதமர் மோடி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இன்னொரு பக்கம், இ... மேலும் பார்க்க