செய்திகள் :

தேர்தல் ஆணையம் செல்ல எம்.பி.க்களுக்கு சுதந்திரம் இல்லை: கே.சி. வேணுகோபால்

post image

வாக்குத் திருட்டு மற்றும் பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறைகளை எதிர்த்து தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாக சென்ற எதிர்க்கட்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு காங்கிரஸ் பொதுச் செயலர், எம்.பி. வேணுகோபால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இருந்து, 25 கட்சிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள், தேர்தல் ஆணையம் நோக்கிப் பேரணியாகப் புறப்பட்டனர்.

அப்போது தில்லி காவல்துறை, தடுப்புகளை ஏற்படுத்தி அவர்களை தடுத்து நிறுத்தி, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக ராகுல் உள்ளிட்டவர்களை கைது செய்தது.

இந்த நிலையில், கே.சி. வேணுகோபால் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்திய தேர்தல் ஆணையத்தை மிக விரைவாக அணுகக் கூட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி இல்லையா என்று கேட்டுள்ளார்.

30 வினாடிகள் கூட, எங்கள் பேரணியை நடத்த காவல்துறையும் மத்திய அரசும் அனுமதிக்கவில்லை. இங்கேயே எங்களை தடுத்து நிறுத்திவிட்டார்கள். இந்த நாட்டில் ஜனநாயகம் எவ்வாறு இருக்கிறது? தேர்தல் ஆணையத்துக்கு செல்லவும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுதந்திரம் இல்லை என்று கூறியிருக்கிறார்.

தேர்தல் ஆணைய அலுவலகத்துக்குள் வெறும் 30 பேர் மட்டுமே நுழைய அனுமதி வழங்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

பேரணியாகப் புறப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்து, பேருந்துகள் மூலம் நாடாளுமன்ற சாலை காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

போராட்டத்தின்போது மயங்கி விழுந்த பெண் எம்.பி.க்கு உடனடியாக அங்கிருந்தவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். ராகுல் காந்தி, அவரை தன்னுடைய காரில் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்தார்.

முன்னதாக, மகாராஷ்டிரம், கர்நாடக மாநிலங்களில், மத்தியில் ஆளும் பாஜக அரசுடன் இணைந்து, தேர்தல் ஆணையமும் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, குற்றச்சாட்டுகளை வெளியிட்டு அதற்கான ஆதாரங்களையும் வழங்கி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

KC Venugopal alleges that MPs do not have the freedom to go to the Election Commission

இதையும் படிக்க... குழந்தை பராமரிப்பு மையத்தின் சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி! குழந்தை உடல் முழுவதும் காயம்!

பிரமாணப் பத்திரம் கொடுக்க அது என் தரவுகள் அல்ல, உங்களுடையது! ராகுல்

வாக்குத் திருட்டு விவகாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யக் கோரிய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு... மேலும் பார்க்க

தூக்கத்தில் கொன்றுவிடு! ஆபத்தான ரகசியங்களை கடத்தும் செய்யறிவு! மனித குலத்துக்கு அழிவா?

செய்யறிவு பாதுகாப்பு அம்சங்கள் 2025 என்ற தலைப்புல் நடத்தப்பட்ட ஆய்வில், செய்யறிவு மாடல்கள், யாருக்கும் தெரியாமல் மற்றொரு மாடலுக்கு ரகசிய தகவல்களை பரிமாறிக் கொள்ளும் ஆபத்து கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

புத்தகம் வைத்து தேர்வெழுதும் முறை! சிபிஎஸ்இ 9ஆம் வகுப்புக்கு அறிமுகம்!!

வரும் 2026 - 27ஆம் கல்வியாண்டு முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள், தேர்வுகளின்போது புத்தகங்களை வைத்து எழுதுவதற்கான பரிந்துரைக்கு சிபிஎஸ்இ ஒப்புதல் வழங்கியிருக்கிறது.தேசிய கல்விக் கொள்கை 2020-படி, பள்ளிக் கல... மேலும் பார்க்க

தெருநாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும்: தில்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

தில்லியில் சுற்றித் திரியும் தெருநாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்க தில்லி அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும் தெரு நாய்களால் ரேபீஸ் நோயால் பாதி... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலச்சரிவு: 9 தன்னார்வலர்கள் பலி!

பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷ்மீரில் உள்ள கில்கிட் பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த குடிநீர் கால்வாய் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 தன்னார்வலர்கள் உயிரிழந்தனர், மூன்று... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமானத்தின் கதவு திறக்கப்படாததால் ஒரு மணி நேரம் சிக்கித் தவித்த பயணிகள்!

ராய்ப்பூரில் ஏர் இந்தியா விமானத்தின் கதவு திறக்கப்படாததால் பயணிகள் ஒரு மணி நேரமாக சிக்கித் தவித்துள்ளனர். தலைநகர் தில்லியில் இருந்து ஒரு எம்.எல்.ஏ உள்பட சுமார் 160 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.15... மேலும் பார்க்க