செய்திகள் :

கோவையில் ரேஷன் கடையை அடித்து நொறுக்கிய காட்டு யானை!

post image

கோவையில், காட்டு யானையொன்று நியாய விலைக் கடையை உடைத்து சேதப்படுத்தி, அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருள்களை சூறையாடியது.

கோவை மாவட்டம் புதூர் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்து உள்ளது அறிவொளி நகர். அங்கு அரசு சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு ஆயிரக் கணக்கான மக்கள் குடியமர்த்தப்பட்டனர்.

இதை அடுத்து அப்பகுதி பொதுமக்களுக்கு உணவுப் பொருள்கள் விநியோகிப்பதற்கு அண்ணா நகர் பகுதியில் நியாய விலைக் கடை ஒன்று உள்ளது.

இந்நிலையில், அங்கு வந்த காட்டு யானை ஒன்று அந்த நியாய விலைக் கடையின் கதவை உடைத்து, பொது மக்களுக்கு விநியோகிக்க வைத்து இருந்த அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருள்களை உண்டு, சூறையாடி, சேதப்படுத்தி சென்றது.

நியாய விலைக் கடையின் கதவு உடைந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள், இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் யானையை வனப் பகுதிக்குள் விரட்டும் பணிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், அப்பகுதிக்குள் யானை வந்து உயிர் சேதத்தை ஏற்படுத்தாமல் தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அப்பகுதி பொதுமக்கள் வனத் துறையினரிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க: ஜகதீப் தன்கர் எங்கே? அமித் ஷாவுக்கு சஞ்சய் ரௌத் கடிதம்

In Coimbatore, a wild elephant broke into a fair price shop and damaged it, looting food items such as rice and lentils.

சென்னையில் முதல்முறையாக குளிர்சாதன மின்சார பேருந்து சேவை தொடக்கம்!

சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் குளிர்சாதன மின்சார பேருந்து சேவை திங்கள்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.சென்னை பெரும்பாக்கத்தில் புனரமைக்கப்பட்ட மின்சார பேருந்து பணிமனையை இன்று காலை துணை முதல்வர் ... மேலும் பார்க்க

அரசு கல்லூரிகளில் எம்.எட். சேர்க்கை: ஆக. 20 வரை விண்ணப்பிக்கலாம்!

அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். (M.Ed.) மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு இன்று (ஆக. 11) முதல் தொடங்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தகவல் தெரிவித்துள்ளார்.2025-... மேலும் பார்க்க

தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து வழக்கு: சென்னை மாநகராட்சி பதிலளிக்க அவகாசம்

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மாநகராட்சி தரப்பில் பதிலளிக்க அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின... மேலும் பார்க்க

சென்னையில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா: ஓடுதளத்தில் மற்றொரு விமானம்! திக் திக் நிமிடங்கள்.. நடந்தது என்ன?

சென்னையில் ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டபோது, ஓடுபாதையில் மற்றொரு விமானம் நின்றுகொண்டிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து தலைநகர் தில்லிக... மேலும் பார்க்க

கொலை வழக்கை முறையாக விசாரிக்காததால்.. சூலூர் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

கோவை: கொலை வழக்கை சரியாக விசாரிக்காததால் கோவை மாவட்டம் சூலூர் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து காவல்துறை டி.ஐ.ஜி. நடவடிக்கை எடுத்துள்ளார்.கொலை வழக்கை சரியாக விசாரணை மேற்கொள்ளாததால் சூலூர் காவல் ஆய்வாளர... மேலும் பார்க்க

2026 தேர்தலில் அதிமுகவின் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்துதான் தொடங்கும்: முதல்வர் ஸ்டாலின்

2026 தேர்தலில் அதிமுகவின் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்துதான் தொடங்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருப்பூர் உடுமலையில் ரூ.1,427 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்... மேலும் பார்க்க