செய்திகள் :

ஒடிசா முதல்வரின் குறை தீர்க்கும் பிரிவு வளாகத்தில் பாம்பு நுழைந்ததால் பரபரப்பு

post image

ஒடிசா முதல்வரின் குறை தீர்க்கும் பிரிவு வளாகத்தில் இருந்து பாம்பு மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புவனேஸ்வரில் உள்ள ஒடிசா முதல்வரின் குறை தீர்க்கும் பிரிவு வளாகத்தில் திங்கள்கிழமை பாம்பு ஒன்று நுழைந்தது. பாம்பு கூரையிலிருந்து விழுந்து பையின் கீழ் தஞ்சம் புகுந்தது.

இதனைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் மத்தியில் பீதி தொற்றிக்கொண்டது.

உடனே அதிகாரிகள் பாம்பு பிடிக்கும் நபரின் எண்ணைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்த பாம்பு பிடிக்கும் நபர், மஞ்சள் நிறப் பாம்பை பிடித்தார்.

இதுகுறித்து பாம்பு பிடிக்கும் நபர் சுபேந்து மல்லிக் கூறுகையில், காலை 9.25 மணிக்கு அழைப்பு வந்த பிறகு, முதல்வரின் குறை தீர்க்கும் பிரிவு வளாகத்துக்கு விரைந்து சென்று சிறிய பாம்பை மீட்டேன்.

அது ஒரு அடி மஞ்சள் நிற பாம்பு, அது காட்டில் விடப்படும் என்றார்.

பாம்பு மீட்கப்பட்டபோது பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்பட சுமார் 2,000 பேர் வளாகத்தில் இருந்தனர்.

முதல்வர் குறை தீர்க்கும் பிரிவு வளாகத்திற்கு வருகை தருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு மாற்றுத்திறனாளிகளுக்கான காத்திருப்பு அறையில் அந்த பாம்பு காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

A snake was rescued from the premises where Odisha Chief Minister Mohan Charan Majhi was hearing grievances from the public on Monday morning, an official said.

தேர்தல் ஆணையம் செல்ல எம்.பி.க்களுக்கு சுதந்திரம் இல்லை: கே.சி. வேணுகோபால்

வாக்குத் திருட்டு மற்றும் பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறைகளை எதிர்த்து தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாக சென்ற எதிர்க்கட்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு காங்கிரஸ் பொதுச் செயலர், எம்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலச்சரிவு: 9 தன்னார்வலர்கள் பலி!

பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷ்மீரில் உள்ள கில்கிட் பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த குடிநீர் கால்வாய் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 தன்னார்வலர்கள் உயிரிழந்தனர், மூன்று... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமானத்தின் கதவு திறக்கப்படாததால் ஒரு மணி நேரம் சிக்கித் தவித்த பயணிகள்!

ராய்ப்பூரில் ஏர் இந்தியா விமானத்தின் கதவு திறக்கப்படாததால் பயணிகள் ஒரு மணி நேரமாக சிக்கித் தவித்துள்ளனர். தலைநகர் தில்லியில் இருந்து ஒரு எம்.எல்.ஏ உள்பட சுமார் 160 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.15... மேலும் பார்க்க

4 நகரங்கள் டிஜிட்டல் மையங்களாக உருவாக்கப்படும்: ஒடிசா முதல்வர்!

புவனேஸ்வரைத் தவிர மேலும் நான்கு நகரங்களை டிஜிட்டல் மையங்களாக உருவாக்கப்படும் என்று ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி தெரிவித்தார்.கட்டாக், ரூர்கேலோ, சம்பல்பூர் மற்றும் பெர்ஹாம்பூருக்கு ஐடி மற்றும் மின்ன... மேலும் பார்க்க

ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது!

தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் எம்பிக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியலில... மேலும் பார்க்க

சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் தகர்ப்போம்! பாகிஸ்தான் ராணுவ தளபதி

சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால், அதனை தகர்ப்போம் என்று அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி சையத் ஆசிம் முனீர் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.மேலும், காஷ்மீரை பாகிஸ்த... மேலும் பார்க்க