செய்திகள் :

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலச்சரிவு: 9 தன்னார்வலர்கள் பலி!

post image

பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷ்மீரில் உள்ள கில்கிட் பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த குடிநீர் கால்வாய் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 தன்னார்வலர்கள் உயிரிழந்தனர், மூன்று பேர் காயமடைந்தனர்.

டான்யோர் நுல்லாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த சம்பவம் நடைபெற்றது. நீர் கால்வாயை சரிசெய்யும்போது தொழிலாளர்கள் மீது பெரிய மண் சரிந்ததில் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

குடியிருப்பாளர்களின் உதவியுடன் மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதால் உள்ளூர் மருத்துவமனைகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது. மருத்துவமனை அதிகாரிகள் 9 பேர் இறந்ததாக உறுதிப்படுத்தினர். காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

மற்றொரு சம்பவத்தில், கடந்த வெள்ளிக்கிழமை ஷிஷ்பர் பனிப்பாறையிலிருந்து பனிப்பாறை ஏரி வெடித்ததால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏற்பட்ட திடீர் வெள்ளம், பாகிஸ்தானை சீனாவுடன் இணைக்கும் காரகோரம் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியை அடித்துச் சென்றது. வெள்ளத்தால் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளது. 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.

2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஹசனாபாத் நுல்லாவில் ஏற்பட்ட மிகக் கடுமையான வெள்ளம் இது என்று கூறப்படுகிறது. அலியாபாத் அருகிலுள்ள கிராமங்களுக்கான பாசனம் மற்றும் குடிநீர் கால்வாய்களைச் சேதப்படுத்தியது. ஹன்சாவின் பெரும்பாலான மக்களுக்கான பிரதான சாலை இணைப்பைத் துண்டித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Nine volunteers were killed and three others injured when a landslide buried them during restoration of a flood-damaged water channel in Pakistan-occupied Kashmir's Gilgit region, officials said on Monday.

புத்தகம் வைத்து தேர்வெழுதும் முறை! சிபிஎஸ்இ 9ஆம் வகுப்புக்கு அறிமுகம்!!

வரும் 2026 - 27ஆம் கல்வியாண்டு முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள், தேர்வுகளின்போது புத்தகங்களை வைத்து எழுதுவதற்கான பரிந்துரைக்கு சிபிஎஸ்இ ஒப்புதல் வழங்கியிருக்கிறது.தேசிய கல்விக் கொள்கை 2020-படி, பள்ளிக் கல... மேலும் பார்க்க

தெருநாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும்: தில்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

தில்லியில் சுற்றித் திரியும் தெருநாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்க தில்லி அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும் தெரு நாய்களால் ரேபீஸ் நோயால் பாதி... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையம் செல்ல எம்.பி.க்களுக்கு சுதந்திரம் இல்லை: கே.சி. வேணுகோபால்

வாக்குத் திருட்டு மற்றும் பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறைகளை எதிர்த்து தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாக சென்ற எதிர்க்கட்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு காங்கிரஸ் பொதுச் செயலர், எம்... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமானத்தின் கதவு திறக்கப்படாததால் ஒரு மணி நேரம் சிக்கித் தவித்த பயணிகள்!

ராய்ப்பூரில் ஏர் இந்தியா விமானத்தின் கதவு திறக்கப்படாததால் பயணிகள் ஒரு மணி நேரமாக சிக்கித் தவித்துள்ளனர். தலைநகர் தில்லியில் இருந்து ஒரு எம்.எல்.ஏ உள்பட சுமார் 160 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.15... மேலும் பார்க்க

4 நகரங்கள் டிஜிட்டல் மையங்களாக உருவாக்கப்படும்: ஒடிசா முதல்வர்!

புவனேஸ்வரைத் தவிர மேலும் நான்கு நகரங்களை டிஜிட்டல் மையங்களாக உருவாக்கப்படும் என்று ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி தெரிவித்தார்.கட்டாக், ரூர்கேலோ, சம்பல்பூர் மற்றும் பெர்ஹாம்பூருக்கு ஐடி மற்றும் மின்ன... மேலும் பார்க்க

ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது!

தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் எம்பிக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியலில... மேலும் பார்க்க